அஷேரா – 4

4 எகெரி ஏரிக் கரையோரச் சதுப்பு நிலத்திலிருந்து செங்குத்தாக மேலெழுந்த குன்றின் அப்பால் பச்சைப் புல்வெளிகளும், பள்ளத்தாக்குகளும், நீரோடைகளுமாக நிலம் விரிந்திருந்தது. அது சுவிற்சர்லாந்தின் ஆதி நிலங்களில் ஒன்று. மரச் சட்டங்களாலான வீடுகளும், செம்மறி ஆடுகள் மேயும் பண்ணைத் தோட்டங்களும் என இன்னமும் பழைமையின் முகம் சிதையாத கிராமம்…. தொடர்க

அஷேரா – 3

3 நீரோடையில் சலனமே இல்லை. மழைக்காலம் என்றால் சோ என்று இரைந்துகொண்டே இருக்கும். அருகில் சமாந்தரமாக நீண்ட பாதையில் காய்ந்து முறுகிய சருகுகள் குவியலாகக் கிடந்தன. ஒவ்வொரு காலடியிலும் உடைந்து நொருங்குகிற சத்தம். அருள்குமரன் பாதையின் விளிம்பில் புற்களுக்குள் கால் பதித்து நடந்தான். ‘செருப்பைப் போட்டுக்கொண்டு வந்திருக்கலாம்.’ சமையற்… தொடர்க

அஷேரா – 2

2 ‘இயக்கத்திலிருந்து இப்பொழுதுதே தப்பி ஓடுவோம்.’ என்ற எண்ணம் புகையாகி மூளைக்குள் அலைந்தது. அருள்குமரன் தகரக் கூடாரத்திலிருந்து வெளியே வந்து வரிச்சுத் தடிகளால் செய்த இருக்கையில் உட்கார்ந்தான். உள்ளே பெடியங்கள் அடித்துப் போட்டதைப்போல தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை மொட்டையப்பா விழித்திருக்கக் கூடும். நேற்றிரவு பத்து மணியிலிருந்து அதிகாலை மூன்று… தொடர்க

அஷேரா – 1

1 மாநில அரசின் அகதிகள் திணைக்களத்தின் நான்காவது மாடி அறையில் கோடை வெயில் குபு குபு என்று புகுந்ததில் சுவர்களும் மேசைகளும் பிரகாசமாயிருந்தன. அருள்குமரனுக்கு எதிரிலிருந்த அதிகாரி தடித்த வில்லைகளுடைய கண்ணாடியை அணிந்திருந்தான். அவனுக்கு இலங்கையின் நிலவியல், அரசியல், இயக்கவியல் – இது வேறு இயக்கம் – மட்டுமல்ல… தொடர்க

திசை ஒன்பது வாசிப்பு / நா.கதிர்வேலன் – விகடன்

ஈழத்திலிருந்து தமிழர்கள் உலகத்தின் எல்லா திசைகளுக்கும் ஓடத் தொடங்கி 40 ஆண்டுகளாகிறது. அலைந்து அலைந்து காடுகள், கடும் குளிரான பனிநிலங்கள், உறைந்த நதிகளையெல்லாம் கடந்துபோன வரலாறுகள் அவர்களுக்கு உண்டு. எங்கே போகிறோம், எப்படிப் போகிறோம் என்றே தெரியாத பயணங்கள்கூட இருக்கின்றன. அப்படியொரு பின்னணியில் எழுந்ததே சயந்தனின் இந்த ‘திசை… தொடர்க