அஷேரா! ‘இருள்’ என்ற வார்த்தையின் அர்த்தம் – சுபா

‘ஏரி பெரிய இருள்ப் படுக்கையைப் போல விரிந்துகொண்டே போனது…’. மனதின் ஒவ்வொரு இருள் படுக்கையாக உரித்து உரித்து எடுத்து, சில நாட்களுக்கு ஆப்கானின் வரண்ட மலைகளாக நிச்சலனத்துடன் வெறித்து மட்டுமே நிற்க வைத்தது அஷேரா எனும் ஆழமான நாவல். காமமும், கோபமும் உயிர்க்குணங்கள். பிரிக்க முடியாதவை. இருள் போர்த்தியவை….

‘அஷேராவின்’ புனைவுத் தளத்தை விரிவாக்கத் தூண்டும் வாசகப்பணி இது – அசுரா

நாவலின் ஆசிரியரின் குறிப்பு எனும் இறுதிப்பகுதியும், அதுவே இந்தப் புனைவின் ‘ஆசிரியரான’ சயந்தனின் குரலாகவும் கருதி, இப்பிரதியின் பின்னல்களை அவிழ்க்க வேண்டியதான ஒரு வாசிப்பு அனுபவத்தை என்னால் உணரமுடிகிறது. இலக்கியப் படைப்பாளிகளை, தத்துவ சிந்தனையாளர்களை, வரலாற்று ஆய்வாளர்களை ஆசிரியர்கள், ஆசான்கள், எனும் பொருள்பட அழைப்பதன் உட்பொருள் என்ன? இவர்களும்…

மனப்பிறழ்வின் நாட்குறிப்பேடு அஷேரா – தி.லலிதகோபன்

அறிமுகம் சயந்தன் கதிர் என்று அழைக்கப்படும் சயந்தன் அவர்களின் மூன்றாவது நாவல் பிரதி அல்லது ஆதிரைக்கு பின்னரான பிரசவம் என்றோ இந்த அறிமுகத்தினை சுருக்கமாக நான் கடந்து விடலாம். ஆனால் அதற்கு அப்பாலும் சில செய்திகளை சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. முதன்முதலாக “ஆதிரை” என்ற பெயரினை முகநூலின் மூலமாக…

அந்நிய நிலத்தின் மௌன ஓலம் – வேலு மாலயன்

புலம்பெயர் படைப்பாளர்களில் ஆறாவடு மற்றும் ஆதிரை நாவல்கள் வழியே தமிழ் இலக்கிய பரப்பில் மிகுந்த கவனத்தை சம்பாதித்தவர் எழுத்தாளர் சயந்தன் அவர்கள்.சயந்தனின் முந்தைய இரண்டு நாவல்களிலிருந்த போர்,அரசியல் ஆகியவற்றிலிருந்து விலகி எழுதப்பட்டுள்ளது புதிய நாவலான அஷேரா. ஈழத்தில் தமிழராய் பிறந்து இனப் போரின் வலி மற்றும் துயரில் உழண்ட…

நிறைவான வாசிப்பு – சரவணன் மாணிக்கவாசகம்

அஷேரா நாவலை ஒரே கதையாகப் படிக்கலாம், இல்லை கதைகளின் தொகுப்பாகவும் படிக்கலாம். அருள்குமரன் காமத்தை எதிர்கொள்ள முடியாது, தற்கொலை செய்வதற்குப் பதிலாக இயக்கத்தில் சேர்கிறான். அவனது அம்மாவின் கதை ஒரு தனிக்கதை. ஒருவகையில் அருள்குமரனின் நிலைமைக்கு அவளே காரணம். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நஜிபுல்லாவின் கதை. பயந்து நடுங்கும் அற்புதத்தின்…