படம் காட்டுறன்

Image hosted by Photobucket.com

யாழ்ப்பாணத்தில் எழுந்த மாற்றாய் ஒரு பத்துப்பேரை படம் பிடித்தால் கண்டிப்பாக ஒரு இராணுவ சிப்பாயோ அல்லது ஒரு இராணுவ வாகனமோ அவர்களுக்குள் அடங்குவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. உண்மையும் அது தான். யாழ்ப்பாணத்தில் பத்து நபர்களுக்கு ஒரு சிப்பாய் என்ற விகிதத்தில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளார்கள். இந்த படம் யாழ் பேரூந்து நிலையத்தில் எடுக்கப்பட்டது.

Image hosted by Photobucket.com

யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் இருக்கின்ற முனியப்பர் கோயில் இது. இப்போது யாழ்ப்பாணத்தின் காதல் தெய்வம்.

By

Read More

தொடரும் யாழ்ப்பாண காட்சிகள்

யாழ்ப்பாணத்தின் இன்னும் சில காட்சிகள் இவை. யாழ்ப்பாணத்தின் இணைய வேகத்தோடு போராடி பணத்தை விரயம் செய்ய விருப்பம் இல்லை. அதே நேரம் பொறுமையும் இல்லை. இந்த படங்கள் ஏற்கனவே கிளிநொச்சியில் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி பதிவேற்றப்பட்டவை. (ஓசியில் படம் காட்டுதல்!). இனி வரும் படங்களை ஒஸ்ரேலியா திரும்பியவுடன் காட்டுவதே நல்லது எனவே நன்றி. (தமிழ் மணத்தில் ஏதேனும் சண்டை நடக்கிறதா?)

Image hosted by Photobucket.com
யாழ் கோட்டையின் வெளிப்புறத்தில்

Image hosted by Photobucket.com
நல்லூர் திலீபன் நினைவு தூபி

Image hosted by Photobucket.com
யாழ்ப்பாணம் புதிய தபால் நிலையம்

By

Read More

மெல்பேண் To கொழும்பு

இன்று அதிகாலை கொழும்பில் வீட்டுக்கதவினை தட்டி ( வழமையாக இது இலங்கை இராணுவம் செய்கின்ற வேலை.) அம்மாவை தூக்கத்திலிருந்து எழுப்பி எனது வருகை குறித்த அதிர்ச்சி மகிழ்ச்சியினை கொடுத்த போது நேரம் 2 மணி.

மெல்பேணில் புறப்பட்ட விமானம் சிங்கையை வந்தடைந்த போது சிங்கை நேரம் இரவு 9.15. மீண்டும் சிங்கையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட போது நேரம் 10.40.

ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்த, நண்பர்கள் எனது வீட்டிற்கு எந்த விதமான தகவல் கசிவும் விடாதபடி கன கச்சிதமாக என்னை விமான நிலையத்திலிருந்து அழைத்து செல்ல வந்திருந்தார்கள்.

எல்லாம் திட்டமிட்ட படி முடித்தாயிற்று. அம்மாவிற்கு இன்னும் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் தீரவில்லை. நண்பர்களுக்கு நன்றி.

சிங்கை. பிரமிக்க வைத்த விடயம்.
சிங்கை விமான நிலையத்தோடு ஒப்பிட்டால் மெல்பேண் நிலையம் குடிசை. கொட்டில்.

சிங்கை. கவலையுற வைத்த விடயம்.
சிங்கை விமான நிலையத்தில் லோக்கல் அழைப்புக்களுக்கு இலவசம் என்பது முன்னமே தெரிந்திருந்தால் ஈழநாதனின் தொலைபேசி இலக்கத்தை கொண்டு வந்து அலட்டியிருக்கலாம்.

இந்த பயணத்தின் நோக்கங்கள் அல்லாத ஒன்று
நானும் வசந்தனும் வேறு நபர்கள் என்பதனை உணர்த்துதல்.

சந்திக்கலாம்.

By

Read More

இலங்கை அரசின் எதிர்காலம்?

ஜே.வி.பி விலகி விட்டது.

