வசந்தன் பின்னூட்டமொன்றில் சொன்னது போலவே, தமிழ் வலைப்பதிவுலகம் சிவாஜி நோயால் பாதிக்கப் பட்டுத் தான் இருக்கிறது. சிவாஜி என்ற சொல் அற்ற தமிழ்மண முகப்புப் படத்தை படம் பிடித்து தருபவருக்கு பரிசு அறிவிக்கலாம் என்ற அளவிற்கு இருக்கிறது நிலைமை. புத்தக மீமி, திரைப்பட மீமீ போன்ற சங்கிலித் தொடர் பதிவுகள் போல, அடுத்து நான் சிவாஜி பற்றி எழுத அழைக்கும் ஐந்து நபர்கள் இவர்கள் என்பது போன்ற தோற்றத்தில் சுற்று…
Author: சயந்தன்
Cherry பழம் போல் சிவந்த..
சிறு வயதுகளில் கடைகளுக்குச் சென்று ஐஸ்கிரீம் சாப்பிடும் போது அதன் மேலே தனித்த இனிப்புடைய சிவந்த பழமொன்றை வைத்திருப்பார்கள். சில கேக் வகைகளிலும் அந்தப் பழம் இருப்பதுண்டு. அவை cherry பழங்கள் என தெரியும். இங்கே கீழ்வரும் பழங்களும் cherry (ஜெர்மன் மொழியில் Kirshe)எனப்படுகின்றன. சிவப்பாகிப் பின்னர் சாப்பிடக் கூடிய நிலையில் ஒரு வித கருஞ் சிவப்பு நிறத்திற்கு வருகின்றன. சுவையில் கூட ஊரின் நாவற் பழத்தை நினைவு படுத்தும்…
மே 31 – எரியும் நினைவுகள்!
1981 மே 31 நடு இரவு ஓர் இனத்துக்கெதிரான அழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக யாழ்ப்பாண நூல் நிலையம் எரியூட்டப்பட்டது. தமிழர்களின் மனங்களில் ஆறாத ரணமாயுள்ள அந் நூலக எரிப்புக் குறித்து நண்பர் சோமிதரன் எரியும் நினைவுகள் என்னும் ஆவணப் படமொன்றைத் தயாரித்துள்ளார். படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் யாழ் நூலகம் குறித்தும் எரியும் நினைவுகள் ஆவணப்படம் குறித்தும் சோமிதரன் வழங்கிய கருத்துக்களை இங்கு கேட்கலாம்.
என்ரை மனிசியும் ட்ரைவிங் பழக வேணும்
மெழுகுதிரியை ஊதி அணைக்கிறதையும், கேக் வெட்டுறதையும், அடுத்தடுத்து பத்துப்பேர் வீடியோகமெராவை முறைச்சுக் கொண்டு நிற்கிறதையும் பாக்க எரிச்சல் எரிச்சலா வந்தது. பக்கத்தில மடியில ஒரு குழந்தையை வைச்சுக் கொண்டிருந்தவ, தான் சிங்கப்பூரில இருந்து எடுப்பிச்ச நெக்லஸைப் பத்தி வலு தீவிரமாக என்ர மனைவியோடை கதைச்சுக் கொண்டிருந்தா. அவவின்ர இன்னொரு குழந்தை இந்த ஹாலுக்குள்ளைதான் எங்கேயோ விளையாடிக்கொண்டிருக்குதாம். மனுசன் அங்காலை பார்ட்டியில நிற்கிறாராம். அங்கை வந்த பெரும்பாலான ஆண்கள் பார்ட்டியில தான்…
மலைநாடான் மற்றும் கானா பிரபா காலத்திலே…
வேறொன்றும் இல்லைங்க… சும்மா நாங்க முன்று பேர் சேர்ந்து மிகப் பழைய காலத்துப் பாடல்கள் பற்றியும் அதுக்கு அப்புறமா வந்த படத்துப் பாடல்கள் பற்றியும் பேசினோம். நாங்கள் பிறக்கிறதுக்கு முன்பே வந்த பாடல்கள் சில ஏன் எங்களுக்குப் பிடிச்சிருக்கு அந்தப் பாடல்கள் என்ன என்பது தான் இந்த முறைக்கான விசயம். அவ்வப் போது பாடியுமிருக்கிறம் எண்டு சொல்லி உங்களை இப்பவே எச்சரிக்கையும் செய்யிறம். வழமையாவே நாங்கள் ஒலிப்பதிவுகளைத் தொடங்கிறதும் முடிக்கிறதும்…