August 19, 2026

திசை ஒன்பது – பிழைத்தல் என்பது அனிச்சை : ஜே.கே

மறுபடியும் சயந்தனிடமிருந்து ஒரு meta fiction நாவல். இளங்கோ தன் இருபதாவது வயதில், யாழ்ப்பாணத்திலிருந்து சுவிற்சலாந்து நோக்கிய தனது புலம்பெயர்வை ஆரம்பிக்கிறான். இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஆரம்பிக்கும் இப்பயணம் சுவிற்சலாந்தை சென்றடைவதற்குள் மொத்தமாகப் பதினான்கு வருடங்கள் உருண்டோடிவிடுகின்றன. இந்த இடைப்பட்ட காலம் அவனைப் போட்டு ஆட்டும் சிப்பிலி கொஞ்ச நஞ்சமல்ல. முதலில் அது தாய்லாந்திலிருந்து சுவிற்சலாந்துக்கு ஒரே விமானப் பயணத்தில் சென்று சேர்ந்துவிடலாம் என்ற கனவை விதைக்கிறது. அவனை விமானத்திலும் ஏற்றுகிறது. பின்னர் உடனேயே அவனை இறக்கி, […]
◷ 9 நிமிட வாசிப்புமுழுவதும் படிக்க →

அண்மைய எழுத்துகள்

Sample article image

திசை ஒன்பது வாசிப்பு / சுரேஷ் பிரதீப்

திசை ஒன்பது ஒரு வகையில் ஆறாவடுவினை ஒத்த நாவல். ஆறாவடு நாவல் ஒரு கடும் துயரத்தில் முடியும். சயந்தன் இந்த நாவலை கரும்பகடியின் உச்சத்தில் போய் முடித்திருக்கிறார். இந்நாவலின் சிறப்பென்று நான் நினைப்பது இதன் அப்பட்டத்தன்மைதான். தலைப்பே அப்பட்டமாகத்தான் இருக்கிறது. எந்த…

Sample article image

திசை ஒன்பது வாசிப்பு / சுரேந்தர்

போராட்டங்கள் வலுப்பெற்றிருந்த காலத்தில் இளங்கோவன் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்து செல்ல முயல்கிறார். தனக்கு நிச்சயமான பெண்ணை அவர் அங்கே சென்ற பிறகு இலங்கையிலிருந்து அழைத்துக்கொள்ள வேண்டும். இமையாவுடைய வருங்கால கணவர் சித்திரம் சுவிட்சர்லாந்தில் இருக்கிறார். அவரைச் சேர இமையாவும் கிளம்புகிறார். வெவ்வேறு காலகட்டங்களில்…

Sample article image

திசை ஒன்பது வாசிப்பு / மணிமாறன்

எழுத்தாளர் சயந்தனின் ஆறா வடுவும். ஆதிரையும் தமிழ் நாவல் உலகிற்கு அவரின் மிக முக்கியமான பங்களிப்புகள். திசை ஒன்பது அவருடைய புதிய நாவல். போர் நிகழ்த்திய உளவியல் சிக்கலில் இருந்து மீளவே முடியாத துயரங்களின் பொழுதுகளையே நாவலாக்கியிருக்கிறார். வாழ்வதைத் தவிர வேறு…

Sample article image

திசை ஒன்பது வாசிப்பு / அரவிந்தராஜ்

சயந்தனுடைய இதுவரை வெளிவந்த ஆறாவடு, ஆதிரை, அஷேரா ஆகிய நாவல்களையும் பெயரற்றது மற்றும் இறுதி வணக்கம் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் வாசித்திருக்கின்றேன். திசை ஒன்பது அவரின் நான்காவது நாவல். சுவிஸ்க்கு அகதித் தஞ்சம் கோரிப் புறப்படும் இளங்கோவை மையமாகக் கொண்டு தன்வரலாற்றுப்…

Sample article image

திசை ஒன்பது வாசிப்பு / சுகர்மன்

2013ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆறாவடு’ என்ற நாவல் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் இலங்கையில் அந்த நூல் கிடைக்கவில்லை. அதை வாசிக்க வேண்டும் என்ற ஆவலால், அதைப் படைத்த எழுத்தாளருக்கே நான் மின்னஞ்சல் அனுப்பினேன். அதற்கு, “துரதிர்ஷ்டவசமாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ…

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்.

எழுத்தாளர்கள் பார்வையில்

தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது

ஜெயமோகன்

எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

ஷோபா சக்தி

ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.

சு. வேணுகோபால்