சினிமா

வந்தேன் வருவேன்

எழுதாமல் விட்டு மூண்டுமாசம் ஆகவில்லைத்தான் எண்டாலும், மெல்பேணில இருந்து வசந்தன் ‘எழுதும், எழுதும் இல்லாட்டி தூக்கிப் போடுவாங்கள்’ எண்டு பயப்பிடுத்திக் கொண்டிருந்தார். சரி.. நானும் தான் எழுதி நாளாச்சு எண்டதாலை இந்தப் பதிவு! எழுதிக் கொண்டு போகேக்கையே விளங்கிட்டுது. உது பெரிசா நீளும் எண்டு. அதுதான் தொடராக்கிப் போட்டன். ஏற்கனவே பல தொடர்கள் தொடங்கி இடையில நிப்பாட்டியிருந்தாலும் விக்கிரமாதித்தன் மாதிரி திரும்பவும் தொடங்கியிருக்கிறன். பாப்பம் எதுவரைக்கும் போகுது எண்டு!

முக்கிய குறிப்பு:- இக் கதையில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் எல்லாம் கற்பனையே!!! ஹி ஹி ஹி

‘வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்’ எண்டதை கொஞ்சம் வளைச்சு எழுத நல்ல வடிவா இருந்தது. ‘சுப்பர் மச்சான் அந்த மாதிரி இருக்குது’ எண்டான் வசந்தன். வாயில அவனுக்கு இங்கிலிஷ்தான் ஈஸியா வருமெண்டாலும் சங்கம் தமிழ்ச்சங்கமாம், ஆனாத் தலைவர் கதைக்கிறது இங்கிலிஷாம் எண்டு ஆரும் சொல்லுவினம் எண்டதுக்காக கஸ்ரப்பட்டு தமிழில கதைச்சுக் கொண்டிருந்தான் அவன்.

‘டேய்.. உந்த எழுத்துக்களுக்குப் பின்னாலை ஏதாவது வாள், கேடயம் எண்டு ஏதாவதைப் போட்டால் இன்னும் நல்லாயிருக்குமடா..’ எண்டு பக்கத்தில இருந்த மதன் சொன்னான். நாளைக்கே அந்த டிசைனை ஆரும் நல்லாயிருக்கு எண்டு சொல்லேக்கை தன்ரை பேரும் அதில இருக்க வேணும் எண்ட விருப்பம் அவனுக்கு.

‘ச்சீ.. வாளை விட துவக்குப் படம் போட்டால் இன்னும் நல்லாயிருக்கும்’ எண்டவன்ரை பேர் சரியாத் தெரியேல்லை. ஆனா அதைப்பற்றி ஒருத்தரும் கணக்கெடுக்காததை வைச்சுப்பாத்தால் ஒருத்தருக்கும் பிரச்சனைக்குள்ளை மாட்டுப்பட விருப்பம் இல்லையெண்டு விளங்கிச்சுது.

* * *
‘டேய், ரிக்கெற் விக்கிறதுக்கு பெட்டையளையும் கூட்டிக்கொண்டு போ.. அப்பத்தான் சனம் வாங்கும் எண்டு சொன்னதை நினைக்க வசந்தனுக்கு வெக்கமாயிருந்தது. ‘இதென்ன ரண்டு பேரும் சங்கத்தில இருக்கினம். பெடியனும் போகத்தான் வேணும். பெட்டையளும் போகத்தான் வேணும் எண்டு அவனாலை தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்ள முடியேல்லை. போன கிழமை முழுக்க பெடியள் தான் ரிக்கெற் வித்தவங்கள். ஆனா ஒரு சனமும் ரிக்கெற் வாங்கிற மாதிரி தெரியேல்லை. அதுக்குப் பிறகு தான் வசந்தன் பெட்டையளையும் ரிக்கெற் விக்க போகச் சொன்னவன். ஆனா அவனோடை கதைச்ச அவன்ரை நண்பன் உதெல்லாம் உலகமயமாக்கலில சாதாரணம் எண்டு ஈஸியாச் சொல்லிப் போட்டான். எண்டாலும் பெட்டையள் ரிக்கெற் விக்கப் போன பிறகு சனமும் வாங்கத் தொடங்கிட்டுது எண்டதை இந்த ஒரு கிழமையில அவன் விளங்கிக் கொண்டான்.
* * *
‘ஓய், நாடகம் போடாமல் ஒரு புரோக்கிராம் எப்பிடிச் செய்யிறது’ மாலதி எப்பவுமே காட்டுக் கத்தல் தான் கத்துவாள். விசரன், கழுதை, எருமைமாடு எண்டதுகளோடை அரைகுறையில முடியிற சில இங்கிலிஷ் சொல்லுகளும் அவளின்ரை வாயில வரும். அநியாயத்துக்கு நாணிக் கோணி பெடியங்களோடை கதைக்க வெக்கப்படுற விசயமெல்லாம் அவளுக்கு தெரியாது. ‘போங்கோடா லூசுப்பெடியன்களா, நீங்கள் என்னை மாதிரி ஆக்களோடை சிற்றி சுத்த மட்டும் தான் விரும்புவியள். கலியாணம் எண்டால் ஓடிப் போய் ஊரில தான் பொம்பிளை எடுப்பியள். உங்களை மாதிரி நாங்களும் ஜில்மால் வேலையள் செய்திருப்பம் எண்டு பயம் உங்களுக்கு! பாவம் ஊரில இருக்கிற பெட்டையள்’ எண்டு கத்திக்கொண்டிருந்த மாலதியை ‘எடியே.. அண்டைக்கு நீ சாறி கட்டிக்கொண்டு க்ளப்புக்கு போக உன்னை உள்ளை விடேல்லையாம். பவுண்சர் தூக்கிக்கொண்டு வந்து வெளியில போட்டு விட்டானாம் ..உண்மையே’ எண்டு சீண்டினான் ஒருவன்.

