அண்மைய எழுத்துகள்
அஷேரா – 6
6 இரவு பதினொரு மணி. சுழிபுரக் கடலை இரவு மூடியிருந்தது. அற்புதம் கடற்கரையில் உட்கார்ந்திருந்தான். வெள்ளை நுரைகள் அவனுக்குச் சற்றுத் தூரத்தில் வந்து வந்து உடைந்து அழிந்தன. ஆறுக்கெல்லாம் படகு புறப்பட்டிருக்க வேண்டும். இயந்திரத்தில் ஏதோ பழுதுபோல.. எப்படியும் சரிப் பண்ணி…
அஷேரா – 5
5 நஜிபுல்லா பிறந்த காலத்தில்தான் சோவியத் ரஷ்யாவின் படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தன. ஒரே வெற்றிக் கொண்டாட்டம். பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்த ‘நீயொரு முஜாகித் என்றால் இயந்திரத் துப்பாக்கி உன்னுடைய நண்பன். நீயொரு முஜாகித் என்றால் ஏவுகணைகள் உன்னுடைய நண்பர்கள்’ என்ற பாடலை நஜிபுல்லாவின்…
அஷேரா – 4
4 எகெரி ஏரிக் கரையோரச் சதுப்பு நிலத்திலிருந்து செங்குத்தாக மேலெழுந்த குன்றின் அப்பால் பச்சைப் புல்வெளிகளும், பள்ளத்தாக்குகளும், நீரோடைகளுமாக நிலம் விரிந்திருந்தது. அது சுவிற்சர்லாந்தின் ஆதி நிலங்களில் ஒன்று. மரச் சட்டங்களாலான வீடுகளும், செம்மறி ஆடுகள் மேயும் பண்ணைத் தோட்டங்களும் என…
அஷேரா – 3
3 நீரோடையில் சலனமே இல்லை. மழைக்காலம் என்றால் சோ என்று இரைந்துகொண்டே இருக்கும். அருகில் சமாந்தரமாக நீண்ட பாதையில் காய்ந்து முறுகிய சருகுகள் குவியலாகக் கிடந்தன. ஒவ்வொரு காலடியிலும் உடைந்து நொருங்குகிற சத்தம். அருள்குமரன் பாதையின் விளிம்பில் புற்களுக்குள் கால் பதித்து…
அஷேரா – 2
2 ‘இயக்கத்திலிருந்து இப்பொழுதுதே தப்பி ஓடுவோம்.’ என்ற எண்ணம் புகையாகி மூளைக்குள் அலைந்தது. அருள்குமரன் தகரக் கூடாரத்திலிருந்து வெளியே வந்து வரிச்சுத் தடிகளால் செய்த இருக்கையில் உட்கார்ந்தான். உள்ளே பெடியங்கள் அடித்துப் போட்டதைப்போல தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை மொட்டையப்பா விழித்திருக்கக் கூடும்.…





