August 19, 2026

திசை ஒன்பது – பிழைத்தல் என்பது அனிச்சை : ஜே.கே

மறுபடியும் சயந்தனிடமிருந்து ஒரு meta fiction நாவல். இளங்கோ தன் இருபதாவது வயதில், யாழ்ப்பாணத்திலிருந்து சுவிற்சலாந்து நோக்கிய தனது புலம்பெயர்வை ஆரம்பிக்கிறான். இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஆரம்பிக்கும் இப்பயணம் சுவிற்சலாந்தை சென்றடைவதற்குள் மொத்தமாகப் பதினான்கு வருடங்கள் உருண்டோடிவிடுகின்றன. இந்த இடைப்பட்ட காலம் அவனைப் போட்டு ஆட்டும் சிப்பிலி கொஞ்ச நஞ்சமல்ல. முதலில் அது தாய்லாந்திலிருந்து சுவிற்சலாந்துக்கு ஒரே விமானப் பயணத்தில் சென்று சேர்ந்துவிடலாம் என்ற கனவை விதைக்கிறது. அவனை விமானத்திலும் ஏற்றுகிறது. பின்னர் உடனேயே அவனை இறக்கி, […]
◷ 9 நிமிட வாசிப்புமுழுவதும் படிக்க →

அண்மைய எழுத்துகள்

அஷேரா – 6

6 இரவு பதினொரு மணி. சுழிபுரக் கடலை இரவு மூடியிருந்தது. அற்புதம் கடற்கரையில் உட்கார்ந்திருந்தான். வெள்ளை நுரைகள் அவனுக்குச் சற்றுத் தூரத்தில் வந்து வந்து உடைந்து அழிந்தன. ஆறுக்கெல்லாம் படகு புறப்பட்டிருக்க வேண்டும். இயந்திரத்தில் ஏதோ பழுதுபோல.. எப்படியும் சரிப் பண்ணி…

அஷேரா – 5

5 நஜிபுல்லா பிறந்த காலத்தில்தான் சோவியத் ரஷ்யாவின் படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தன. ஒரே வெற்றிக் கொண்டாட்டம். பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்த ‘நீயொரு முஜாகித் என்றால் இயந்திரத் துப்பாக்கி உன்னுடைய நண்பன். நீயொரு முஜாகித் என்றால் ஏவுகணைகள் உன்னுடைய நண்பர்கள்’ என்ற பாடலை நஜிபுல்லாவின்…

அஷேரா – 4

4 எகெரி ஏரிக் கரையோரச் சதுப்பு நிலத்திலிருந்து செங்குத்தாக மேலெழுந்த குன்றின் அப்பால் பச்சைப் புல்வெளிகளும், பள்ளத்தாக்குகளும், நீரோடைகளுமாக நிலம் விரிந்திருந்தது. அது சுவிற்சர்லாந்தின் ஆதி நிலங்களில் ஒன்று. மரச் சட்டங்களாலான வீடுகளும், செம்மறி ஆடுகள் மேயும் பண்ணைத் தோட்டங்களும் என…

அஷேரா – 3

3 நீரோடையில் சலனமே இல்லை. மழைக்காலம் என்றால் சோ என்று இரைந்துகொண்டே இருக்கும். அருகில் சமாந்தரமாக நீண்ட பாதையில் காய்ந்து முறுகிய சருகுகள் குவியலாகக் கிடந்தன. ஒவ்வொரு காலடியிலும் உடைந்து நொருங்குகிற சத்தம். அருள்குமரன் பாதையின் விளிம்பில் புற்களுக்குள் கால் பதித்து…

அஷேரா – 2

2 ‘இயக்கத்திலிருந்து இப்பொழுதுதே தப்பி ஓடுவோம்.’ என்ற எண்ணம் புகையாகி மூளைக்குள் அலைந்தது. அருள்குமரன் தகரக் கூடாரத்திலிருந்து வெளியே வந்து வரிச்சுத் தடிகளால் செய்த இருக்கையில் உட்கார்ந்தான். உள்ளே பெடியங்கள் அடித்துப் போட்டதைப்போல தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை மொட்டையப்பா விழித்திருக்கக் கூடும்.…

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்.

எழுத்தாளர்கள் பார்வையில்

தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது

ஜெயமோகன்

எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

ஷோபா சக்தி

ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.

சு. வேணுகோபால்