August 28, 2026

அஷேரா – 23

கொழும்பு மாநகர சபை மைதானத்தில் தேர்தல் பிரச்சார மேடையில் குண்டு வெடித்துவிட்டது என்ற செய்தியை அருள்குமரன் பார்த்துக்கொண்டிருந்த ‘மர்மதேசம்’ தொடருக்கு நடுவில் திடீரென்று ஒளிபரப்பினார்கள். இரவு பத்து மணியிருக்கும். இப்பொழுதுதான் வீட்டுக்கார அம்மா ‘சித்தி’ நாடகம் பார்த்துவிட்டு தூங்கப் போயிருந்தாள். நல்ல வேளை, அவள் இருந்திருந்தால் பதற்றமாக இருந்திருக்கும். இப்போதுகூட அப்படித்தான் இருக்கிறது. பதற்றமா? மனச் சோர்வா? ஏதோ இனம் புரியாத மன அலைவு. புகை மூட்டமான எண்ணங்கள்.. அவன் அவந்தியைத்தான் சட்டென்று நினைத்தான். அவளுடைய முகம்தான் […]
◷ 4 நிமிட வாசிப்புமுழுவதும் படிக்க →

அண்மைய எழுத்துகள்

அஷேரா – 22

“அரங்கன்  வந்திட்டார்.” என்றாள் அபர்ணா. அதற்குப் பிறகும் அவள் ஏதோ பேசிக்கொண்டுதான் போனாள், சிறு சலனம் கூட இல்லாமல். அருள்குமரனுக்குத்தான் சட்டென்று இழை அறுந்துவிட்டதைப்போல தோன்றிற்று. அவன் வெறுமனே காதில் தொலைபேசியைப் பிடித்து வைத்துக்கொண்டு நின்றான். அது எப்பிடிச் சாத்தியம்? மின்னாமல்…

“அரங்கன்  வந்திட்டார்.” என்றாள் அபர்ணா. அதற்குப் பிறகும் அவள் ஏதோ பேசிக்கொண்டுதான் போனாள், சிறு சலனம் கூட இல்லாமல். அருள்குமரனுக்குத்தான் சட்டென்று இழை அறுந்துவிட்டதைப்போல தோன்றிற்று. அவன் வெறுமனே காதில் தொலைபேசியைப் பிடித்து வைத்துக்கொண்டு நின்றான். அது எப்பிடிச் சாத்தியம்? மின்னாமல்…

அஷேரா – 21

கொழும்பில் தரையிறங்கியது விமானம். சென்னையில் அது வானம் ஏறியபோது தோன்றிய ‘அப்பாடா..’ என்ற உணர்வெல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான். இப்போது கொழும்பைப் பற்றிய யோசனைகள். திட்டங்களில் ஏதும் கசிந்திருந்தால் வாசலில் வைத்தே கைது செய்வார்களோ? அப்படி ஏதும் நடந்தால் அதற்குப் பிறகு அவன்…

கொழும்பில் தரையிறங்கியது விமானம். சென்னையில் அது வானம் ஏறியபோது தோன்றிய ‘அப்பாடா..’ என்ற உணர்வெல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான். இப்போது கொழும்பைப் பற்றிய யோசனைகள். திட்டங்களில் ஏதும் கசிந்திருந்தால் வாசலில் வைத்தே கைது செய்வார்களோ? அப்படி ஏதும் நடந்தால் அதற்குப் பிறகு அவன்…

திசை ஒன்பது – பிழைத்தல் என்பது அனிச்சை : ஜே.கே

மறுபடியும் சயந்தனிடமிருந்து ஒரு meta fiction நாவல். இளங்கோ தன் இருபதாவது வயதில், யாழ்ப்பாணத்திலிருந்து சுவிற்சலாந்து நோக்கிய தனது புலம்பெயர்வை ஆரம்பிக்கிறான். இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஆரம்பிக்கும் இப்பயணம் சுவிற்சலாந்தை சென்றடைவதற்குள் மொத்தமாகப் பதினான்கு வருடங்கள் உருண்டோடிவிடுகின்றன. இந்த இடைப்பட்ட காலம்…

மறுபடியும் சயந்தனிடமிருந்து ஒரு meta fiction நாவல். இளங்கோ தன் இருபதாவது வயதில், யாழ்ப்பாணத்திலிருந்து சுவிற்சலாந்து நோக்கிய தனது புலம்பெயர்வை ஆரம்பிக்கிறான். இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஆரம்பிக்கும் இப்பயணம் சுவிற்சலாந்தை சென்றடைவதற்குள் மொத்தமாகப் பதினான்கு வருடங்கள் உருண்டோடிவிடுகின்றன. இந்த இடைப்பட்ட காலம்…

