August 19, 2026

திசை ஒன்பது – பிழைத்தல் என்பது அனிச்சை : ஜே.கே

மறுபடியும் சயந்தனிடமிருந்து ஒரு meta fiction நாவல். இளங்கோ தன் இருபதாவது வயதில், யாழ்ப்பாணத்திலிருந்து சுவிற்சலாந்து நோக்கிய தனது புலம்பெயர்வை ஆரம்பிக்கிறான். இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஆரம்பிக்கும் இப்பயணம் சுவிற்சலாந்தை சென்றடைவதற்குள் மொத்தமாகப் பதினான்கு வருடங்கள் உருண்டோடிவிடுகின்றன. இந்த இடைப்பட்ட காலம் அவனைப் போட்டு ஆட்டும் சிப்பிலி கொஞ்ச நஞ்சமல்ல. முதலில் அது தாய்லாந்திலிருந்து சுவிற்சலாந்துக்கு ஒரே விமானப் பயணத்தில் சென்று சேர்ந்துவிடலாம் என்ற கனவை விதைக்கிறது. அவனை விமானத்திலும் ஏற்றுகிறது. பின்னர் உடனேயே அவனை இறக்கி, […]
◷ 9 நிமிட வாசிப்புமுழுவதும் படிக்க →

அண்மைய எழுத்துகள்

ஆதிரை வாசிப்பு / கார்த்திக் பிரகாசம்

ஈழத்து இலக்கியங்களின் மீது பெரும் ஆர்வமும், தீராத நேசமும் எப்பொழுதும் எனக்கு உண்டு. உலகின் வேறெந்த இலக்கியத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும் அதன் மேன்மையுறு சாரத்திற்குச் சற்றும் சளைக்காத ஓர் உள்ளொளியை ஈழ இலக்கியங்களிலும் நம்மால் பொருத்திப் பார்க்க முடியும். வாசிப்புக்குள் நுழைந்த…

திசை ஒன்பது வாசிப்பு / ஏக்நாத் – தி இந்து

அகதிகளின் எல்லை வலி போருக்கு பின்னான ஈழ படைப்புகளில், யுத்தத்தின் தாக்கத்தையும் அது கொடுத்த வலிகளையும் பார்த்திருக்கிறோம். அ.முத்துலிங்கத்தின் ‘கடவுள் தொடங்கிய இடம்’ நாவலைப் போல இன்னும் சில, போலி கடவு சீட்டு மூலம் புலம்பெயர் தமிழர்கள், நாடுகளின் எல்லைகளில் எதிர்கொள்ளும்…

Sample article image

திசை ஒன்பது வாசிப்பு / ரவீந்திரன்.ப

சயந்தனின் “திசை ஒன்பது” நாவல் கவனத்தை சிதறவிடாதபடி வாசித்துத் தீர்க்க வேண்டியிருந்த நாவலாக எனக்கு இருந்தது. ஒரு செறிவான ‘நேர்கோட்டின்மை’ (non-linear) கதைசொல்லல்தான் அதற்குக் காரணம். வாசிப்பை குழப்பத்தில் நிறுத்தி, வாசகர் புத்தகத்தை மூடிவைத்துவிடாதபடி, அந்தக் கதைசொல்லல் முறையை கட்டியமைப்பதில் எழுத்தாளர்…

Sample article image

நியூயோர்க் வாழும் தமிழ்! எழுதும் மனதில் நின்றெரியும் சுடர்

2025, நவம்பர் இறுதியில் ஒருநாள். அன்று மதியம்போலதான் கொழும்புக்குப் போயிருந்தேன். திட்வா புயல் நாட்டை நாசம் செய்துகொண்டிருந்தது. ஓயாத பெருமழை. யாழ்ப்பாணத்துக்கான பயணப்பாதைகள் துண்டிக்கப்பட்டிருந்தன. கொழும்புக்கு அருகே ‘வத்தளை’ என்ற நகரில் தங்கியிருந்தேன். வெளியே நிலமையின் தீவிரம் மன உளைச்சலாக இருந்தது.…

Sample article image

திசை ஒன்பது வாசிப்பு / கபிலன் சிவபாதம்

ஒரு வெள்ளி இரவு வந்த புத்தகத்தை சனி இரவே படித்துவிட்டேன். எப்பொழுதாவது இப்படி அதிசயமாக நடப்பதுண்டு. முகநூல் காலத்திற்கு முந்தைய கற்காலத்திலிருந்தே சயந்தன் அவுஸ்திரேலியாவில் வசித்த பொழுதே அவருடன் ஒரு கருத்துக்களத்தில் சண்டைபிடித்துக்கொண்டிருந்தேன். அவரை பேசியதாகவும் பின்னொருநாளில் சொல்லியிருந்தார். எனக்கு அது…

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்.

எழுத்தாளர்கள் பார்வையில்

தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது

ஜெயமோகன்

எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

ஷோபா சக்தி

ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.

சு. வேணுகோபால்