அஷேரா – 19

தனுஷ்கோடிக்குப் பக்கத்தில்தான் இந்த மணல்திட்டு இருக்கிறதென்று படகோட்டி சொன்னான். விடிந்தால்தான் தெரியும். இப்பொழுது இரவு இரண்டு மணியிருக்கலாம். தூரத்தில் வெளிச்சப் பொட்டுக்கள் தெரிந்தன. மீன்பிடிப் படகுகள். இந்தத் திட்டு தண்ணீருக்குள் முட்டை மிதப்பதைப்போல மிதக்கிறது என்று அருள்குமரனுக்கு ஏனோ தோன்றிற்று. முதுகுப் பையை நெஞ்சில் வைத்து அணைத்தபடி மணலில்… தொடர்க

அஷேரா – 18

முள்ளிக்குளத்தில் இருந்த புளொட் இயக்க முகாம் ஏக்கர் கணக்கில் விஸ்தீரணமானது. உள்ளே அந்த இயக்கத்தைச் சேர்ந்த எண்பது போராளிகள் தங்கியிருந்தார்கள். அவ்வப்போது இந்தியப் படைகளோடு ரோந்து போவார்கள். பல நேரங்களில் முகாமிற்குள்ளேயேதான் முடங்கிக் கிடக்க வேண்டும். வெளியே புலிகளுடைய அச்சுறுத்தல் இருந்தது. அவர்களிடமிருந்து உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும்,… தொடர்க

அஷேரா – 17

அடிப்படைப் பயிற்சிகளின் பிறகு அருள்குமரனை நேரடியாகவே அரசியல் பிரிவில் இணைத்துவிட்டிருந்தார்கள். இப்போது முகாம் காடுகளில் இல்லை. ஊர் மனைக்குள் ஒரு கல்வீடு. யாரோ வெளிநாட்டுக்குப் போனவர்களின் வீடாகத்தான் இருக்க வேண்டும். பழ மரங்களும் பூ மரங்களும் சோலையாகப் பரவிய வளவு. அவனோடு பன்னிரெண்டு பேர் தங்கியிருந்தார்கள்.  வகுப்புக்களும் மக்கள்… தொடர்க

அஷேரா – 16

அபர்ணா வேலை செய்த முதியோர் காப்பகத்திலேயே அருள்குமரனுக்கும் சமையல் உதவியாளனாக வேலை கிடைத்தது. மூவாயிரத்து நூறு பிராங்குகள் சம்பளம். அபர்ணாதான் அப்படியொரு வேலை வந்திருப்பதாகவும் விண்ணப்பிக்குமாறும் சொன்னாள். “முந்தி நூறு பேருக்குச் சமைச்ச கொம்பனியின்ரை பெயரை மறக்காமல் எழுதுங்க.” என்றபோது அருள்குமரனுக்கு அதைக் கேட்டுச் சிரிப்புத்தான் வந்தது. “எல்… தொடர்க

அஷேரா – 15

நிலத்தைச் சுற்றி வளைத்திருந்தது இருட்டு. தூரத்தில் எங்கோ நாய்கள் குரைக்கின்ற சத்தம். தெருவில் யாரும் இல்லை. நெஞ்சுப் படபடப்பு இப்போதுதான் கொஞ்சம் தணிந்திருக்கிறது. பிள்ளையார் கோயில் கிணற்றடியிலிருந்து புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே புலிகள் மறித்துவிட்டார்கள். இந்தத் தடவை சாவு நிச்சயம் என்றுதான் நினைத்தான். அநியாயமாக அவனை ஏற்றிவந்த சைக்கிள்காரரையும்… தொடர்க