இத்தி மரத்தடி எஞ்சுவது: மண்ணின்றி நிலைகொள்ளா வாழ்வுகள் – ராஜி பாலசுப்பிரமணியன்

போர் வரலாறு பொதுவாக வெற்றி-தோல்விகளைப் பதிவு செய்கிறது. எந்தத் தரப்பு வென்றது அல்லது தோற்றது, எந்த நிலப்பரப்பு கைமாறியது, அடையப்பட்ட அரசியல் இலக்குகள் எவை என்பவற்றை மையமாக்குகிறது. ஆனால் போர்களின் பின் எழும் கேள்விகள் பல. போர்களில் உயிரிழப்புகள் முதலில் செய்திகளாக,…

போர் வரலாறு பொதுவாக வெற்றி-தோல்விகளைப் பதிவு செய்கிறது. எந்தத் தரப்பு வென்றது அல்லது தோற்றது, எந்த நிலப்பரப்பு கைமாறியது, அடையப்பட்ட அரசியல் இலக்குகள் எவை என்பவற்றை மையமாக்குகிறது. ஆனால் போர்களின் பின் எழும் கேள்விகள் பல. போர்களில் உயிரிழப்புகள் முதலில் செய்திகளாக,…

அஷேரா – 20

வெளியே கொட்டிக் கிடந்த உறை குளிரிலிருந்து வெட்டி எடுப்பதைப்போல வெப்பக் கணப்பு சூட்டைத் தள்ளியது. தொண்டைக் கரகரத்தது. முகத்தில் ஏதோ ஊர்ந்து திரிவதைப்போன்ற உணர்வு. அருள்குமரன் குசினியிலிருந்து வரவேற்பறைக்கு வந்தான். அற்புதம் சோபாவிற்குப் பக்கத்தில் சுவரோடு உட்கார்ந்திருந்தார். அடிக்கடி கழுத்தை, கன்னங்களைத்…

வெளியே கொட்டிக் கிடந்த உறை குளிரிலிருந்து வெட்டி எடுப்பதைப்போல வெப்பக் கணப்பு சூட்டைத் தள்ளியது. தொண்டைக் கரகரத்தது. முகத்தில் ஏதோ ஊர்ந்து திரிவதைப்போன்ற உணர்வு. அருள்குமரன் குசினியிலிருந்து வரவேற்பறைக்கு வந்தான். அற்புதம் சோபாவிற்குப் பக்கத்தில் சுவரோடு உட்கார்ந்திருந்தார். அடிக்கடி கழுத்தை, கன்னங்களைத்…

விமர்சனங்களிலிருந்து

ஆதிரை – ஆதிலட்சுமி சிவகுமார்

1977 தொடக்கம் 2009 வரையான காலத்தை பேசும் ஒரு நாவல். விமர்சனம் அல்லது கருத்துரை என்பதற்கு அப்பால் சயந்தனின் இந்த ஆர்வம் அல்லது முயற்சியை வரவேற்பதுடன் பாராட்டியும் ஆகவேண்டிய கடமை எனக்கு உண்டு என நினைக்கின்றேன். மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் சயந்தன். படைப்பியற்றுறையில் சயந்தன் தனித்துவமான ஒரு கதைசொல்லியாக தன்னை அடையாளப்படுத்தியிருப்பதுடன், நிறுவியுமிருக்கின்றார். ஆதிரைக்கு முன்பதாகவே இதனை அவர் நிறுவியிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. நாடற்றஒருவன் சிறையில் அனுபவிக்கும் மிகக்கொடூரமான சித்திரவதைகளுடன் நாவல் ஆரம்பிக்கிறது. “லெட்சுமணன்” இனத்துவேசத்தால் கொல்லப்பட்ட, மற்றும் இன்னமும் சிறைகளில் வதைபடும் தமிழ் இளைஞர்களின் ஒரு குறியீடாகவே தெரிகிறான். மிகநீண்ட இடைவெளிக்கு பிறகு மலையக தமிழ்மக்களின் பிரச்சினைகளை வெளிப்படையாக பேசுகின்ற ஒரு படைப்பாகவும் ஆதிரை உள்ளது. கண்டுகொள்ளப்படுவதில் பின்தள்ளப்படுகின்ற மக்களைப்பற்றி பேசும் ஆற்றல் வரவேற்கத்தக்கது. தன்னுடைய நறுக்கென்ற உரையாடல்கள் மூலமாக படிப்பவர்கள்நெஞ்சில் ஆணிஅறைந்துவிடுகிறார் சயந்தன். உதாரணமாக, (பக்கம் 28, 29 ல்வரும் உரையாடல்) “யாருக்கு தனிநாடு கேக்கிறாங்க? “ “தமிழங்களுக்கு தான்” “நமக்குமா..” இது மலையகத்தில் வாழ்ந்த தமிழனின் கேள்வி. இந்தக்கேள்விக்குள் தொங்கிநிற்கும் அரசியல்…
முழுவதும் வாசிக்க →
புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்.

தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது

ஜெயமோகன்

எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

ஷோபா சக்தி

ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.

சு. வேணுகோபால்