ஆறா வடு – டிசே தமிழன்

சயந்தனின் ஆறாவடு நாவல் ஒரு படகுப்பயணத்தை அடிப்படையாக வைத்துக் கூறப்பட்டாலும் அது விரியும் காலம் இரண்டு சமாதானக் காலங்களுக்கு இடையிலானது. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலிருந்து பிரபா-இரணில் ஒப்பந்தம் முறிவதற்கு சற்று முன்னரானது. இதுவரை அநேகமாய் வந்த அரசியல் புனைவுகளை எழுதியவர்களில் அநேகர் இயக்கங்களில் தங்களை இணைத்துக்கொண்டவராயிருக்கும்போது இது எல்லா அதிகாரங்களுக்குமிடையில் அல்லாடும் ஒரு தனிமனிதரின்(சனத்தின்) இருப்பிலிருந்து எழுவதால் முக்கியமான பிரதியாகிவிடுகிறது. முக்கியமாய் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழநேர்ந்த நம் அனைவருக்கும் புலிகள்/இராணுவம் பற்றிய இவ்வாறான dynamic பார்வைகளிருக்குமே தவிர, rigidity யாய் எதுவுமே இருக்காது. இல்லாவிட்டால் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்கள் மிக எளிதில் இராணுவம் யாழைக் கைப்பற்றியபின்னர் அந்த வாழ்வு நிலைக்குத் தகவமைத்துக் கொண்டிருக்க முடியாது. அடித்தளத்தில் மக்கள் தமக்கு எது வேண்டுமென நிதானமாய் யோசிக்கமுன்னரே Hierarchy முறையில் எல்லாமே மேலிருந்து பிரயோகிக்கப்படும்போது தப்புதல் அல்லது தக்கண பிழைத்தலுக்கு ஏற்ப மாறவேண்டியிருக்கும் என்பதே யதார்த்தம். முக்கியமாய் இயல்பான சூழ்நிலை என்பதே எப்படி என்பதே அறியாத போர்க்காலப் பதற்றங்களிடையே பிறந்த சயந்தனைப் போன்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு இதுவே இயல்பாய் நிகழ்வும் கூடியது.

அதை ஆறாவடு தெளிவாகப் பிரதிபலிப்பதால் நான் ஒருகாலத்தில் வாழ்ந்த வாழ்வை இன்னொருமுறை பார்ப்பதுபோல நெருக்கத்தைத் தந்திருந்தது. விமர்சனமாய் சில சம்பவங்கள் அதீத romanticized செய்யப்பட்டதையும், விடுபடலாய், யாழில் முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றி எந்தக் குறிப்பும் வராததையும் குறிப்பிடலாம். இந்திய இராணுவத்தின் காலம் பற்றிய விரிவாக எழுதப்பட்ட பிரதியில் முஸ்லிம்களின் வெளியேற்றம் குறிப்பிடாதது ஏனென்ற கேள்வி எழுதல் இயல்பானதே. மற்றுபடி 80களில் பிறந்த தலைமுறையிலிருந்து வெளிவருகின்ற நாவல்களில் இஃதொரு முக்கியமான நாவல் மட்டுமல்ல, அதன் பார்வைகள் முன்னைய தலைமுறையிலிருந்து பலவிடயங்களில் வேறுபட்டதாகவும் இருக்கும் என்பதற்கும் இந்நாவலை அனைவரும் வாசிக்க வேண்டும்.

By

Read More

ஆறா வடு – லேகா சுப்ரமணியம்

மனதை கலங்கடிக்கும் எத்தனையோ நாவல்களை புனைவு என வகைப்படுத்தி எளிதில் கடந்து விட முடிந்தது.அவ்விதம் தப்பித்து கொள்ள வழியில்லாது செய்து விட்டது சயந்தனின் “ஆறா வடு”.

