தமிழ்கவி

ஆதிரை ஒரு காத்திரமான வரலாற்றைப் பதிவு செய்து கொண்டு நகர்கிறது.கடந்த காலம் நிகழ்காலம் எனபவற்றில் தீவிரமான போக்குக் காட்டி விரைகிறது தமிழர்களின் என்பதைவிட என்னுடைய ஆறிய புண்ணை மிக மோசமாக கீறிக் கிழித்துச் செல்கிறது. எதையெல்லாம் எமது சந்ததி மறக்கக் கூடாதோ அதையெல்லாம் கச்சிதமாகப் பதிவு செய்துவிட்டது. படிக்கும் ஒவ்வொருவருக்கும் இது தம்முடைய கதை என்பது புரியும் 1958ல் தொடங்குவதாக தொிந்தாலும் 1977ல் ஆரம்பிக்கிறது 2015வரை பரந்த ஒருகாலத்துடன் நிறைவடைகிறது. சிலபல குறிப்புகளுக்கு முன் இது மீண்டும் ஒரு முறிந்த பனை போலதோற்றமளிக்கிறது.அதனால்தான் பனையை அட்டையில் நட்டார்களோ அல்லது பனை இயல்பாகவே வந்து பொருந்தியதோ யானறியேன் . பாடுகளை தொங்கலிருந்து அனுபவித்தவள் என்பதால் என்னை கலக்கியடிக்க இதனால் முடியவில்லை எனினும் இது ஓர அவசியமான அவசரமான பதிவு ஆயிரம் அரசியல் பேச்சு வார்த்தைகளால் செய்ய முடியாததை.ஆதிரை செய்துவிடும் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை . இதேகளத்தில் ஒதியமலைப் படுகொலைகளுடன் தொடங்கி ஓயாதஅலைகள் மூன்று வரை பதிவுசெய்யப்பட்ட“ உயிர்த்தெழுகை “நாடகம் நா. யோகேந்திர நாதன் எழுதியது புலிகளின் குரல் வானொலியில் தொடராக இரண்டுவருடங்களுக்குமேல் ஒலிபரப்பானது பாத்திரங்களின் பெயா்கள் வேறு சம்பவங்கள் ஒனறுதான் அந்த நாடகத்தில நான் ”குஞ்சாத்தை என்ற பாத்திரத்தில் நடித்து நடிகையாக வெளிப்பட்டேன். இந்த புத்தகம்பற்றி நிறையவெ எழுதவிரும்புகிறேன் சயந்தன் ஒரு அசகாயசூரன்தான்…

ஆதிரை வன்னிப்பிரதேச பெயர்களில்கவனம் செலுத்தவில்லை வன்னி மக்கள் தமக்கிடையே உறவு சொல்லி அழைக்கும் பழக்கமுள்ளவா்கள் .மச்சாள் அம்மான் குஞ்சியப்பு ஆசையம்மா எனறவாறு மலையகத்தமிழரகளின் உரையாடல்கள் காத்திரமாக அமைக்கப்படவில்லை அங்கே செல்லமணி மலையகத்துப் பெயரில்லை பாத்திரமும் சூழலில் ஒட்டவில்லை உரையாடல்களில் டிப்ரஷன் டிசைன்.போன்ற வார்த்தைகள்ஒட்டவிலலை என்பதுட ன் மக்கள் யுத்தகளத் தமிழிலேயே உரையாடுவதுண்டு கீசிட்டுது காத்துப்போட்டுது ரெக்கி மற்றும்பல….சமபவங்களின் கோர்வை மிக நேர்த்தியாக செல்வதால் இவற்றை களத்தை கண்காணாத தொலைவில் ரசிப்பவர்கள் புரிந்துகொள்ளலாம் இறுதியுத்த காலத்தில் செம்மலை அளம்பில் குமுழமுனை ஓட்டிசுட்டான் பேதான்ற இடங்களும் கிளிநொச்சியும் சமகாலத்தில் இடம் பெயர்ந்தவை சில இடங்களில் பிரதேசங்கள் மாறிநிற்கின்றன் ஆயினும் அது வழுவல்ல கண்டாவளையிலிருந்து புதுக்குடியிருப்பை அல்லது புதுக்குடியிருப்பு வீதியை பார்க்க முடியாது கண்டாவளையில்பேஸ இல்லை மக்களுக்குத்தான் செல் போட்டவன் எட்டேக்கர காணியில் காவல்காரர் சரி. அதே காலப்பகுதியில்தான் சுதந்திரபுரப் படுகொலை நடந்தது சுமார் நாற்பதுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டும் எழுபது பேர்வரை காயமடைந்தும் போயினர். அவரகளும் பலர் தனிக்கல் தண்ணிமுறிப்பு பகுதியாலும் மலையகத்தாலும் வந்தவர்கள்தான்.ஒதியமலைப் படுகொலையை அடுத்து பெடியள் கொக்குத்தொடுவாய் சிங்களவரைத்தாக்க விசாரிக்க வந்தவன் பொன்னம்பலத்தாரை ப் பிடிச்சு விசாரிக்க அநதாள் என்ர அஞ்சுபிள்ளை சத்தியமா என்க்குத் தொியாதெண்ண…அப்ப கூப்பிடு அந்த அஞ்சு பிள்ளையளையும் எண்டுகேட்டான வேற வழியில்லாம் பிள்ளையள கூப்பிட்டுவிட அஞ்சு பொடியளை பிடிச்சுக் கொண்டுபோன ஆமி அஞ்சையும் சுட்டுப்போட்டான்.இதை நான் பிழை சொல்ல வேணுமெண்டதற்காக சொல்லவில்லை சயந்தன் கேட்டதாலதான் சொல்லுறன் இப்பிடி சின்ன சின்னப் பிழையள்தான் இருந்தாலு ம் முட்டையிலும் மயிர்பிடுங்கிற ஆள் நான் ஈழ நாதத்துக்கு காரசாரம் எழுத வெளிக்கிட்ட நாள்ள யிருந்து எல்லாத்திலும் பிழை பிடிக்கிறதை ஒரு கலையாச் செய்வன்…சயந்தன்ர எழுத்து நடைய உச்சேலாது வேற ஏதும் இன்னும் கண்டுபிடிச்சா சொல்லுறன் ஙா ஒருடத்தில அவர் என்னையும் மென்ஷன் பண்ணியிருக்கிறார் சூ….பேசிமுடிய பதின்மூண்டு பேர் வருறமாதிரி சைக் எனக்குப் புல்லரிச்சிட்டுது அப்பிடி வந்திருந்தா….ஏன்ராப்பா கடைசியில நடந்த கொடுமை…ஆக பாலகுமாரன் ஒருவர்தான் கம்பஸில மீற்றிங் வச்சு கடைசியாகேட்டார் ஒரு கேள்வி இனி என்ன எல்லாரும் என்னோட கைகோா்க்கலாமே எண்டார்..இருபத்தொன்பது போ் கை கோர்த்து வந்தவைஆதவன் றெஜி புஸ்பராசா கலைக்கோன் எல்லாம் அதுக்க வந்தவைதான. சரி விடுவம் பெரிய காப்பியம் எழுதயுக்க கொஞ்சம் வருணனை மிகைப்படுத்தல் இருக்கத்தான் வேணும் அது குற்றமல்ல ….எப்பிடிப் பாா்த்தாலும் தனிமனித முயற்சி தலையால கிடங்கு கிண்டினாலும் கிண்டுவனேயொழிய என்னால இவ்வளவு விவரம் அடக்கி எழுத ஏலாது அதில சயந்தனில கொஞ்சப் பொறாமையும்தான் போட்டி போடேலாது பொறாமைப்படுறதை ஆா் என்ன செய்யிறது..

