அஷேரா – 7

7 மத்தியான நேரத்தில் காயம் பட்டால் ரத்தம் குபு குபு என்று பொங்கும் என்று பெத்தம்மா சொல்வாள். உண்மைதான். நஜிபுல்லாவின் வலது கையிலிருந்து ரத்தம் அருவி மாதிரித்தான் கொட்டிற்று. ‘நாசமாய்ப்போனவன், கையைத் தாறு மாறாகக் கிழித்து வைத்திருந்தான்’. அருள்குமரன் மதியச் சமையலை முடித்துவிட்டு அறைக்குத் திரும்பியபோது நஜிபுல்லா இரண்டு… தொடர்க

அஷேரா – 6

6 இரவு பதினொரு மணி. சுழிபுரக் கடலை இரவு மூடியிருந்தது. அற்புதம் கடற்கரையில் உட்கார்ந்திருந்தான். வெள்ளை நுரைகள் அவனுக்குச் சற்றுத் தூரத்தில் வந்து வந்து உடைந்து அழிந்தன. ஆறுக்கெல்லாம் படகு புறப்பட்டிருக்க வேண்டும். இயந்திரத்தில் ஏதோ பழுதுபோல.. எப்படியும் சரிப் பண்ணி விடலாம் என்று மொட்டை மாஸ்ரர் சொல்லியிருந்தார்…. தொடர்க

அஷேரா – 5

5 நஜிபுல்லா பிறந்த காலத்தில்தான் சோவியத் ரஷ்யாவின் படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தன. ஒரே வெற்றிக் கொண்டாட்டம். பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்த ‘நீயொரு முஜாகித் என்றால் இயந்திரத் துப்பாக்கி உன்னுடைய நண்பன். நீயொரு முஜாகித் என்றால் ஏவுகணைகள் உன்னுடைய நண்பர்கள்’ என்ற பாடலை நஜிபுல்லாவின் தாத்தா சுலைமானிதான் எழுதினாராம். அவரோடுதான் சிறு… தொடர்க

அஷேரா – 4

4 எகெரி ஏரிக் கரையோரச் சதுப்பு நிலத்திலிருந்து செங்குத்தாக மேலெழுந்த குன்றின் அப்பால் பச்சைப் புல்வெளிகளும், பள்ளத்தாக்குகளும், நீரோடைகளுமாக நிலம் விரிந்திருந்தது. அது சுவிற்சர்லாந்தின் ஆதி நிலங்களில் ஒன்று. மரச் சட்டங்களாலான வீடுகளும், செம்மறி ஆடுகள் மேயும் பண்ணைத் தோட்டங்களும் என இன்னமும் பழைமையின் முகம் சிதையாத கிராமம்…. தொடர்க

அஷேரா – 3

3 நீரோடையில் சலனமே இல்லை. மழைக்காலம் என்றால் சோ என்று இரைந்துகொண்டே இருக்கும். அருகில் சமாந்தரமாக நீண்ட பாதையில் காய்ந்து முறுகிய சருகுகள் குவியலாகக் கிடந்தன. ஒவ்வொரு காலடியிலும் உடைந்து நொருங்குகிற சத்தம். அருள்குமரன் பாதையின் விளிம்பில் புற்களுக்குள் கால் பதித்து நடந்தான். ‘செருப்பைப் போட்டுக்கொண்டு வந்திருக்கலாம்.’ சமையற்… தொடர்க