ஆறா வடு – இளங்கோ கல்லாணை

ஈழத் தமிழ் இலக்கியத்தில் சயந்தனின் ‘ஆறா வடு’ ஒரு முக்கியமான நாவல். அரசியலின் ஊடே அப்பாவிகளின் வாழ்வும், ஊழும் விளையாடும் அருமையான நாடகத் தருணம் இந்தப் புதினம். உணர்ச்சிப் போராட்டங்களிடையே தனித்து விடப்பட்ட தீவில் இருக்கும் அந்த மனிதர்களிடம் இந்திய ராணுவம் நடத்திய காட்டுமிராண்டித் தனங்கள் முதல் முறையாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. உலகெங்கும் விடுதலைக்காகப் போராடும் மனிதர்கள் காலின்றி தவிப்பது , நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் வாழும் சனங்களின் போராட்டமான வாழ்வில் தப்பிக்க இருக்கும் அனைத்து வழிகளையும் அடைக்கும் அரசியலையும் அம்பலப் படுத்தும் புதினம். வீரச் சாவுகளின் அல்லது விபத்துகளில் மரணம் என்பதற்கான வேறுபாடுகள் என்ன என்பதை கேட்கிறது. மக்களிடம் இருந்து விடுதலை இயக்கங்கள் அந்நியப்படும் தருணத்தையும் அழகாகச் சொல்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *