செல்லக் கடிகளும் சின்னக் கீறல்களும்..

12 வருசங்களுக்கு முன்பு முற்றம் கோடி தாழ்வாரம் கிணற்றடி என வாழ்ந்த சூழலில் வீட்டில் வளர்ப்பு பிராணிகள் வளர்த்த காலத்தின் பின் மீண்டும் அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஒரு கிராமத்தின் ஏதோ ஒரு கோடியில் வாய்த்து விட்ட வீடாயினும் அமைதியும் கதவைத் திறந்தால் முன் முற்றத்தில் இறங்கி விளையாடும் சூழலும் வளர்ப்புப் பிராணிகளை விரும்பி ஏற்கப் பண்ணின.

இப்போ சற்று முன்னர் பூனைக் குட்டியாரைத் திரத்தித் திரத்திப் படமெடுத்தேன். அப்போ ஜெர்மன் மொழியில் அவர் சிந்தித்ததை முடிந்தவரை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். பார்க்கிறீங்களா..?

wweeeeee

wweeeeee

By

Read More

கூகுள் றீடரில் பின்னூட்டங்கள்

நீங்கள் கூகுள் றீடர் போன்ற செய்தி ஓடைகளுக்கான செயலிகள் ஊடாக பதிவுகளைப் படிக்கும் பழக்கம் உடையவரா?

நீங்கள் விரும்பிப் படிக்கும் பதிவுகளில் குறித்த ஒரு இடுகை தொடர்பான புதிய பின்னூட்டங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா..?

புதிய பின்னூட்டம் இடப்பட்டிருக்கும் போது அப்பதிவு கண் சிமிட்டும் நேரமளவே தமிழ் மணத்தில் தங்குவதால் நீங்கள் ஆர்வமுடன் படித்த ஒரு இடுகையை அதன் பின்னூட்டங்களுடன் பின் தொடர முடியாது போகலாம்.

உங்களுடைய கூகுள் றீடரில் கீழ்க்கண்ட முகவரியை இணைத்து விடுங்கள். இங்கே sayanthan.blogspot.com என்பதற்கு பதிலாக நீங்கள் விரும்பிப் படிக்கும் வலைப்பதிவைச் சேருங்கள். நீங்கள் Fire Box பயன்படுத்துபவராக இருந்தால் நேரடியாக அதிலேயே இந்த இணைப்பை இணைத்து விடலாம். அது இலகுவானதும் கூட.

இதெல்லாம் நமக்காகாதப்பா என்பவர்கள் இந்த முகவரியை உங்கள் இணைய உலாவியில் ஒரு தடவை முயற்சித்தாவது பாருங்கள்.

http://sayanthan.blogspot.com/feeds/comments/full

By

Read More

யாழ்ப்பாணம், ஒரு படத் தொகுப்பு

2005 நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் என்னால் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு இது. ஏற்கனவே சில இந்த வலைப்பதிவில் வந்திருந்தாலும் இத் தொகுப்பிலும் மீளவும் இடம் பெற்றிருக்கின்றன. வெளிச்சப் பெட்டி (Light Box)நுட்பத்தில் அமைந்திருக்கும் இத்தொகுப்பினை பார்வையிட ஒரு படத்தின் மீது அழுத்திய பின்னர் தோன்றும் பெரிதான படத்தின் வலது இடது பக்கங்களில் மெளஸை நகர்த்துவதால் தோன்றும் Next,Prev என்பவற்றின் மீது அழுத்தி அடுத்த படத்திற்கோ அல்லது அதற்கு முந்தைய படத்திற்கோ செல்லலாம். தனித் தனியாகவும் பார்க்கலாம்.

