மீரா பாரதி

ஈழவிடுதலைப் போராட்டத்தில் இறுதிவரை பெரும் பங்காற்றியவர்களும் அதிகமாக (கட்டாயமாகப்) பலியாக்கப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் வடக்கு கிழக்கில் சாதியாலும் வர்க்க நிலைகளாலும் ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்ட மக்களே. இவர்களுடன் மலையகத்திலிருந்து இடம் பெயர்ந்து அகதிகளாக வன்னிப்பிரதேசங்களில் வாழ்ந்த மலையக மக்களும் பாதிப்புக்குள்ளானார்கள். ஒரு புறம் தமிழ் சமூகங்களுக்குள் இருக்கின்ற சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும்…

ப.ரவி

நாவல்களில் வெவ்வேறு விதமான பாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்றபோது அங்கே தனியானவொரு உண்மை மட்டும் இருப்பதற்கு இடமில்லை. வெவ்வேறு உண்மைகள் இருக்கும் சாத்தியம் உண்டு. அதை ஆசிரியர் கதை சொல்லலின்போது அங்கீகரித்தபடி அதற்குள்ளால் நகரவேண்டும். அதற்கு உண்மையில் ஒருவர் தனது கருத்தின் சார்புநிலையை அக் கணங்களில் துறக்க வேண்டியிருக்கும். தனது கருத்துசார்…

தமிழ்கவி

ஆதிரை ஒரு காத்திரமான வரலாற்றைப் பதிவு செய்து கொண்டு நகர்கிறது.கடந்த காலம் நிகழ்காலம் எனபவற்றில் தீவிரமான போக்குக் காட்டி விரைகிறது தமிழர்களின் என்பதைவிட என்னுடைய ஆறிய புண்ணை மிக மோசமாக கீறிக் கிழித்துச் செல்கிறது. எதையெல்லாம் எமது சந்ததி மறக்கக் கூடாதோ அதையெல்லாம் கச்சிதமாகப் பதிவு செய்துவிட்டது. படிக்கும்…

ரேவதி யோகலிங்கம்

நம்மவர்களின் படைப்புகளில் பிழியப் பிழிய வலியும் வேதனையும் மட்டுமே வெளிப்படுகிறதென்றும் இலக்கிய நளினம் இருப்பதில்லை என்றும் விமர்சிப்பவர்கள் உண்டு.தாயகத்தில் நிகழ்ந்த போர்கள்,இடப்பெயர்வுகளை மையப்படுத்தி ஏராளமான படைப்புகள் வெளிவந்துவிட்டன. சிறையின் மூத்திர நெடியையும் சித்திரவதையின் உச்சத்தில் எதிராளியின் முகத்தில் வழியும் வலியை காமத்தில் உச்சத்தைத் தொட்டது போல் அனுபவிக்கும் விசாரணையாளனின்…

யதார்த்தன்

கருவுற்ற பெண் நாவல் முன் குறிப்புக்கள் 01 நாடுகடத்தப்பட்ட ஆரிய குழுமத்தினரான விஜயனும் அவனுடைய எழுநூறு தோழர்களும் இலங்கைக்கு வந்தபோது , இலங்கையில் இயக்கர் நாகர் முதலான தொல்குடிகள் செழித்த இலங்கை நிலத்தில் வாழ்ந்துகொண்இருந்தனர். ஸ்பானியர்களும் பிரிடிஷ்காரர்களும் அமெரிக்க கண்டங்களின் தொல்குடிகளை வலுக்குன்றச்செய்து தங்களுடைய குடியேற்றங்களை நிறுவ அவர்களிடம்…

கெளதமி

ஆதிரை * (“பிரதியை வாசித்தல் அல்லது பிரதிக்குள் வசித்தல்”) இடப்பெயர்வுகளால் கட்டமைக்கப்பட்ட இருத்தலியம் எமது. இதுவரை நம் தேசத்தில் நிகழ்ந்த பல்வேறுபட்ட மனித அவலங்களையும் அதன் பின்னணியாகக் கொண்டு பாதிக்கப்பட்டும் பாதிக்கபடாமலும் வாழும் ஜனங்களை அடிப்படையாகக் கொண்ட இலக்கியப்படைப்புக்கள் அல்லது பிரதிகள் நமக்கு படிக்கக் கிடைக்கின்றது. வரலாற்றைச் சற்றே…

அனோஜன் பாலகிருஷ்ணன்

ஈழத்து நாவல்களில் என்ன விசேடமாக இருந்துவிடப்போகின்றது என்ற பிரஞ்சை பெரும்பாலானோர்க்கு இருப்பதுண்டு. ஓலம் ஒப்பாரி கண்ணீர் மீண்டும்மீண்டும் மரணம் என்றே பேசிக்கொண்டிருக்கும். ஈழம் வலிகளினாலும் ஓலத்தினாலும் நிரம்பியது. நாம் சந்தித்த கண்ணீர் முடிவற்றது. கொடுத்த தியாகங்கள் கற்பனைக்கு எட்டமுடியாத பிரமாண்டமானவை. இவற்றின் தரவுகளும் வலிகளும் எம்மிடம் ஏராளம் உண்டு….

சுரேகா பரம்

“பல காலத்தைச் சேர்ந்த பலவிதமான நீரோட்டங்களில் சங்கமமான வாழ்க்கைக்கடல்” ஆம் அப்படித்தான் சயந்தன் அண்ணாவின் ஆதிரையும். எம் கண்ணீர்த்தேசத்தின் கண்ணாடி இது. போராட்டக்களப்பாத்திரச்சித்திரிப்புக்களின் வாயிலாக அதன் அதிர்வுகளும், முனகல்களும் ,சிதைவுகளும், சித்ரவதைகளும் , பேரவலங்களும் ஐதார்த்தம் பிசகாமல் விருப்பு வெறுப்புகளுக்கெல்லாம் பணிந்து போகாமல் இயல்பான மென்னுணர்வுகளுடன் இரத்தமும் சதையுமாகப்…

சுதாகர் சாய்

ஆதிரை, சயந்தனின் இரண்டாவது நாவல். சிங்கமலை லெட்சுமணனின் நினைவுகளாக விரியும் ஆதிரை, ஈழத்தின் முப்பது ஆண்டுகால யுத்தப் பின்னணியியில் நிகழும் பெரும் கதை. தூக்கத்திலும் துயரத்தை இதயத்தில் சுமத்து செல்லும் மனிதர்களை குறித்த களப் பதிவு. ஆதிரை வலியின் உச்சம். மனிதர்கள்,மரங்கள்,பறைவைகள்,விலங்குகள், விவசாயம், தெய்வங்கள், வழிபாடு,வேட்டை முறைகள், உணவு…