‘உஷ்.. பிள்ளையள்.. இப்ப ட்ராமா பற்றிக் கதைப்பம்’ எண்டு வாணி இடையில புகுந்தாள்.

தொடரும்!

By

Read More

போய் வருகின்றேன், நன்றி!

என் இனிய மெல்போண் நகரிலிருந்து விடை பெற்று சிட்னி நகர் குடி புகுகின்றேன். அதற்கென்ன ஒஸ்ரேலியாவில் இருக்கும் இரண்டு நகர்கள்தானே என இலகுவாக சொல்ல முடியாத படி, 1000 கிலோ மீற்றர்கள் இடைவெளியில் இருக்கின்றன இந்த இரண்டு நகரங்களும். காலநிலை மற்றும் சூழலியல் இவற்றிலும் இரண்டுக்கும் வேறு பாடுகள் இருக்கின்றன.

மெல்போணில் ஐரோப்பிய கலாசார தாக்கமும் சிட்னியில் அமெரிக்க கலாசார தாக்கமும் இருப்பதாக சொல்கின்றார்கள். காலநிலையில் மெல்போணின் குளிர் இந்த வருடம் Snow கொட்டுகின்ற அளவிற்கு அதிகமானது. சிட்னியில் சீதோஷ்ண நிலை சில சமயம் இலங்கையின் காலநிலையை நினைவு படுத்தும்.

சிட்னியில் சென்று தங்கியிருந்த காலங்களில் எல்லாம் நான் ஊரில் இருப்பது போன்ற ஒரு உணர்வினை பெற்றிருக்கின்றேன். ஒரு வேளை நான் அங்கு தங்கியிருந்த வீட்டுச் சூழல் அதற்கு காரணமாயிருக்கலாம்.

மெல்போணில் வந்து இறங்கிய போது, இருந்த தனிமைப் பயம் சிட்னி சென்று இறங்கும் போது இருக்கப் போவதில்லை என்னும் போது மகிழ்ச்சியாயிருக்கிறது.

மெல்போணில் இருந்த வரைக்கும், சுவாரசியமான நிறைய நினைவுகள் இருக்கின்றன. வலைப்பதிவு பற்றி யோசித்தால் நானும் வசந்தனும் ஏற்படுத்திய குழப்பங்கள் தான் நினைவில் வருகின்றன. என்ன காரணத்தினாலேயோ நானும் அவரும் ஒருவரே என்ற கருத்து உலவியதும் அதை நாம் ஏற்பது போலவும் ஏற்காதது போலவும் பல இடங்களில் விளையாடியமையை நினைத்தால் சிரிப்பாக வருகிறது.

வசந்தன்! தென்துருவ வலைப்பதிவர் சங்க தலைமையை, நான் கண்ணாக கட்டி வளர்த்த அவ் வமைப்பை, என் கண்ணையே உமது கையில் தந்துவிட்டு செல்கிறேன். நீங்கள் தான் இனி எல்லாம்! உமது நடவடிக்கைகள் சிட்னியில் இன்னொரு தலைமையை தொடங்க வழி வகுக்கக் கூடாது.

தனித்தியங்கும் ஆற்றல் தந்த மெல்போணுக்கு நன்றி,

கலகலப்பான நண்பர்களாக இருந்த வசந்தன், அருணன் முதலானோர்க்கு நன்றி,

எனது கல்வியை சிட்னிக்கு மாற்ற அனுமதி தந்த பள்ளிக்கூடத்துக்கு நன்றி,

நான் ஒழுங்கா வேலை செய்வதில்லை என கூறிக் கூறியே.. கடைசிவரை என்னை வேலை செய்ய அனுமதித்த, Petrol Station முதலாளிக்கு நன்றி.