wweeeeee

wweeeeee

wweeeeee

wweeeeee

wweeeeee

wweeeeee

wweeeeee

wweeeeee

குறிப்பு:சின்னக் குட்டியரின் யாழ்ப்பாண படங்கள் பதிவின் தாக்கத்தினால்

By

Read More

தமிழகத்தில் ஈழ அகதிகள்

S.A டேவிட் ஐயா, 17 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் வசிக்கும், ஈழத்தினைச் சேர்ந்த ஒரு கல்வியியலாளன். தன்னை ஒரு அகதி எனவே இப்போதும் விளித்துக்கொள்ளும் டேவிட் ஐயா எழுதிய Tamil Eelam Freedom Struggle (An inside Story) நூலினை அண்மையில் வாசிக்கக் கிடைத்தது. Periyar Era என்னும் சஞ்சிகையில் அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவரைப் பற்றி ஆனந்த விகடன் இதழ் ஒன்றில் வாசித்த நினைவிருந்த போதும், இந்த நூலின் ஊடாக அவரை முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது.

தமிழீழம் என்னும் ஒரு தேசத்தின் நிர்மாணம் குறித்து, நெடிய கனவுகளோடு இருந்த அந்த மனிதர் இன்று கண்டுகொள்ளப்படாமல் இருப்பது மனதுக்குப் பாரமாய் இருந்தது. ஈழத்திற்காக ஒரு கவிதை புனைந்தாலோ, அல்லது திரைப்படத்தில் நடித்தாலோ, தூக்கித் தோளில் வைத்துக் கொண்டாடும் நாம் அந்த மனிதரை எதற்காக கைவிட்டோமோ தெரியவில்லை. ஒரு வேளை அதற்கான காரணமாய் அவரே கூறுவது போல I worked with PLOTE என்ற ஒரு வசனம் இருந்திருக்கலாம். ஆனால் அதனைத் தொடர்ந்தும் அவர் கூறுவதை அவதானிக்க வேண்டும். When I heard they were killing their own people, I left PLOTE.

cda11953 இல் அவுஸ்ரேலிய மெல்பேர்ண் பல்கலைக் கழகத்தில் (Melbourne University) தனது B.Arch பட்டப்படிப்பினை முடித்த டேவிட் ஐயா தொடர்ந்து லண்டனிலும் நைஜீரியாவிலும் நகரத் திட்டமிடல் (Town Planning) கற்கையைப் பூர்த்தி செய்திருக்கின்றார். 3 வருடங்கள், கென்யா நாட்டின் மொம்பாசா (Mombasa) நகரத்திட்டமிடலில் பிரதான பங்கு வகித்திருக்கின்றார். (Chief Architect) .1983 இல், கொழும்பில் போராளிகள் குறித்த தகவல் கொடுக்கத் தவறியமைக்காக சிங்கள அரசால் கைது செய்யப்பட்டு பனாங்கொட இராணுவ முகாமிலும், பின்னர் வெலிக்கடைச் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார். 25 மற்றும் 27 யூலைகளில் நிகழ்ந்த வெலிக்கடைப் படுகொலைகள் சம்பவத்தின் வாழும் சாட்சிகளில் இவரும் ஒருவர். பின்னர் மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப்பட்டு 26.09.1983 அன்று நடந்த சிறையுடைப்பில் தப்பித்து, 27 நாட்கள் வன்னிக் காடுகளில் தலைமறைவாகி 20.10.1983 அன்று தமிழ்நாட்டினுள் தஞ்சம் புகுந்தார்.

தனது நூலெங்கும் தமிழீழம் என்னும் நாட்டிற்காக தான் திட்டமிட்டிருந்த கனவுகளை டேவிட் ஐயா சொல்லிச் செல்கின்றார். தனது ஆரம்ப காலங்கள், இலங்கையின் அப்போதைய அரசியல் நிலைகள், வெலிக்கடைச் சிறை நினைவுகள், தனது தமிழக அனுபவங்கள் என பலதினதும் கூட்டாக அது அமைந்திருக்கிறது. ஆங்காங்கே தீவிரமாக ஈழத்தையும், இஸ்ரேலையும் சாதகமாக ஒப்பிடுகிறார். 1962 இல் இரண்டு வார காலம் இஸ்ரேல் நாட்டில் தங்கியிருந்தமையையும் Exodus என்னும் நூல் குறித்தும் சிலாகித்துச் சொல்கின்றார். I wanted to build Tamil Eelam like Israel. Now I hate the Israelis. They are slaves to America.

