August 19, 2026

திசை ஒன்பது – பிழைத்தல் என்பது அனிச்சை : ஜே.கே

மறுபடியும் சயந்தனிடமிருந்து ஒரு meta fiction நாவல். இளங்கோ தன் இருபதாவது வயதில், யாழ்ப்பாணத்திலிருந்து சுவிற்சலாந்து நோக்கிய தனது புலம்பெயர்வை ஆரம்பிக்கிறான். இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஆரம்பிக்கும் இப்பயணம் சுவிற்சலாந்தை சென்றடைவதற்குள் மொத்தமாகப் பதினான்கு வருடங்கள் உருண்டோடிவிடுகின்றன. இந்த இடைப்பட்ட காலம் அவனைப் போட்டு ஆட்டும் சிப்பிலி கொஞ்ச நஞ்சமல்ல. முதலில் அது தாய்லாந்திலிருந்து சுவிற்சலாந்துக்கு ஒரே விமானப் பயணத்தில் சென்று சேர்ந்துவிடலாம் என்ற கனவை விதைக்கிறது. அவனை விமானத்திலும் ஏற்றுகிறது. பின்னர் உடனேயே அவனை இறக்கி, […]
◷ 9 நிமிட வாசிப்புமுழுவதும் படிக்க →

அண்மைய எழுத்துகள்

அஷேரா – 1

1 மாநில அரசின் அகதிகள் திணைக்களத்தின் நான்காவது மாடி அறையில் கோடை வெயில் குபு குபு என்று புகுந்ததில் சுவர்களும் மேசைகளும் பிரகாசமாயிருந்தன. அருள்குமரனுக்கு எதிரிலிருந்த அதிகாரி தடித்த வில்லைகளுடைய கண்ணாடியை அணிந்திருந்தான். அவனுக்கு இலங்கையின் நிலவியல், அரசியல், இயக்கவியல் –…

திசை ஒன்பது வாசிப்பு / நா.கதிர்வேலன் – விகடன்

ஈழத்திலிருந்து தமிழர்கள் உலகத்தின் எல்லா திசைகளுக்கும் ஓடத் தொடங்கி 40 ஆண்டுகளாகிறது. அலைந்து அலைந்து காடுகள், கடும் குளிரான பனிநிலங்கள், உறைந்த நதிகளையெல்லாம் கடந்துபோன வரலாறுகள் அவர்களுக்கு உண்டு. எங்கே போகிறோம், எப்படிப் போகிறோம் என்றே தெரியாத பயணங்கள்கூட இருக்கின்றன. அப்படியொரு…

அஷேரா

வண்டல் நிலம். குருதிபோலச் சிவந்த புழுதி சுழியாக விரிந்து எழுந்தது. ஒரு புயல்காற்றின் பின் மீந்த எச்சங்களென மரங்கள் தூர்ந்துபோயிருந்தன. மரங்களின் பச்சையத்தை வெம்மை கருக்கித் தின்று விட்டிருந்தது. கடலொன்று புகுந்தபோது அலை காவி வந்த மண்டையோடுகளையும், தோள்ப்பட்டை எலும்புகளையும், பற்களையும்…

சிதறடிக்கப்பட்ட ஓர் இனத்தின் துயரக் காவியம் சயந்தனின் ‘ஆதிரை’ நாவல் – சு.வேணுகோபால்

1977 முதல் 2011 வரையிலான ஈழப்போர்ச் சூழலில் தமிழ்க் குடும்பங்கள் எப்படியெல்லாம் சீரழிந்தது என்பதை ‘ஆதிரை’ நாவல் விவரிக்கின்றது. டெலோ, ஈபி.ஆர்.எல்.எப், எல்.டி.டி போன்ற தமிழ் ஈழவிடுதலை இயக்கங்களுக்குள் நிகழ்ந்த அரசியல் நிலைப்பாடுகள், அழித்தொழிப்புகளின் பக்கம் என நாவல் பயணிக்கவில்லை. மாறாக,…

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்.

எழுத்தாளர்கள் பார்வையில்

தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது

ஜெயமோகன்

எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

ஷோபா சக்தி

ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.

சு. வேணுகோபால்