![Photobucket - Video and Image Hosting](https://i0.wp.com/img.photobucket.com/albums/v739/sajee/DSC02441.jpg?w=780)
![Photobucket - Video and Image Hosting](https://i0.wp.com/img.photobucket.com/albums/v739/sajee/DSC02437.jpg?w=780)
இதில பாவிக்கப்பட்டிருக்கிறது மண்ணா அல்லது என்னது என்று சரியா தெரியெல்லை. எண்டாலும் மிக அற்புதமான motion graphics வகையைச் சார்ந்த இந்தத் துண்டு வீடியோவை நேரமிருந்தா நீங்களும் பாருங்க.. கொஞ்சம் நீளமானது..
By சயந்தன் • March 4, 2006
பெரியண்ணன் டிசே தனது பதிவொன்றில் சுஜித்-ஜீ பற்றி எழுதியிருந்தார். சுஜித்-ஜீ யாரென கேட்பவர்களுக்காக டிசேயின் வார்த்தைகளை இங்கே கடன்பெற்றுத் தருகிறேன்.
இந்த இளங்கலைஞர், தமிழ்ப்பாடல்களை Rap, R&B போன்ற தளங்களுக்கு நகர்த்த முயற்சித்துக்கொண்டிருக்கின்றார். முதலாவது ஆல்பம், Singles, இரண்டாவது ஆல்பமான சிலோன் (Ceylon) இந்த வருடம் நடுப்பகுதில் வர இருக்கிறது. தானே பாடல்கள எழுதி, பாடவும் செய்கின்ற சுஜித்தின் பாடல்கள், ராப் பாடல்களிலும், தமிழ் ரீமிக்ஸ்களிலும் கரைந்துபோகின்ற என்னைப் போன்றவர்களுக்கு பிடிக்காமற்போகாதுதானே. அநேக ராப் பாடல்களில் (கானாப் பாடல்களைப் போல) ஒருவித எள்ளல் தொனி இருக்கும் (specially Eminem’s lyrics). அதையும் சுஜித் முயற்சித்துப் பார்த்திருப்பது நன்றாக இருக்கிறது. ‘அன்புக் காதலி’யும், ‘பயணமும்’ மிகவும் பிடித்த பாடல்கள். ‘ஒரு சில பெண்களின்…’ பாடலில், ஒரு ஆணின் பார்வை வலிந்து தெரிந்தாலும் beatம் பாடல் வரிகளும் இணைந்து போகின்றதால், திரும்பத் திரும்பக் கேட்கமுடிகிறது.
சுஜித்-ஜியை கடந்த வாரம் ஒஸ்ரேலிய இன்பத்தமிழ் ஒலி வானொலியின் சிறகுகள் நிகழ்ச்சிக்காக செவ்வி கண்டிருந்தேன். அந்த ஒலிப்பதிவினை இந்த வேளையில் வெளியிடுவது பொருத்தமாயிருக்கும்.
செவ்வியென்றால் பெரிதாக நற்சிந்தனைகள், அறிக்கைகள் எதுவும் இருக்காது. அதிலும் குறிப்பாக இயல்பில் பேசுவது போலவே இருக்க வேண்டும் எனவும் கவனமெடுத்துக்கொண்டேன். பேட்டியின் இடையிடையே சுஜித்-ஜியின் பாடல்களும் இடம் பெறுகின்றன. கேட்டுப்பாருங்கள்
By sayanthan • February 23, 2006
நீங்கள் திரிஷா ஜாதகக் காரரா..? அல்லது நயன்தரா ஜாதக காரரா..? உங்களுக்குரிய இந்த அண்டிற்கான பலாபலன்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா..? சரி.. கீழே வீடியோவில் ஜோதிட சிகாமணி ஜோதிகா சாமி காத்திருக்கிறார். கெட்டு தெரிந்து கொள்ளுங்கோ..
இதுவும் கனடாவில் ஒளிபரப்பானதென்று தான் நினைக்கிறேன். அவர்களுக்கு நன்றி. இதுவும் டிசேக்காகத் தான்! டிசே.. நீங்கள் என்ன ராசி?
By சயந்தன் • February 14, 2006
இதுக்கு முதலில ஒரு குறும் படம் ஏற்றியிருந்தனான். ஆனால் அதுக்கு பதில் எழுதின டி சே அதில ஒரு பொம்பிளைப் பிள்ளையளும் நடிக்க வில்லையாம். அதனாலை என்னை மண்டையில போடுற அளவுக்கு போயிட்டுது ஆள்.
அதனாலை பொம்பிளைப் பிள்ளயள் நடிச்ச இந்த படத்தை அவருக்கு போட்டுக் காட்டுறன்.. அதுவும் கனடாவில தான் எடுத்திருக்கு.. ஒரு வேளை அவர் பார்த்திருக்கவும் கூடும்.. எண்டாலும் பாக்கட்டும்.. சரி மற்றாக்களும் பாருங்கோ..
By சயந்தன் • February 13, 2006
ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது.
-எழுத்தாளர் ஜெயமோகன்
ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.
-எழுத்தாளர் சு. வேணுகோபால்
ஈழத்தில் பல அற்புதமான கதைகள் இருக்கின்றன. சயந்தனுடைய `ஆறாவடு’ நாவல் திரைப்படமாக்குவதற்கான எல்லாத் தன்மைகளோடும் இருக்கிறது.
-இயக்குனர் வசந்தபாலன்
நாவல் வடிவமும் சரி, நாவலானது வாசகருக்குக் கடத்த வேண்டிய உணர்ச்சியின் உக்கிரமும் சரி... இரண்டுமே சயந்தனுக்கு நன்றாகக் கைவரப்பெற்றிருக்கின்றன. இலங்கையில் நடைபெற்ற போர் அங்குள்ள தமிழ் மக்களின் வாழ்க்கையை எப்படிச் சின்னாபின்னப்படுத்தியது என்பதன் அழுத்தமான இலக்கியப் பதிவுகளாக சயந்தனின் படைப்புகள் இருக்கின்றன.
-தி இந்து
எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்.
- எழுத்தாளர் ஷோபா சக்தி
தமிழீழத் தாயகத்தையே கனவாகக் கொண்டு, குழுக் குழுவாகச் சிதைந்து ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டு மண்ணை ரத்தக்களறியாக்கிய ஈழத்து அரசியலை அஷேரா நாவலின் உள்ளீடாக வைத்துப்பேசுகிறார் சயந்தன். ‘ஆறாவடு’, ‘ஆதிரை’ வரிசையில் ‘அஷேரா’வும் கவனத்தில் இருக்கும் முக்கிய நாவல்!
-ஆனந்த விகடன்