திரு டேவிட் ஐயா தனது நூலில் தனது தமிழக அகதி வாழ்வின் அனுபவங்கள் குறித்து எழுதியதை முடிந்தவரை மொழி பெயர்த்திருக்கின்றேன். 1983 இல் கதாநாயகர்கள் போல தாம் வரவேற்கப்பட்டதாகக் கூறும் அவர் தற்போதையை நிலை குறித்து இங்கு எழுதியிருக்கின்றார். இனி அவர்….

தமிழகத்தில் எனது அகதி வாழ்வின் அனுபவங்கள் பற்றி நான் சிலவற்றைக் கூற வேண்டும். தமிழ் நாடு முழுவதும் அதிகளவான ஈழத் தமிழ் அகதிகள் பரந்திருக்கிறார்கள். நான் வந்ததன் பிற்பாடு, அகதிகளின் தொகை எழுபதினாயிரமாக அரசாங்க முகாம்களிலும், ஒரு லட்சமாக வெளியிடங்களிலும் அதிகரித்தது. இப்போது முகாம்களில் அதே எழுபதினாயிரமாகவும் வெளியிடங்களில் முப்பதினாயிரமாகவும் உள்ளது. 1983 இல் நாம் மிக மரியாதைக் குரியவர்களாக வரவேற்கப் பட்டோம்.

ஆயினும் ரஜீவ் காந்தி கொலையின் பின், முழுமையாக எனச் சொல்ல முடியாவிட்டாலும், தமிழக மக்களால் கூட நாம் வெறுக்கப் படுகின்ற ஒரு நிலை தோற்றம் பெற்றது.

எனது இரண்டு சொந்த அனுபவங்களை இங்கு நான் சொல்ல முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்தமிழ் அகதிகள் அனைவரும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டது. நான் திருமங்கலம் காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அங்குள்ள இனஸ்பெக்டர் – அவர் பெயர் பூங்காவனம் எனச் சிலர் சொன்னார்கள் – என்னை ஒரு நாயைப் பார்ப்பது போல ஏளனமாய்ப் பார்த்தார். எந்த விதமான கேள்விகளும் இல்லை. நடுங்கும் என் கைகளிலிருந்து ஆவணங்களைப் பறித்தெடுத்துக் கொண்டார்.

நான் நரைத்து விட்ட தலையுடனும் தாடியுடனும் எழுபதை நெருங்கும் வயதில் இருந்தேன். அவரைக் கோபமூட்டும் எதனையும் செய்யவும் இல்லை. எனினும் இனஸ்பெக்டர் எனது ஆவணங்களைக் கிழித்து ஜன்னல் வழியாக வெளியே எறிந்து கத்தினார்

போ.. போய் எடுத்திட்டு வா

நான் போய் எடுத்து வரவேண்டியிருந்தது. ஏனெனில் அந்த ஆவணங்கள் இல்லாது நான் தமிழ் நாட்டில் வாழ முடியாது.

இப்போது ஈழத் தமிழ் அகதிகள் குடிவரவுத் திணைக்களத்தில் கூட பதிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நாம் பொலிஸ் நிலையத்திலிருந்தும், வங்கியிலிருந்தும், வீட்டுச் சொந்தக் காரர்களிடமிருந்தும் கடிதம் பெற்றுச் சென்று குடிவரவுத் திணைக்களத்தில் நமது பதிவைப் புதிப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தடவை நான் இத் திணைக்களத்திற்கு சென்றிருந்தேன். அப்போது 76 வயது எனக்கு. கூடவே உடல் நடுக்க வியாதியும் வேறு. நான் நீண்ட நேரமாகக் காத்திருந்தேன். எனக்கு முன்னால் நின்றவர் தனது அலுவலை முடித்து விட்டுச் சென்ற பின் நான் அதிகாரியை நோக்கிச் சென்றேன். ஆயினும் அவர் என்னைக் காத்திருக்கச் சொல்லி விட்டு மற்றவர்களை அழைத்தார். ஏறத்தாள ஒன்றரை மணிநேரம் நான் – ஒரு காலத்தில் இந்த உலகம் முழுவதையும் கால்களால் அளந்தவன் – நடுங்கும் என் உடலோடு நிற்க வேண்டியிருந்தது.

