August 19, 2026

திசை ஒன்பது – பிழைத்தல் என்பது அனிச்சை : ஜே.கே

மறுபடியும் சயந்தனிடமிருந்து ஒரு meta fiction நாவல். இளங்கோ தன் இருபதாவது வயதில், யாழ்ப்பாணத்திலிருந்து சுவிற்சலாந்து நோக்கிய தனது புலம்பெயர்வை ஆரம்பிக்கிறான். இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஆரம்பிக்கும் இப்பயணம் சுவிற்சலாந்தை சென்றடைவதற்குள் மொத்தமாகப் பதினான்கு வருடங்கள் உருண்டோடிவிடுகின்றன. இந்த இடைப்பட்ட காலம் அவனைப் போட்டு ஆட்டும் சிப்பிலி கொஞ்ச நஞ்சமல்ல. முதலில் அது தாய்லாந்திலிருந்து சுவிற்சலாந்துக்கு ஒரே விமானப் பயணத்தில் சென்று சேர்ந்துவிடலாம் என்ற கனவை விதைக்கிறது. அவனை விமானத்திலும் ஏற்றுகிறது. பின்னர் உடனேயே அவனை இறக்கி, […]
◷ 9 நிமிட வாசிப்புமுழுவதும் படிக்க →

அண்மைய எழுத்துகள்

அஷேரா – 16

அபர்ணா வேலை செய்த முதியோர் காப்பகத்திலேயே அருள்குமரனுக்கும் சமையல் உதவியாளனாக வேலை கிடைத்தது. மூவாயிரத்து நூறு பிராங்குகள் சம்பளம். அபர்ணாதான் அப்படியொரு வேலை வந்திருப்பதாகவும் விண்ணப்பிக்குமாறும் சொன்னாள். “முந்தி நூறு பேருக்குச் சமைச்ச கொம்பனியின்ரை பெயரை மறக்காமல் எழுதுங்க.” என்றபோது அருள்குமரனுக்கு…

அஷேரா – 15

நிலத்தைச் சுற்றி வளைத்திருந்தது இருட்டு. தூரத்தில் எங்கோ நாய்கள் குரைக்கின்ற சத்தம். தெருவில் யாரும் இல்லை. நெஞ்சுப் படபடப்பு இப்போதுதான் கொஞ்சம் தணிந்திருக்கிறது. பிள்ளையார் கோயில் கிணற்றடியிலிருந்து புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே புலிகள் மறித்துவிட்டார்கள். இந்தத் தடவை சாவு நிச்சயம் என்றுதான்…

அஷேரா – 14

14 சூரிச் நகரத்தில் ஒரு பார்பிக்யூ கடையில் வேலை இருப்பதாக பேருந்தில் எதேச்சையாகச் சந்தித்த லவகுசராசா சொன்னான். அவனுக்கும் யாரோதான் சொல்லியிருக்கிறார்கள். “நான் செய்யேலாது. விசா இல்லை. நீர் நேர போய்க் கேளும்.” என்றான். அருள்குமரன் அன்றைக்கே போய்விட்டான். தொடருந்து நிலையத்தின்…

அஷேரா – 13

அன்றைக்கு அற்புதம் மட்டக்களப்பிற்குப் போகவில்லை. எங்கோ தமிழ்நாட்டின் ஒரு மூலையிலிருந்து அவனைத் துரத்திக்கொண்டு வருபவர்களுக்கு மட்டக்களப்பு கூப்பிடு தொலைவுதான். நேராகக் கதவைத் திறந்து வந்து சுடுவார்கள். ஒரேயொரு வழி, திரும்பவும் ரெலோக் காரரர்களிடம்தான் தஞ்சம் கோரினான். அவர்கள் அளவெட்டியிலிருந்த ஒரு மூதாட்டியின்…

அஷேரா – 12

12 அருள்குமரனுக்குத் திரும்பவும் ஒரு கடிதம் வந்தது. லவகுசராசா “ஐயோ.. உம்மட முடிவை கான்சல் பண்ணிப் போட்டாங்களோ?” என்று அங்கலாய்த்தான். இந்த முறை சமூக உதவித் தொகையை வழங்கும் திணைக்களத்திடமிருந்து அழைப்பு. எதிர்பார்த்ததுதான். மதியம்போல போனான். அங்க நிறைய நேரம் தேவைப்பட்டிருக்கவில்லை.…

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்.

எழுத்தாளர்கள் பார்வையில்

தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது

ஜெயமோகன்

எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

ஷோபா சக்தி

ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.

சு. வேணுகோபால்