August 19, 2026

திசை ஒன்பது – பிழைத்தல் என்பது அனிச்சை : ஜே.கே

மறுபடியும் சயந்தனிடமிருந்து ஒரு meta fiction நாவல். இளங்கோ தன் இருபதாவது வயதில், யாழ்ப்பாணத்திலிருந்து சுவிற்சலாந்து நோக்கிய தனது புலம்பெயர்வை ஆரம்பிக்கிறான். இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஆரம்பிக்கும் இப்பயணம் சுவிற்சலாந்தை சென்றடைவதற்குள் மொத்தமாகப் பதினான்கு வருடங்கள் உருண்டோடிவிடுகின்றன. இந்த இடைப்பட்ட காலம் அவனைப் போட்டு ஆட்டும் சிப்பிலி கொஞ்ச நஞ்சமல்ல. முதலில் அது தாய்லாந்திலிருந்து சுவிற்சலாந்துக்கு ஒரே விமானப் பயணத்தில் சென்று சேர்ந்துவிடலாம் என்ற கனவை விதைக்கிறது. அவனை விமானத்திலும் ஏற்றுகிறது. பின்னர் உடனேயே அவனை இறக்கி, […]
◷ 9 நிமிட வாசிப்புமுழுவதும் படிக்க →

அண்மைய எழுத்துகள்

அஷேரா – 11

11 இரவின் கடைசிச் சத்தமும் நீங்கியது. அற்புதத்திற்கு நித்திரை வரவில்லை. ஏதேதோ ரீங்காரங்கள், நாய்கள் குரைக்கின்ற சத்தங்கள், தொலைவில் பேருந்துகளின் இரைச்சல்கள் கேட்டுக்கொண்டிருந்தபோது நேரம் கட கடவென்று போன மாதிரி இருந்தது. இப்போது அப்படி இல்லை. காலத்தை காலால் மிதித்து வைத்திருக்கிற…

அஷேரா – 10

10 அருள்குமரனின் அரசியல் தஞ்சக் கோரிக்கையை மத்திய புகலிடப் பணியகம் ஏற்றுக்கொண்ட தகவலைப் பதிவுத் தபாலில் அனுப்பியிருந்தார்கள். கடிதத்தின் உள்ளே கத்தையாகத் தாள்கள், ஒன்றுமே விளங்கவில்லை. மாலையில் முல்லர் வரும் வரைக்கும் காத்திருந்தான். லப்பாமும் டப்பாமும்தான் அந்தரப்பட்டார்கள். “ரிஜெக்ட் பண்ணிப் போட்டாங்களோ?”…

அஷேரா – 9

9 வெயில்தான் நிறங்களாலானது. பனி போர்த்திய வெண்மை வெறுமையாலானது. அருள்குமரன் பேருந்தின் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தான். கிளிப் பச்சை நிறப் புல் நிலங்களில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. காதுகளில் இலக்கக் குறியீடு. கழுத்தில் ஆடிய செப்பு மணிகள் அசைந்து ஒலி எழுப்பின. அப்படி…

அஷேரா – 8

8 சிங்கப்பூரில் இருந்து சூரிச் நகருக்கு புறப்படத் தயாராக இருந்தது அந்த விமானம். இடையில் எங்கும் நிறுத்தாத நேர்ப் பறப்பு. அபர்ணா ஒரு பெரிய மாளிகைக்குள் நுழைவதைப்போல உணர்ந்தாள். அவ்வளவு பிரமாண்டம். ‘பெரிய வயிற்றுடன் ஒரு பிள்ளைத்தாச்சிப் பெண் நடப்பதைப்போலதான் இது…

அஷேரா – 7

7 மத்தியான நேரத்தில் காயம் பட்டால் ரத்தம் குபு குபு என்று பொங்கும் என்று பெத்தம்மா சொல்வாள். உண்மைதான். நஜிபுல்லாவின் வலது கையிலிருந்து ரத்தம் அருவி மாதிரித்தான் கொட்டிற்று. ‘நாசமாய்ப்போனவன், கையைத் தாறு மாறாகக் கிழித்து வைத்திருந்தான்’. அருள்குமரன் மதியச் சமையலை…

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்.

எழுத்தாளர்கள் பார்வையில்

தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது

ஜெயமோகன்

எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

ஷோபா சக்தி

ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.

சு. வேணுகோபால்