நான் எனது குடையையும் பையையும் எடுத்து வெளியேறி விட்டேன். பின்னர் குடிவரவுத் திணைக்கள பிரதான அதிகாரியொருவருக்கு என்னுடைய விபரங்கள் அடங்கிய கடிதம் ஒன்றினை அனுப்பியதையடுத்து என்னை அழைத்த அவர் நடந்த சம்பவத்திற்கு வருந்தியதுடன் எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காதெனவும் உறுதியளித்தார்.

எனது சிக்கல் தீர்ந்து விட்டது. ஆயினும் இன்னமும் ஈழத் தமிழர்கள் குடிவரவுத் திணைக்களங்களில் தமது நேரங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்த வரை இங்கே நேரம் பெறுமதியற்றது. அமெரிக்க டொலர்களே பெறுமதி மிக்கன.

இதே நூலில் பிறிதொரு இடத்தில் பத்து ரூபாய் லஞ்சம் கொடுப்பதற்கு அந்த நேரத்தில் தன்னிடம் பணம் இல்லாது தவித்ததையும் பின்னர் வேறொரு இளைஞன் உதவி புரிந்ததையும் குறிப்பிட்டிருக்கின்றார். ஒரு காலத்தில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, யப்பான், தாய்லாந்து என உலகம் சுற்றிய ஒரு பொறியியலாளன், கென்யா நாட்டின் நகரொன்றை திட்டமிட்டு அமைத்த குழுவின் தலைவன், ஈழத்திற்கான திட்டமிடல் கனவுகளோடு திரிந்தவன் இன்று ஆங்கிலம் சொல்லிக் கொடுத்து வயிற்றைக் கழுவுகிறான் என்பது எவ்வளவு சோகம்?

By

Read More

வலை நுட்பம், வகுப்பு ஆ..´ரம்பம்´

ஒரு முழுமையான வலைப்பதிவு ஆக்கத்தில், எனது பதிவான சாரல் அனுபவங்களை முன்வைத்து அதன் நுட்ப விபரங்கள் மற்றும் சீரமைத்தல் முறைகளைச் சொல்ல முயல்கின்றேன். நுட்பங்களுக்கு முன்பாக ஆரம்ப நிலையில் வலைப் பதிவொன்றினை எமக்கு ஏற்ற முறையில் சீரமைத்தலைப் பார்க்கலாம்.

ஆரம்பம் முதல் இறுதி முழுமைக்குமான பயற்சிக்காக, ஒரு தற்காலிக வலைப் பதிவினை இவ் இணைப்பில் ஆரம்பித்துள்ளேன். அவ்வப் போது இடுகின்ற பதிவுகளின் செயன்முறையை உங்களோடு சேர்ந்து நானும் இவ் வலைப்பதிவில் சோதித்துப் பார்க்கவே இவ் ஏற்பாடு.

தவிர, இப் பயிற்சிக்காக நான் பயன்படுத்தியிருக்கும் வார்ப்புருவினை, ஒவ்வொரு தடவையும் கொடுக்கப்படும் செயன்முறை விளக்கங்களுக்கு ஏற்ப, மீள் மாற்றம் செய்து, உங்களால் தரவிறக்கம் செய்து பார்வையிடக் கூடியதாகவும் ஏற்பாடு செய்திருக்கின்றேன். இதனை உடனடியாகவே உங்கள் நடைமுறையில் உள்ள வலைப்பதிவில் இட்டுச் சோதனை செய்வதை விட, பயிற்சிக்கான ஒரு தனியான வலைப்பதிவினை (காசா பணமா ) ஆரம்பிப்பது சிறந்த வழிமுறையாக இருக்கும். அவ்வாறு தொடங்கப்பட்ட வலைப்பதிவில் சில புதிய பதிவுகளைச் சேர்த்து விடுங்கள்.