இலங்கையின் தமிழர் பகுதிகளுக்கு சுனாமி நிவாரண உதவிகளை பங்கிடுதல் தொடர்பான புலிகளுடன் இணைந்து பணியாற்றும் கட்டமைப்பு யோசனையை கைவிடுமாறு அது சந்திரிகாவிற்கு கொடுத்திருந்த காலக் கெடு நேற்று இரவுடன் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இன்று அரசிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

கடந்த வாரங்களில் கொழும்பின் அரசியல் பரபரப்புடையதாக இருந்தது. ஜே.வி.பி அரசிலிருந்து விலகுமா என்றும் சந்திரிகா ஜே.வி.பியின் நிபந்தனையை ஏற்றுக் கொள்வாரா என்றும் பலவாறான கேள்விகள் அங்கு இருந்தன.

பொதுக்கட்டமைப்பு என்பது ஒரு நிவாரண உதவி அமைப்பு. ஆயினும் அதற்கான எதிர்ப்புகளும் கோசங்களும் ஏதோ தனிநாட்டிற்கு எதிரான கோசங்களுக்கு ஒப்பானதாயிருந்தன. பெளத்த பிக்குகள் உண்ணாவிரதமிருந்தனர். ஊர்வலம் போயினர். தம்மீது பெற்றோல் ஊற்றினர். கண்ணீர் புகை குண்டுகளுக்கிடையில் சிக்கி கண்ணீர் விட்டனர்.

ஜே.வி.பி யும் தன் பங்குக்கு புலிகளுடன் வெற்றுக்காகிதத்தில் கூட கையெழுத்து இட கூடாது என்றது. காலக்கெடு விதித்தது. இறுதியில் அரசிலிருந்து விலகியிருக்கிறது.

சந்திரிகாவிற்கு இது ஒரு மானப்பிரச்சனையாக இருந்திருக்க வேண்டும். பாரம்பரியம் மிக்க ஒரு கட்சியை ஜே.வி.பியினர் ஆட்டிப்படைப்பதை அவர் விரும்பியிருக்காது இருக்க கூடும்.

உலக அரங்கில் புலிகளின் தரத்தை உயர்த்தி விடும் என்பதனாலும் அவர்களுக்கான அங்கீகாரம் ஒன்றினை வழங்கி விடும் என்பதனாலுமே சிங்கள இனவாத அமைப்புக்கள் இந்த பொதுக்கட்டமைப்பை விரும்பவில்லை என்பது தெளிவு. ஆனால் பெரும்பாலான உலக நாடுகள் புலிகளுடனான பொதுக்கட்டமைப்பினை ஆதரிக்கின்றன. விரைவில் அதனை நடைமுறைப்படுத்துமாறு வேண்டு கோள் விடுக்கின்றன.

இது ஆகக்குறைந்தது பாதிக்கப்பட்ட பகுதிகளில் புலிகளின் நிர்வாகம் என்ற யதார்த்தத்தினை அந்த நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை குறிக்கிறது.

பொதுக்கட்டமைப்பு தொடர்பில் சிங்கள இனவாத அமைப்புக்கள் நடந்து கொண்ட முறையே உலக நாடுகள் இலங்கையின் இனப்பிரச்சனை தொடர்பில் இன்றைய யதார்த்தம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள போதுமானது.

ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தினை பங்கிடுகின்ற சாதாரண ஒரு அமைப்புக்கு இத்தனை எதிர்ப்பு சிங்கள தேசத்தில் கிளம்புமென்றால் இடைக்கால நிர்வாக சபைக்கு, சமஷ்டி முறையிலான நிரந்தர தீர்வுக்கு சிங்கள தேசத்தின் இனவாதம் எத்தனை தூரம் கொந்தளிக்கும் என்பதை உலகு உணர்ந்திருக்கும்.

20 வருடங்களுக்கு மேலான தமிழர்களின் போராட்டத்திற்கு நியாயம் இருந்திருக்கிறது என்பதை இன்று சிங்கள இனவாதம் தானாகவே உணர்த்தி கொண்டிருக்கிறது.

By

Read More

× Close