அந்நிய நிலத்தின் மௌன ஓலம் – வேலு மாலயன்
புலம்பெயர் படைப்பாளர்களில் ஆறாவடு மற்றும் ஆதிரை நாவல்கள் வழியே தமிழ் இலக்கிய பரப்பில் மிகுந்த கவனத்தை சம்பாதித்தவர் எழுத்தாளர் சயந்தன் அவர்கள்.சயந்தனின் முந்தைய இரண்டு நாவல்களிலிருந்த போர்,அரசியல் ஆகியவற்றிலிருந்து விலகி எழுதப்பட்டுள்ளது புதிய நாவலான அஷேரா. ஈழத்தில் தமிழராய் பிறந்து இனப் போரின் வலி மற்றும் துயரில் உழண்ட ஒருவர் அவரது படைப்புகளில் அந்த வலியின் துயரை,உணர்ச்சிகள் மேலோங்க பதிவு செய்வது என்பது எப்போதும் தவிர்க்க முடியாதது. ஆனால் சயந்தனின் படைப்புகள் உணர்ச்சிகளின் வெளியிலிருது ஈழத் தமிழர்களின் …