வலைப் பதிவொன்றின் ஆரம்பத்தில் நான் முன்னைய பதிவில் கூறிய நுட்ப விபரங்களைப் பார்ப்பதற்கு முன்னர், அதனை அழகுணர்ச்சியோடு சீராக்கும் சில வழி முறைகள் பற்றிப் பேசாலாம். அவரவர் ரசனைக்கு ஏற்ப அழகுணர்ச்சி வேறுபடுமேயாயினும் அடிப்படையான ஒரு விடயமாக, எளிமை இருக்கின்றது.

கணணியில் ஒவ்வொரு HD இலக்கங்களுக்கும் ஒவ்வொரு வண்ணம் கிடைக்கின்றது என்பதற்காக ஆயிரத்தெட்டு வண்ணக் கலவைகளைக் கொண்டு தேருக்கு சேலை சுற்றுவது போலவும் (ஆனானப் பட்ட தேருக்கே சேலை தான், என்று யாரும் வராதீங்கப்பா.. :)) கோபுரம், குஞ்சம், தோரணம் என கட்டம் கட்டுவதும் எளிமையான விடயங்களாக இருக்காது.

இப் பயிற்சிக்காக தேர்தெடுத்த வார்ப்புரு வெள்ளை நிறத்தைப் பிரதான நிறமாக கொண்டுள்ளது. எளிமையாகவும் உள்ளது. இப்போ ஆரம்பிக்கலாமா..?

  • பயிற்சிக்காக ஆரம்பித்த வலைப்பதிவின் வார்ப்புருவை (Template) கிளாசிக் வகை வார்ப்புருவில் பேணுங்கள். Layout முறையிலான வார்ப்புருவில் இருந்தீர்களாயின், மீளவும் கிளாசிக் வகைக்கு மீளுங்கள். (தற்காலிகப் பின்னடைவு தான்.. கடைசியில் தூள் கிளப்பலாம்..)
  • இவ் விணைப்பில் இணைக்கப்பட்டுள்ள வார்ப்புருவினைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள். இக் கோப்பானது RTF வகையில் சேமிக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் கணணியில் திறந்து கொள்ள, Wordpad செயலியைப் பயன்படுத்துங்கள். அது இலகுவானது. (MS office word செயலி, வார்ப்புருவில் உள்ள தமிழ் சொற்களைப் பெட்டி பெட்டியாகக் காட்டும் வல்லமை உள்ளது.கவனம் 😉
  • Wordpad இல் திறந்து வைத்திருக்கின்ற நிரல்களை ஒரு லுக்கு விட்டுக்கொள்ளுங்க. ஆங்காங்கே சில வரிகள் பெரிய சைஸ் எழுத்திலேயும், வண்ண வண்ண நிறங்களிலேயும் தெரிகிறதா..? ம்.. இப்போ இந்த மொத்த நிரலையும், கொஞ்சமும் மிச்சம் வைக்காமல் அப்பிடியே கொப்பி செய்து அள்ளிக் கொண்டு, உங்கள் வலைப்பதிவின் கிளாசிக் வார்ப்புருப் பகுதியில் ஒட்டுங்கள்.
  • வழமையாக வார்ப்புருவில் மாற்றங்கள் செய்த பின்னர், உடனடியாகச் சேமிக்காமல் Preview பார்த்து விட்டுச் சேமியுங்கள். சேமித்த பின்னர் வலைப்பூவைப் பாருங்கள். அது இப்பதிவின் ஆரம்பத்தில் நான் தந்திருந்த பயிற்சி வலைப்பூவினை ஒத்திருக்கின்றதா..? கண்டிப்பாக இருக்கும்.