“நிழலை விலக்க முடியாதபோது தோற்றுப் போன போர் வீரன் பாதுகாப்பில்லாத வெளியில் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தான் மூடியிருந்த கதவுகள் அவனை அச்சமடையச் செய்தன திறந்திருந்த கதவுகளும் அபாயமாகவே தோன்றின …” – கருணாகரன்

By

Read More

ஆறா வடு – பிரியாதம்பி

ஈழத்தமிழர்கள் குறித்து வந்திருக்கும் பதிவுகளில் சயந்தனின் ‘ஆறாவடு’ நாவல் முக்கியமானதாய் இருக்கும் என நினைக்கிறேன்…நெருக்கடியான வாழ்க்கை, இலங்கை அரசியல் சூழல், புலம்பெயர்தலின் துயரம் எல்லாம் சேர்ந்து கனக்கச் செய்யும் நாவல்..

By

Read More

ஆறா வடு – இளங்கோ கல்லாணை

ஈழத் தமிழ் இலக்கியத்தில் சயந்தனின் ‘ஆறா வடு’ ஒரு முக்கியமான நாவல். அரசியலின் ஊடே அப்பாவிகளின் வாழ்வும், ஊழும் விளையாடும் அருமையான நாடகத் தருணம் இந்தப் புதினம். உணர்ச்சிப் போராட்டங்களிடையே தனித்து விடப்பட்ட தீவில் இருக்கும் அந்த மனிதர்களிடம் இந்திய ராணுவம் நடத்திய காட்டுமிராண்டித் தனங்கள் முதல் முறையாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. உலகெங்கும் விடுதலைக்காகப் போராடும் மனிதர்கள் காலின்றி தவிப்பது , நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் வாழும் சனங்களின் போராட்டமான வாழ்வில் தப்பிக்க இருக்கும் அனைத்து வழிகளையும் அடைக்கும் அரசியலையும் அம்பலப் படுத்தும் புதினம். வீரச் சாவுகளின் அல்லது விபத்துகளில் மரணம் என்பதற்கான வேறுபாடுகள் என்ன என்பதை கேட்கிறது. மக்களிடம் இருந்து விடுதலை இயக்கங்கள் அந்நியப்படும் தருணத்தையும் அழகாகச் சொல்கிறது.

By

Read More

ஆறா வடு – அரங்கசாமி கே.வி

ஒரு நாவலிலேயே இதை சொல்லலாமா என தெரியவில்லை , இருந்தாலும் “இலக்கியம்” என்றால் அரசியல் அல்ல என்ற புரிதலுடன் எழுதும் ஈழ எழுத்தாளர்கள் என நான் வாசித்தவரையில் பிரியத்துடன் சொல்லக்கூடியவர்கள் இருவர் . அ.முத்துலிங்கமும் , சோபா ஷக்தியும் . ஈழ இலக்கியத்தின் இந்த தலைமுறை வரவு என நான் நம்புகிறேன் சயந்தனை – ஆறாவடு படித்தனன் மூலம் – . பெருநாவல் ஒன்று எழுதி அவர் அதை நிரூபிக்கக்கூடும்.

தமிழினி வெளியீடு என்ற கூடுதல் நம்பிக்கையுடன் சயந்தனின் ஆறாவடு நாவலை வாங்கினேன் , அங்கதமும் , மெலிதான விமர்சனமும் கொண்டு ஈழப்போர் , ஈழவாழ்க்கை , அகதியாவதற்கான போராட்டம் இவற்றுடன் விரிகிறது ஆறாவடு , செயற்கையான அரசியல் பிரச்சாரமோ , வலிந்து திணிக்கப்பட்ட எதுவுமோ இல்லாமல் இலக்கியப் படைப்பாக வந்திருக்கிறது ஷோபாவின் கொரில்லா படிக்கும்போது என்ன உணர்ந்தேனோ அதுவே ஆறாவடுவிலும் , என்ன – புலிகளின் இயக்கத்தை சேர்ந்தவரின் பார்வையில் இருக்கிறது .ஆனால் உண்மைக்கு பல முகங்கள்தானே ?

முழுநாவலிலும் ஓடும் மெல்லிய அங்கதம் துயரத்திலும் கூடவே வருகிறது , கடைசிப்பகுதி திசை திரும்பி இதுவரை இருந்த யாதார்த்த நாவலாக இல்லாமல் குறியீட்டுத்தளத்தில் நுழைகிறதே என எண்ணினேன் , இல்லை , அது இன்னும் உச்சத்துக்கு கொண்டுபோகிறது நாவலை .

By

Read More

× Close