நன்றி நண்பர்களே, சிட்னியில் இருந்து சந்திப்பேன். தாமதமாய் என்றாலும்…

By

Read More

கறிக் கடை – குறும்படம்

ஒஸ்ரேலிய – மெல்போண் – monash பல்கலைக்கழக மாணவர்கள் கறிக்கடை என்னும் குறும்படத்தை தயாரித்திருக்கிறார்கள். 9 நிமிடங்கள் வரை நீள்கின்ற இப்படத்தினை உங்கள் பார்வைக்கு இங்கே இடுகின்றேன்.

வலைப்பதிவில் பல குறும்பட ஜாம்பவான்களும் ஜாம்பவிகளும் இருக்கிறார்கள். அவர்கள் இப்படத்தினை பார்த்து கருத்து சொல்ல வேண்டும் என்றும் உங்கள் கருத்தில் மேலும் பல புதிய குறும்படங்களை தயாரிக்க இருப்பதாகவும் படத்தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள்.

மேலும் ஏதாவது குறும்பட போட்டிக்கு தகுதியானதா எனவும் சொல்லவும்.
இப்போ படத்தை பார்ப்பதோடு.. நீங்கள் அறிந்த யாராவது நடிக்கிறார்களா எனவும் பாருங்கள்..

இங்கே அழுத்தி தரவிறக்க.. (14 MB)

By

Read More

நரகாசுரனுக்கு வீரவணக்கங்கள்!


Image hosted by Photobucket.com

5000 ஆண்டுகளுக்கு முன் திராவிட மண்ணுக்கு மேய்ப்போராக வந்த ஆரியர் திராவிட மண்ணைப் பறிப்பதற்காய் தொடர்ச்சியாகப் போரிட்டனர். போரிட்ட வேளை எதிர்த்த திராவிட தலைவர்களை அசுரராயும் தம்மை தேவர்களாயும் சித்தரித்தனர். தம் தலைவர்களை தெய்வங்களாக்கினர். அவற்றை கதைகளாகவும் புராணங்களாகவும் உருவாக்கினர். திராவிடருக்கு கொம்பு கடவாய்ப்பல் பெருத்த உடம்பு எல்லாம் பொருத்தி வேண்டாத உருவங்கள் ஆக்கினர். தம் அடி வருடிய திராவிடரை குரங்குகளாக்கினர். மதத்தால் முழு இந்தியாவையும் ஒருமைப் படுத்திய ஆரியர், பிராமண குலத்தவரால் இக் கதைகள் எல்லா மொழிகளிலும் உலவ விடடனர். நம் இன மறவர்களையே நமக்கு எதிரிகளாக்கினர்.

எம் நலனுக்காக போரிட்டு மடிந்த திராவிட அரசன் நரகாசுரனுக்கு எமது வீரவணக்கங்கள்..

எண்டு ஒரு பேப்பரில இருந்தது. படமும் அதில தான் கிடந்திச்சு. எனக்கு உந்த தீபாவளி வருசம் எல்லாம் ஏன் வந்தது எதுக்கு வந்தது எண்டதில ஆர்வம் எதுவுமில்லை.

மக்களின் மகிழ்ச்சிக்காக ஒரு நாள் இப்பிடி கொண்டாடுப்படுகுது எண்டால் நான் ஒவ்வொரு நாளையும் தீபாவளியாக்க try பண்ணிக்கொண்டு இருக்கிறதாலை இப்பிடித்தனித்தனி நாட்களில ஆர்வம் இல்லை.

ஆனால்.. ஆராவது சொந்தக்காரர் கூப்பிட்டு பலகாரம், முறுக்கு பொங்கல் இப்பிடி ஏதாவது தந்தால் கண்டிப்பாக போய்ச் சாப்பிடுவன். சொன்னாப் போலை நாளைக்கு மெல்பேணில பொது விடுமுறை.. தீபாவளிக்காக இல்லை. ஏதோ Melbourne cup எண்டு சொல்லுகினம். அதெதுக்கு எனக்கு.. லீவுதானே முக்கியம்..

By

Read More

இவர் யாருங்கோ..?

அண்மையில் யாழ்ப்பாணம் போய் வந்தபோது எடுத்த படங்களின் தொகுப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் சிக்கியது இந்தப் படம்! யாழ்ப்பாணம் கோட்டையை அண்மித்தாக -பழைய சுப்ரமணிய பூங்காவிற்கு முன்பாக – இந்த சிலை இருக்கின்றது. யாரென்று தெரியவில்லை. யாருக்காவது தெரியுமா..?

பாருங்கள்.. யுத்தத்தின் வடுக்களை தன்னால் முடிந்தளவு தாங்கி வைத்திருக்கின்றார்.


Image hosted by Photobucket.com

By

Read More

× Close