இப்போது வலைப்பதிவின் தலைப்பினைப் பற்றிப் பார்க்கலாம். கொஞ்சம் முன்பாக எனது வார்ப்புருவினைப் பயன்படுத்தி நீங்கள் அமைத்த வலைப்பதிவில் ஒரு திண்டுக்கல்ப்பூட்டு அதன் தலைப்பினில் உள்ளது. எங்களுக்கு பூட்டு வேண்டாம், திறப்புத் தான் வேணும் என்று நினைக்கிறீர்களா..? பூட்டும் வேணாம், திறப்பும் வேணாம்.. எனக்கு என்னுடைய முகம் ? தான் வேணும் என்று கூட நீங்கள் நினைக்கலாம். உங்களுக்கு என்ன எல்லாம் பிடிக்கிறதோ, அது அத்தனையையும் (அத்தனையையும் என்றால் அத்தனையும் அல்ல. அவற்றில் ஒன்றை) நீங்கள் உங்கள் பதிவில் போடலாம். ஆனால் அதன் சீர் கெடாமலிருக்க, சில விடயங்களைக் கையாள வேண்டும். பார்க்கலாமா..?

  • தரவிறக்கிய வார்ப்புருவை மீண்டும் ஒரு லுக்கு விடுங்க. அதில் சிவத்த பெரிய எழுத்தில் ஒரு வரி கீழ்க்கண்ட வாறு இருக்குமே.. அது தான் எங்கோ இருக்கிற இந்தப் பூட்டுப் படத்தை உங்க வலைப் பதிவுக்கு இழுத்து வாற சூக்குமம்.
    background-image: url(http://nea.ngi.it/templates/img/78-locked.jpg);

  • இதில நீங்கள் விரும்பகிற படத்தை இழுத்து வாறதுக்கு முன்பு ஒரு விசயம் சொல்ல வேணும். அதாவது நீங்கள் பயன்படுத்தும் படம் மிக மிகச் சரியாக அதே பூட்டுப் படத்தின் அளவில் இருந்தாக வேண்டும் (760 pixels X 180 pixels). அப்போ தான் அங்கே இங்கே தள்ளி நிற்காமல் நேராக வலைப் பதிவின் சீர் பேணப்படும்.
  • பயன்படுத்துகின்ற படத்தை 760 pixels X 180 pixels அளவில் சரியாக வெட்டியெடுத்து photobucket மாதிரியான ஒரு இடத்தில் சேமித்து அதன் நேரடி இணைப்பினைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
  • இப்போது அவ்விணைப்பினை சிவத்த தடித்த வரியில் உள்ள http://nea.ngi.it/templates/img/78-locked.jpg என்பதற்குப் பதிலாக ஒட்டுங்கள். இணைப்புக்களும் வழிமுறைகளும் சரியானதாக இருப்பின் இப்போ உங்கள் வலைப் பதிவில் பூட்டு உடைக்கப்பட்டு சொந்தப் படம் ரிலீசாகியிருக்கும்.

இப்போ Home Work செய்யலாமா..? இன்னொரு தடவை wordpad இல் உள்ள வார்ப்பருவை உற்றுப் பாருங்க..? ஆங்காங்கே நீல நிறத்தில் தடித்த எழுத்தில் நான், பிடித்தவை, இணைப்புக்கள், முன்னைய காலம் ,இதற்கு முன், சோதனை 1, சோதனை 2 என சொற்கள் தெரிகின்றனவா..? அவை என்ன என்பதை ஊகித்திருப்பீர்கள். இவற்றை உங்களுக்குப் பிடித்தமான முறையில் மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.

மாமு.. இதெல்லாம் நடக்குத் தெரிஞ்ச விசயம் தான்.. நீ இதையெல்லாம் விட்டிட்டு நேராவே முன்னைய பதிவில் சொன்ன 5 நுட்பங்களையும் சொல்லலாம் எண்டு நினைச்சீங்கள் எண்டால் சொல்லுங்கோ.. அதில இருந்தே ஆரம்பிக்கலாம்.

சந்தேகங்களைப் பின்னூட்டங்களாகப் போட்டால் நான் மட்டுமல்ல வேறும் பல வலைப் பதிவர்கள் அதற்கு விடை கொடுக்க முடியும்.

By

Read More

× Close