திசை ஒன்பது வாசிப்பு / The Tamil Narrator
திசை ஒன்பது நாவல் பற்றிய ஒரு காணொலிப் பதிவு
திசை ஒன்பது நாவல் பற்றிய ஒரு காணொலிப் பதிவு
அகதிகளின் எல்லை வலி போருக்கு பின்னான ஈழ படைப்புகளில், யுத்தத்தின் தாக்கத்தையும் அது கொடுத்த வலிகளையும் பார்த்திருக்கிறோம். அ.முத்துலிங்கத்தின் ‘கடவுள் தொடங்கிய இடம்’ நாவலைப் போல இன்னும் சில, போலி கடவு சீட்டு மூலம் புலம்பெயர் தமிழர்கள், நாடுகளின் எல்லைகளில் எதிர்கொள்ளும் நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளையும் அலைகழிப்புகளையும்…
சயந்தனின் “திசை ஒன்பது” நாவல் கவனத்தை சிதறவிடாதபடி வாசித்துத் தீர்க்க வேண்டியிருந்த நாவலாக எனக்கு இருந்தது. ஒரு செறிவான ‘நேர்கோட்டின்மை’ (non-linear) கதைசொல்லல்தான் அதற்குக் காரணம். வாசிப்பை குழப்பத்தில் நிறுத்தி, வாசகர் புத்தகத்தை மூடிவைத்துவிடாதபடி, அந்தக் கதைசொல்லல் முறையை கட்டியமைப்பதில் எழுத்தாளர் அதிக சிரத்தை எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. அதில்…
ஒரு வெள்ளி இரவு வந்த புத்தகத்தை சனி இரவே படித்துவிட்டேன். எப்பொழுதாவது இப்படி அதிசயமாக நடப்பதுண்டு. முகநூல் காலத்திற்கு முந்தைய கற்காலத்திலிருந்தே சயந்தன் அவுஸ்திரேலியாவில் வசித்த பொழுதே அவருடன் ஒரு கருத்துக்களத்தில் சண்டைபிடித்துக்கொண்டிருந்தேன். அவரை பேசியதாகவும் பின்னொருநாளில் சொல்லியிருந்தார். எனக்கு அது நினைவில் இல்லை. என்ன அதிகப்படியாக சிங்களக்கைக்கூலி…
திசை ஒன்பது ஒரு வகையில் ஆறாவடுவினை ஒத்த நாவல். ஆறாவடு நாவல் ஒரு கடும் துயரத்தில் முடியும். சயந்தன் இந்த நாவலை கரும்பகடியின் உச்சத்தில் போய் முடித்திருக்கிறார். இந்நாவலின் சிறப்பென்று நான் நினைப்பது இதன் அப்பட்டத்தன்மைதான். தலைப்பே அப்பட்டமாகத்தான் இருக்கிறது. எந்த திசையிலும் நகர விடாத வாழ்வு. வழக்கம்போல…