ஆரம்பத்திலயே சிங்களவர் வெட்டுறாங்களாம் கொள்ளையடிக்கிறாங்களாம் எண்டு சிங்கமலையும் மற்றாக்களும் வெளிக்கிடக்க சயந்தன் சின்ப்பிள்ளையா இருந்திருக்கிறார் லெட்சுமணனை அங்கயே கைவிட்டிட்டு தொங்கல்ல போய் ஆதிரையை தொட்டிருக்கிறார் ஆதிரைகளை என்பதே சரி…. மன்னார்பகுதியிலிருந்த களமுனைவிடத்தல்தீவை வளைத்தபோதே பெருமளவு மகளிர் அணியினர் கைவிடப்பட்டனா் . இதேகளமுனையில்தான்ஜெயசிக்குறுய் சமரின்போது யாழ் செல்லும் படையணிதணிகைசெல்வி உட்பட மகளிர் குழு வொன்று முற்றாக சிதைந்தது அதில் தியாகமப்பா தன் குடும்பத்தின மூன்றாவது மாவீரரை அடைந்தார் களமுனைகளின் ஆள்பிடிப்பையும் பிரச்சாரத்தையும் சிறு பிள்ளைத்தனமாக வருணிக்கும் சயந்தனின் ஆதிரை களமுனையின் சாதனைகளைப் பதிவிட பின்நிற்பது போல ஒரு பிரமை தட்டுகிறது. இன்றைக்கும் சிங்கள அரசு நிராயுதபாணிகளான தலைவனை இழந்த போராளிகளைக்கூட விடுவிக்க அஞசுகிறது என்றால் அது அந்த அச்சத்தை தமிழர்களால் இன்னும் தக்க வைக்க முடிந்திருக்கிறது என்றால் எம்பா அதை எழுத பஞ்சிப்பட்டாய். அந்த ரெண்டொரு பெட்டையளத்தவிர மற்றவையப்பற்றி…..ஊகும் எனக்குப்புாியதபல விடயங்களுள் இதுவும் ஒன்று மற்றது சாகரன் நாமகள் காதல்….சாகரன் என்ன சொன்னான் …. ராணிக்கும் முத்துவுக்கும் இடையேயான கடைசி உரையாடலும் கருக்குமுள்ளுப்போல நெஞ்சுக்கை கிடந்து அறுக்குது….என்ரா ஏன்ரா எங்களை இப்பிடி படிச்ச நாவலுக்குப்பின்னால அலைய விட்டாய்…?

www.facebook.com/thamayanthy.ks/posts/875800999205287

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *