மனப்பிறழ்வின் நாட்குறிப்பேடு அஷேரா – தி.லலிதகோபன்

அறிமுகம்

சயந்தன் கதிர் என்று அழைக்கப்படும் சயந்தன் அவர்களின் மூன்றாவது நாவல் பிரதி அல்லது ஆதிரைக்கு பின்னரான பிரசவம் என்றோ இந்த அறிமுகத்தினை சுருக்கமாக நான் கடந்து விடலாம். ஆனால் அதற்கு அப்பாலும் சில செய்திகளை சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது.

முதன்முதலாக “ஆதிரை” என்ற பெயரினை முகநூலின் மூலமாக கேள்வியுற்றதன் பின்னர் நான் அந்த நூலினை வாசிப்புக்காக தேட முற்பட்டதன் காரணம் “ஆதிரை” என்ற பெயர் என்னுள் ஏற்படுத்தியிருந்த மயக்கமே. இதை பிரமிள் அவர்களின் மொழிதலில் குறிப்பிடுவதானால் “இடையறாத உன்பெயர் நிலவிலிருந்திறங்கி என்மீது சொரியும் ஓர் ரத்தப் பெருக்கு.” எனலாம். ஆனாலும் ஆதிரைக்கான எனது காத்திருப்பின் நாட்கள் சுமார் ஐந்து வருடங்கள். ஆனால் அஷேராவுக்கான எனது தேடல் அந்த பிரதி வெளியிடப்பட்டு முப்பது நாட்களை கூட தாண்டியிராமலேயே கையில் கிட்டிற்று. நன்றி சயந்தன் அவர்கட்கு.

உண்மையை கூறுவதாயின் ஆதிரை மீதான “பெயர் மயக்கங்கள்” இந்த நாவலின் மீது எனக்கிருக்கவில்லை. எனினும் ஆதிரையின் தொடர்ச்சியாகவே இந்த பிரதி மீதான வாசிப்பு செயன்முறையினை நான் நிகழ்த்தியிருந்தேன். ஏனெனில் ஆதிரை நாவலின் முடிவு என்னை “யுத்த சூன்ய பிரதேசம்” ஒன்றுள் தள்ளியிருந்தது அல்லது நான் புத்தனாகியிருந்தேன்.

போரும் பிரதிகளும்.

இலங்கையின் தமிழ் எழுத்தாளர்கள் அல்லது புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், போரினை தவிர வேறு எதனையும் எழுத வக்கணையற்றவர்கள் என்ற குற்றச்சாட்டினை தமிழகத்தின் சில தரப்புக்களிடமிருந்தும்; ஏன் “ஈழத்தின் மாற்றுக்கருத்தியல்” தரபுக்களிடமிருந்தும் நாம் கேட்கக்கூடியதாக இருக்கிறது. என்னப்பொறுத்தவரை “இதுவோர் காலத்தின் கொடுப்பினை” என்றே கூறுவேன். பானையில் இருப்பதுதான் அகப்பையில் வரும். போர்க்காலமும் அதனை பின்தொடர்ந்து வருகின்ற பின்போர்க்கலமும் ஈழத்து எழுத்தாளர்களிடம் தந்திருப்பது “அமுதசுரபி” போன்ற அள்ள அள்ள வற்றாத “கற்பனை” வார்ப்பன்று. மாறாக ஈழத்து பேனாக்களிடம் இருப்பது யதார்த்தப் பானைகளே. வரலாற்றின் துயரமென்பது யாதெனில் பாலஸ்தீன கவிதைகளையே இன்று வரைக்கும் ஆகச்சிறந்த போரியல் இலக்கியமாக கொண்டாடும் இதயங்கள் ஈழத்து போரியல் படைப்புக்களை எள்ளுவதும் அவற்றினை புறக்கணித்து விடுவதுமாகும்.

ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டிருக்கலாம், ஆனால் போருக்கான அடிப்படை காரணிகள் இன்றும் அதே நிலையிலேயே இருக்கின்றன. மேலும் பின் போரியல் கால விளைவுகளிலிருந்து இன்னமும் விடுபட முடியாத ஒரு சமூகமாகவே ஈழத்து தமிழ் சமூகம் இன்றும் வாழ்கிறது. எனவே போரினையொட்டியும் அல்லது அதனை இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை பேசுபொருளாக கட்டியம் கூறியபடியும் இன்னும் நூறு அல்லது ஆயிரம் பிரதிகள் ஈழத்திலிருந்து எழும்.

உலக வரலாற்றில் எத்தனையோ போர்கள் நடந்து முடிந்துள்ளன. நடந்து முடிந்த நிகழ்வுகளின் வரலாற்று சுருக்கங்களாய் தூபிகளும் நினைவுச்சின்னங்களும் எம்முன்னே எழுந்து நிற்கின்றன. அவற்றுக்கு இருக்கும் “சனநாயக வெளிப்படுத்தல்கள்” ஈழத்தின் படைப்புக்களுக்கு இல்லையா என்ற கேள்வியுடன் இந்த படைப்பின் மீதான எனது வாசகர் குறிப்பினை எழுதத்தொடங்குகிறேன். அதற்கு முன்னம் ஒரு கொசுறு செய்தி இன்றும் கூட “ஹாலிவுட்டில்” இரண்டாம் உலகப்போர் அல்லது அதற்கு முந்தைய போர்கள் குறித்து நிறைய திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. அவற்றுக்கான விமர்சனங்கள் கூட எழுதப்படுகின்றன.

இருட்டும் காமமும்

சங்ககாலத்தில் இருந்தே ஏன் அதற்கு முன்பிருந்தே இன்னும் சிறப்பாக கூறப்போனால் இருளும் காமமும் ஒன்றையொன்று சார்ந்து வாழும் பிறவிகளாய் இலக்கியங்களில் கூறப்பட்டு இருக்கின்றன. காமம் அல்லது பாலியல் சார் வினைகள் ஒளித்து பேண வேண்டிய ஒன்றாகவே கற்பிதம் செய்யப்பட்டு வருவதை நாம் காணலாம். அதனாலேயே இருளை அதன் குறியீடாக ஆக்கி கொண்டனர் போலும்.

இந்த பிரதியிலும் காமமும் இருட்டும் படிமங்களாகி பிரதி முழுவதும் விரவிக்கிடப்பதனை நாம் காணலாம். இதனை இன்னொரு விதமாக கூறினால் பகலின் வெளிச்சத்தில் குருடர்களை போல வரும் பாத்திரங்களின் நிஜமுகம் இருட்டில் தெளிவாக தெரிகின்றது. ஒவ்வொரு பாத்திரத்தினதும் உளவெம்மைகளை தணிக்கும் மருந்தாக இருள் இருக்கின்றது.

அருள்குமரனை பொறுத்தவரை அம்மாவின் ‘மறைகாமமும்’ அமலி அக்கா மீதான “இருட்தேடல்களும்” அவனின் மனச்சிதைவிற்கு மூல காரணங்களாகின்றன. ஆனாலும் அவனின் இந்த “முறைசாரா” அனுபவங்களே முதலும் இறுதியுமாய் அவன் அனுபவித்த ஆரதனாவுடனான காமத்தை “ஓசோவின் காமமாக்கியது”

“மனம் அலைவற்றிய ஒரு கடலாயிருந்தது. அசைவற்ற நிசப்தம். அன்றைக்கு ஆராதனா பரிசளித்த காமம், கோவிலின் நிவேதனம்போல் இருந்ததென்று அருள்குமரன் குறிப்பிடுகிறான்”(பக்-31)

எனினும் இந்த குற்றவுணர்வு மீதான தொடர்ச்சியான அருட்டல்களே அவனின் வாழ்வினை திசை மாற்றியதுடன் அவனை “மகத்தான காரியங்கள் ” செய்யும் ஒருவனாகவும் மாற்றி விடுகிறது.

தாயகக்கனவினை சுமந்த அற்புதம் போன்ற இளையோரின் பயணங்கள் இருளிலேயே தொடங்கி இருளிலேயே முடிந்து போயின. இது காலத்தின் மீதான எமது வன்மம் நீடித்து நிலைப்பதற்க்கான ஏதுவாகின்றது.

“அற்புதம் இரவை சந்தேகத்தோடு பார்த்தான். அதற்கு ஆட்களை காணாமல்போகச் செய்யும் வல்லமையிருந்தது’.(பக்-92)

தொடர்ந்த இரவுகளில் தன்னை தொலைத்த ஒருவனின் வாழ்வு, நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மேல் தொலைக்காட்சி அலைவரிசைகளில் வரும் விளம்பரப்பெண்களின் உடல்களை இரசிப்பதனூடே காமத்துக்கு வடிகால் தேடும் ஒன்றாக நீள்கிறது.

போரியல் நிலத்துக்கு அப்பாற்பட்டதான அபர்ணாவின் அன்றாடங்களின் இரவின் மீது வீழ்கிறது ‘அரங்கன்’ எனும் கல். அந்த கல் வீச்சு தன்மீது ஏற்படுத்திய காயங்களுக்கு களிம்பாக நரகமாய் தோன்றும் இரவுகளில் தன்னையே பலியாக்குகிறாள் அவள். இது பெண்ணுடல் மீது பாரம்பரியமாக ஆண்களால் நிகழ்த்தப்படும் வன்முறைக்கு சான்றாகும்.

“அவருடைய அருவருப்பான கதையை அப்பொழுதே நிறுத்துவதற்கு எனக்கு ஒரேயொரு வழிதான் தெரிந்திருந்தது. பிறகு அதுவொரு நரக இரவு”(பக்-149)

இரவும் பாலியலும் இந்த மூன்று பாத்திரங்களை அலைக்கழித்து வாழ்வின் அந்தம் வரைக்கும் துரத்தி விடுவதாகவே கதையின் மையநீரோட்டம் இருக்கிறது. ஆனால் இரவின் எதிர்வினைக்கான மூலவினைகள் பகலிலேயே நிகழ்கின்றன.

அருள்குமரனின் வாழ்வில் அச்சத்தையும் ஆற்றாமையினையும் தொடராக நீட்டி செல்லும் குண்டுவெடிப்பு நிகழ்வதும் ஒரு பகலிலேதான்; அற்புதம் தனது பெயரினை இன்னொரு பெண்ணுடன் இணைத்து காண்பதும் ஒரு பகலில்தான். இதனை விட அபர்ணாவும் பகலில் தன்மீது எய்யப்படும் அம்புகளுக்காய் இரவில் தன்னையே இரையாக தருகின்றாள்.

இவ்வாறாக பகலும் இரவும் வெறுமனே பொழுதுகளாய் இருக்க காமமே மூலவிசையாகி இந்த மூன்று பாத்திரங்களினதும் காலத்தின் தேரினை ஓட்டிசெல்கிறது.

அஷேராவும் ஏகெரி ஏரியும்

பொதுவாக நாடற்ற மக்களின் கதைகளில் காணக்கூடிய பொதுவான அமைப்பென்பது தொன்மங்கள் குறித்த கதையாடல்களாகும். இங்கே ‘அஷேரா’ என்பதும் ஏதேன் மக்களின் வழிபாட்டுக்குரிய ஒரு பெண்தெய்வமாகும். அது பார்வைக்கு பயங்கரமாக இருந்த போதிலும் கூட குழந்தைகளுக்கு பாலூட்டுவதாய் காட்டப்படுவதனூடே பெண்களின் கருணையும் இரக்கமும் மீண்டும் மீயுணர்வுகளாய் நிறுவப்படுகின்றது. கதையின் இறுதிப்பகுதியில் அருள்குமரனின் தற்கொலைக்கு பின்னர் அவனின் வாக்குமூலமாக அஷேரா குறித்த குறிப்பினை ஆசிரியர் கையாள்வது ஒரு உத்தியேதான்.

அருள்குமரனின் தாயினது அனுபவங்கள் மற்றும் அமலி அக்காவினது அத்துமீறல்கள் மூலமாக பெண்கள் குறித்த மரபுரீதியான விம்பங்கள் உடைக்கப்படுகின்றன. அவனின் வாழ்வில் ஆராதனா ஒரு வித்தியாசமான பிரதிமையாக இருந்தபோதிலும் பெண்கள் குறித்த அவனது எண்ணங்கள் “ஒரு விதமாகவே” இருக்கின்றன. இதனை நாம் அபர்ணாவுடனான உரையாடல்களிலும் உணரக்கூடியதாய் உள்ளது.

அப்பால் அற்புதத்தின் வாழ்வில் குறுக்கிடும் முகம் தெரியாத “கனிட்டா” மற்றும் முகம் தெரிந்த “அமந்தா” போன்றோரும்; மறுபுறத்தே தமிழ் மரபுக்கு மாற்றாக ஒரே நேரத்தில் இருவரை நேசிக்கும் அபர்ணா போன்றோர் இந்த கதையில் நாம் தரிசிக்கும் ‘சர்ச்சைக்குரிய’ பெண்கள். இவ்வாறு பெண்கள் குறித்த எதிர்விம்பங்களை ‘அஷேரா’ என்ற தொன்ம வார்ப்பினூடே துடைத்தெறிகிறார் ஆசிரியர்.

கதையில் நாம் “அஷேரா”வினை தரிசிக்கும் இன்னொரு இடம், சிங்கப்பூரிலிருந்து சுவிசிற்கு அபர்ணா வருகையில் அவளின் பெயர் “அஷேரா”வாக இருக்கின்றது. இங்கே கதையில் வரும் பாத்திரங்கள் யாருமே தாங்கள் சுயமாக தங்களின் இயல்பில் இல்லை. இதற்கான வலுவான காரணம் அவர்கள் எதிர்கொள்ளும் சூழல்களே. அந்தவகையில் முகமற்ற மனிதர்களாய் வாழ்வோருக்கான குறியீடாக “அஷேரா” உள்ளமை சிறந்த தேர்வே.

ஏகெரி என்பது இன்னொரு தொன்ம குறியீடாகும். அது எப்போதும் ஒரு துன்பியலை சுமந்து நிற்கிறது. விடுதலை வீரர்கள் தங்கள் உயிரினை மாய்க்கும் ஓரிடமாக அது உள்ளது. அந்தக்கால ஆஸ்திரிய வீரர்கள் தொடங்கி நஜிபுல்லா மற்றும் அருள்குமரனும் கூட இந்த ஏரியிலேயே தங்களை மாய்த்துக்கொள்வது தொடர்கின்ற ஒரு முடிவற்ற கதையாகும்.

நாவலின் அரசியல்

நாவல் கூறும் அரசியல் என்பது பிரதானமாக, போர் எவ்வாறு தனிமனிதர்களின் சுதந்திர வாழ்வினை முடமாக்கியது என்பதுவும் மற்றும் அவர்களின் தற்கால நடைப்பிணமான வாழ்வினையும் கூறிச்சென்று நிறுவுகின்றது. இதனை நாம் அற்புதம் என்ற பாத்திரத்தின் வார்ப்பின் மூலமாக அறிந்து கொள்கிறோம். ஒரு இலட்சியத்தினை தன்னுள் வரித்து பின்னர் அது கானல் நீர் என்று அறிந்த பின்பும் கூட அதனுள்ளிருந்து வெளியேற முடியாது தவிக்கும் ஒரு மனிதனாக அற்புதம் இருக்கிறான். நேரடி களத்தில் அவன் நின்ற காலங்கள் குறைவேயாயினும் கூட அவனைச்சுற்றி பின்னப்பட்ட விஷவலையில் இருந்து வெளியேற முடியாது; இறுதியாக அந்த விஷவலைக்கே தன்னை இரையாக கொடுத்த ஒரு மனிதனாக அவன் இருக்கிறான்.

அருள்குமரனை பொறுத்தவரையில் அவனது பிறழ்வான காம நடத்தை மற்றும் அதனால் அவன் உணரும் குற்றவுணர்வு என்பனவற்றிலிருந்தான மீட்சியாக அவன் “போருள்ளிருத்தலை” தேர்வு செய்கிறான். எனினும் அவனின் “நடவடிக்கை” ஒன்றில் அவன் கண்ட காட்சியொன்று அவனை மீளமுடியாத உளச்சிக்கல் ஒன்றுள் தள்ளி இறுதியில் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் முடிவுக்கே தள்ளி விடுகிறது. அருள்குமரனின் பாத்திரம் யதார்த்தப்புனைவு என்றே கொள்ள முடியும். ஏனெனில் தாயகவிடுதலை என்ற இலட்சியத்தினை வரித்து கொள்ளும் யாவரும் அந்த உணர்வினால் உந்தப்பட்டு வந்தோரல்ல. இவ்வாறான அற்ப காரணங்களினால் அமைப்புக்களில் இணைந்து “அற்புதங்கள்” செய்தோர் பலரை வரலாறு தன்னகத்தே கொண்டுள்ளது.

‘அபர்ணா’ பாத்திரம் பெண்கள் மீதான ஆண்களின் அடக்குமுறையினை பேசுகின்ற ஓர் வார்ப்பாகும். ஆனால் அந்த பாத்திரம் கூட வழமைக்கு மாறான ஒன்றே. வழமையாக பிரதிகளில் வருவது போன்று தீவிர பெண்ணியத்தினை ‘அபர்ணா’ உரைத்தாலும் கூட , அவளும் கூட ஒரு மனப்பிறழ்வான நடத்தை கொண்டவளாகவே சித்தரிக்கப்படுகிறாள். ஏனெனில் கணவனின் வக்கிரத்தினை தீர்க்க தன்னையே தருவது மற்றும் கொடுமைக்கார கணவன் என்றறிந்தும் அவனிடமிருந்து முழுதாக விலக விரும்பாமை என்பன அவளின் உளச்சிக்கலுக்கான சான்றுகளாகும்.

ஆதிரை நாவலினை தேசிய விடுதலை போராட்டத்தின் பின்னணியிலும் அந்த காலத்தில் காணப்பட்ட சாதிய முரண்கள் குறித்தும் நகர்த்திய கதாசிரியர், இந்த பிரதியினை அமைப்புக்கள் மத்தியில் காணப்பட்ட பிளவுகளை முன்னிறுத்தி அதனை விமர்சனங்களுக்குள்ளாக்குகிறார். இதில் பாராட்டப்பட வேண்டிய அமிசம் என்பது இதனை அவர் ஒரு குறிபிட்ட அமைப்புக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தவில்லை என்பதாகும். உண்மையில் இந்த நாவலில் வரும் பாத்திரங்களின் மனபிறழ்வுகளின் மூலகாரணி அடக்குமுறை அரச இயந்திரமன்றி, மக்களுள்ளிருந்து மக்களுக்காய் தோன்றிய அமைப்புக்களே என்பதனை அறிகையில் ஈழப்போர் குறித்து இன்னும் அதிகமதிகமாய் பேச வேண்டிய பக்கங்கள் அதிகமுண்டு என்பதை அறிகிறோம்.

இந்த நாவலிலே வருகின்ற இன்னொரு துனைப்பாத்திரமாகிய நஜிபுல்லா என்பது ஆழமாக உற்று நோக்கவேண்டிய இன்னொரு பாத்திரமாகும். நஜிபுல்லாவின் கதை மற்றும் பின்னணி என்பன ஈழத்தையும் ஆப்கானிஸ்தானையும் பொதுமைப்படுத்தலுக்குள் கொண்டு வருவதுடன் “எல்லா பாதையும் ரோமுக்கே” என்பதையும் நிறுவுகின்றது. விடுதலை போராட்டங்களில் ஈடுபட்ட முன்னாள் போராளிகளின் சமகால சிக்கல்களை அருள்குமரன் மற்றும் அற்புதத்துடன் இணைந்து நஜிபுல்லாவும் பகிர்ந்து கொள்கிறான். ஈழத்து புஸ்பகலாதேவியின் முடிவும் ஆப்கானிஸ்தானின் ஷ்ர்மினாவினதும் முடிவுகள் ஒன்றாயிருப்பது விடுதலை போராட்டங்களின் ஒத்த நிறத்தினை அதாவது அது உரித்த மாமிசத்தின் நிறத்திலிருப்பதை புட்டுக்காட்டுகிறது.

ஈழப்போரின் பின்னணியிலான அழுக்கு அரசியலை இயக்கங்கட்கு இடையிலான முரண்பாடுகளை விமர்சன நோக்கிலே பிரதி கூறி சென்றாலும் உண்மையான போராளிகளை அது கேலிச்சித்திரமாக்கி விடவில்லை. அவ்வாறான சில பாத்திர வார்ப்புகளே ரொக்கெட், மோகன்லால் மற்றும் அண்ணாச்சி என்பனவாகும். இந்த பாத்திர வார்ப்புக்களை கூட ஆசிரியர் அமைப்புக்கள் கடந்து கட்டமைத்திருப்பது போராட்டம் மீதான அவரின் யதார்த்த நோக்காகும்.

நாவலின் அமைப்பு

மூன்று தனி நபர்களின் “போருள்ளிருத்தல்” மற்றும் போருக்கு பிந்தைய அனுபவங்களினை இந்த பிரதி ஒரே சீராய் கதை கூறாது சிதைந்த வடிவங்களினூடே பிரதி நகர்கிறது. இந்த சிதைந்த வடிவங்களினூடே கதை கூறலே பாத்திரங்களின் கனதியினை வாசகர் மனதில் பதிய வைக்கும் ஒரு உத்தியாக கூறலாம். உண்மையில் அருள்குமரனின் கதையினை அகர வரிசையில் கூற முற்பட்டிருப்பின் அதை அருள்குமரனின் மீதான அனுதாப பார்வையினை வீசுவதனூடே வாசகன்  இலகுவாக கடந்து சென்றிருக்க இயலும். ஆனால் அவ்வாறில்லாமல் பிரதியினை நகர்த்தும் உத்தியானது வாசகனை கதை முடிந்தபின்பும் பிரதியுடன் கட்டி வைத்திருக்கும் உத்தியாகவே நாம் கருதலாம்.

ஆதிரை பிரதியானது ஒரு கட்டிறுக்கமான அமைப்புடன் எழுதப்பட்ட ஒன்றாக இருக்க, இந்த பிரதியானது ஒரு எள்ளல் நோக்கிலே கதையினை நகர்த்தி செல்கிறது. இந்த கதையில் வருகின்ற நகைச்சுவைகள் கூட “வடிவேல்”தனமாகவன்றி “சந்திரபாபு” பாணியில் இருப்பது ”சோகச்சுவை”. கிட்டத்தட்ட ஷோபாசக்தியின் பாணியிலமைந்த எழுத்து நடையில் இந்த நாவல் நகர்வது ஆதிரையினையும் அஷேராவினையும் பிரிக்கும் ஒரு கோடாக உள்ளது.

தெறிப்புக்கள்

‘இந்த பன்னிரெண்டு பேரில் யாரெல்லாம் புலிகளுடைய உளவாளிகள்’ என்றவாறாக சப்பறம் விசாரணையை தொடங்கினான். (பக்-62)

“என்னுடைய ………….. புணர்வதட்கென்றே உங்களுடைய ஊத்தை நாடுகளிலிருந்து இங்கு வந்து தொலைக்கிறீர்கள்'(பக்-67)

“நல்லதாகிவிட்டது. கருணாவுடைய ஊர் என்றால் நாங்கள் நம்பி ஒரு வேலையை செய்ய முடியாது”(பக்-79)

“யாரோ சோஷலிச தமிழீழத்தில் சீதனம் கொடுக்க தேவையில்லை என்று சொல்லவும் அதை நம்பி படகேறிவிட்டான்”(பக்-98)

“இந்த சண்டையில் தமிழ்ப் பெடியங்களுடைய உயிரிழப்பை பன்னிரெண்டுக்கு மேற்படாமல் பார்த்துகொள்வதுதான் என்னால் செய்ய முடிந்த ஒரேயொரு காரியம்”(பக்-125)

“எனக்கு பிள்ளைகள் இருந்திருந்தால் உம்மட வயதுகளில்தான் இருந்திருப்பார்கள். பிறகு அண்ணனும் தம்பியும் சுடுபட்டே செத்திருப்பார்கள்.நல்லவேளையாக அப்படியொரு துயரம் நடக்கவில்லை”(பக்-130)

முடிவுரை

போருக்கு பின்னரான தனிமனிதர்களின் மனபிறழ்வுகளை முன்னிறுத்துவதன் மூலம் ஈழப்போரின் பேசப்படவேண்டிய பக்கமொன்றை சயந்தன் அவர்கள் இந்த பிரதியினூடே திறந்து விட்டுள்ளார். மற்றுமோர் நித்திரையற்ற இரவினை எனக்களித்தவாறு அஷேரா முற்றிற்று.

By

Read More

அந்நிய நிலத்தின் மௌன ஓலம் – வேலு மாலயன்

புலம்பெயர் படைப்பாளர்களில் ஆறாவடு மற்றும் ஆதிரை நாவல்கள் வழியே தமிழ் இலக்கிய பரப்பில் மிகுந்த கவனத்தை சம்பாதித்தவர் எழுத்தாளர் சயந்தன் அவர்கள்.
சயந்தனின் முந்தைய இரண்டு நாவல்களிலிருந்த போர்,அரசியல் ஆகியவற்றிலிருந்து விலகி எழுதப்பட்டுள்ளது புதிய நாவலான அஷேரா.

ஈழத்தில் தமிழராய் பிறந்து இனப் போரின் வலி மற்றும் துயரில் உழண்ட ஒருவர் அவரது படைப்புகளில் அந்த வலியின் துயரை,உணர்ச்சிகள் மேலோங்க பதிவு செய்வது என்பது எப்போதும் தவிர்க்க முடியாதது.

ஆனால் சயந்தனின் படைப்புகள் உணர்ச்சிகளின் வெளியிலிருது ஈழத் தமிழர்களின் துயரை பேசுபவை.

ஈழ மண்ணில் தமிழீழம் மலர போராடிய ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே என்பது இலங்கை தாண்டிய மற்ற நாட்டவர்களின் பொது எண்ணம்.

ஆனால் தமிழீழம் மலர ஏறத்தாழ நாற்பதுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் தோன்றின எனவும் அந்த இயக்கங்களுக்குள் ஏற்பட்ட முரண்கள்,அரசியல்,சண்டைகளை சில மனிதர்களின் கதைகள் வழியே அஷேரா நாவலில் பதிவு செய்கிறார் சயந்தன்.

புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறிய அருள் குமரன்,தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) இயக்கத்திலிருந்து வெளியேறிய அற்புதம் ஆகியோரின் மனம் எழுப்பும் குற்ற உணர்ச்சி,காமம், காழ்ப்பு,இழந்த தாய் நில தவிப்பு,அந்நிய மண்ணில் அகதியாய் வாழ்தலின் தவிப்பை நாவலாக்கியுள்ளார் சயந்தன்.

காமம் போரினும் கொடியது. அருள்குமரன் தன்னுடைய பால்ய வயதில் தன்னுடைய அம்மாவுக்கும்,தன்னுடைய அம்மாவை விட ஐந்து வயது இளையவனான சரவணபவனுக்கும் உள்ள தொடர்பும், சரவணபவனுக்கு திருமணம் ஆனப் பிறகு அரளி விதையை அரைத்து குடித்து இறந்துபோகும் அவனுடைய அம்மாவின் முகமும் அவனுக்குள் ஒரு நிரந்தர துயராய் உறைந்து விடுகிறது.

அருள்குமரன் பதின்ம வயதில் தனது வீட்டில் வந்து தங்கும் அமலி அக்காவின் மீது காமம் கொள்கிறான். அமலி அக்காவிடமிருந்து கிளர்ந்து வரும் பெயர் அண்ட் லவ்லியின் வாசனை அவனுக்குள் இருக்கும் காமத்தை ஊதிப் பெருக்குகிறது.ஒரு கட்டத்தில் அவன் அமலி அக்காவின் மீது படர்ந்து அவளுள் மூழ்கி விடுகிறான்.
டியூசன் போகும் போது அருள்குமரனுக்கு ஆராதனாவுடன் காதல் ஏற்படுகிறது.

ஆராதனா வீட்டில் அவளுடைய அப்பா அம்மா இல்லாத போது அவளைச் சந்திக்கப் போகும் அருள்குமரன் அன்றைக்கு அவள் பரிசளித்த காமம் கோவிலின் நிவேதனம் போல் இருந்தது என்கிறான்.

ஒரு இரவில் மீண்டும் இருள் பசையிலிருந்து பெயர் அண்ட் லவ்லியின் வாசனை கிளர்ந்துவரும் போது ஆராதனாவின் நினைவை இழுத்து வருகிறான்.அவளுடைய கூரிய பார்வை, அன்பான அதிகாரம், வெடுக்கென்ற கோபம், கோவிலின் நிவேதனம் போன்ற காமம்… ம்கூம் பெயர் அண்ட் லவ்லி மணத்துக் கொண்டேயிருப்பதால் சுயகைமைதுனம் செய்கிறான்-
காமம் அவன் மனதை அலைக்கழிப்பதால் அன்று பின்னிரவு தற்கொலை செய்து கொள்ளலாம் என எண்ணி மறுநாள் காலை முதல் ஆளாக புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொள்கிறான்.
மனிதர்களின் தனிமையையும் துயரையும் காமம் மலைப்பாம்பு போல விழுங்கி விடுகிறது.

அருள்குமரன் அம்மா,புலிகள் இயக்கத்தில் கணவனை இழந்து இயக்கப்பெடியன்களிடம் தவறாகப் பழகும் புஷ்கலா தேவி,இரட்டை குழந்தைக்கு தாயான காபூலைச் சேர்ந்த ஷர்மினா ஆகியோரின் தனிமை மற்றும் துயருக்குள் காமம் நுழைகிறது. ஒரு கட்டத்தில் அருள்குமரன் தன் அம்மாவைப்புரிந்து கொள்ளுகிறான்.

அனோஜன் பால கிருஷ்ணன் எழுதிய ஆடையுற்ற நிர்வாணம் என்ற சிறுகதையில் கதைசொல்லியின் அக்கா தன் கணவனை இழந்த பிறகு ஒரு மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அந்தப் பெண்ணின் அப்பா புலம்புவார். எவ்வளவு துயர், தனிமை இருந்தாலும் காமம் இந்த உடலின் அடிப்படையாய் இருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் அருள்குமரன் அபர்ணா என்ற பெண்ணுடன் நட்புகொள்கிறான்.

ஆராதனா என் அம்மாவாக இருந்திருக்கலாம் என அபர்ணாவிடம் கூறுகிறான் அருள்குமரன்.

ஆப்கான் தாலிபான்களால் துரத்தப்பட்டு சுவிட்சர்லாந்தில் குடியேறி மோர்கார்த்தன் சமர் நினைவிடத்திலிருந்து நஜிபுல்லா குதித்து தற்கொலை செய்துகொள்கிறான்.

புலிகள் இயக்கத்தில் சேர்ந்து மடியும் சிங்களப் பெண் அவந்தி என நிறைய மனித கதாப்பாத்திர கதைகளின் பின்னலாக நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண் தன் இழப்பை தற்காலிகமாய் மறக்கச் செய்ய பெண் உடனான காமத்தை நாடுகிறான். அப்படித்தான் நாவலில்
அற்புதமும், நஜிபுல்லாவும் தங்களின் தாய்நில பிரிவை,துயரை வேசைகளின் தொடை இடுக்கில் போக்கிக்கொள்ள முயல்கிறார்கள்.

தாய் நிலங்களை இழந்து அகதியாய் பல்வேறு நிலங்களில் அலையும் மனிதர்களின் அகவயமான கதைகளின் பிரதி அஷேரா.
துப்பாக்கி சத்தத்துடனும்,ஷெல் சத்தத்துடனும் ஈழ உயிர்களின் ஓலங்களை ஆதிரை நாவல் பதிவு செய்தது என்றால்,உலகெங்கும் அகதியாய் அந்நிய நிலத்தில் வாழ்பவர்களின் மெளன ஓலத்தை அஷேரா நாவல் பதிவு செய்கிறது

By

Read More

நிறைவான வாசிப்பு – சரவணன் மாணிக்கவாசகம்

அஷேரா நாவலை ஒரே கதையாகப் படிக்கலாம், இல்லை கதைகளின் தொகுப்பாகவும் படிக்கலாம். அருள்குமரன் காமத்தை எதிர்கொள்ள முடியாது, தற்கொலை செய்வதற்குப் பதிலாக இயக்கத்தில் சேர்கிறான்.

அவனது அம்மாவின் கதை ஒரு தனிக்கதை. ஒருவகையில் அருள்குமரனின் நிலைமைக்கு அவளே காரணம். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நஜிபுல்லாவின் கதை. பயந்து நடுங்கும் அற்புதத்தின் கதை. கனவுக்குமிழி உடைந்து குடும்பவன்முறையை சகித்துக் கொள்ளும் அபர்ணாவின் கதை. அனாதையாய் பல இன்னல்கள் அனுபவித்து பின் புலிகள் இயக்கத்தில் சேர்ந்த அவந்தியின் கதை. சின்னக் கதைகள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. இத்துடன் தமிழீழம் கண்டிப்பாகக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் எல்லோரும் இருந்த பேரழிவுக்கு முந்திய ஈழத்தின் கதையும்.

போரில் நடக்கும் வன்முறையும், அழிவுகளும் கதை முழுதும் வருவது போல் காமமும் கதை முழுதும் வருகிறது. அருள்குமரன் அம்மாவின் குற்றஉணர்வு கூடிய காமம், அருள்குமரனின் கயிறறுபட்ட காளையெனத் துள்ளிக்குதிக்கும் காமம், அபர்ணாவின் விட்டுவிலக முடியாத காமம், நஜிபுல்லாவின் வன்முறைக்காமம், அவந்தியின் கண்ணாமூச்சிகாமம் என்று இத்தனை இருந்தாலும் உங்களைக் கவரப்போவது அற்புதத்தின் கானல்நீர் காமம் தான்.

புனிதம் என்ற வார்த்தையில் ஆசியர்களுக்கு மரியாதை அதிகம். ஒருவரின் புனிதம் அடுத்தவருக்கு சாதாரணம் என்பதை நாம் கவனத்தில் கொள்வதில்லை. சயந்தனின் இந்த நாவலில் புனிதவிக்கிரங்கள் எதுவும் இல்லை. அஷேராவே ஆண்தெய்வத்தால் நீ தெய்வமில்லை என்று சொல்லப்பட்டு புனிதத்தை இழந்தவள் தான்.

அருள்குமரனே பிரதான கதைசொல்லி. வலி மிகுந்த பால்யம். “அப்பன் வெளிய போய் கொஞ்சநேரம் நில்லுங்கள்” என்ற குரல் அவனது மூச்சு நிற்கும் வரை கேட்கப்போகிறது. அதனுடன் சேர்ந்து ஓலமிடும் பலகுரல்கள். அருள்குமரன் ஆராதனாவிடம் கிடைத்ததை அபர்ணாவிடம் தேடுகிறான். அவன் யாரென்பது தெரிந்தால் அவனுக்கும் அற்புதத்துக்குமான உறவு ஒரு கவிதையாய் விரிவது தெரியும்.

கதாபாத்திரங்கள் ஆளுக்கொரு கதை சொன்னாலும் நாவல் கட்டமைப்பு குலையாது இருக்கிறது. சின்ன வாக்கியங்கள் பெரியஅர்த்தங்களை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கின்றன. கதாபாத்திரங்களின் குரல்களுக்கு நடுவே ஆசிரியத்தலையீடு எதுவுமே இல்லை. ஒருவர் தமிழீழத்திற்காக உயிர் கொடுப்பேன் என்றால் இன்னொருவர் மயிர் தமிழீழம் என்கிறார். எண்ணிக்கையில் அதிகமான இயக்கங்கள் தன்இனத்திற்குள்ளேயே வெட்டிசாயாமல் பொது எதிரியை மட்டும் கணக்கில் வைத்துக் காரியத்தில் இறங்கியிருந்தால்… சயந்தனின் செறிவான மொழிநடை, பலமடிப்புகள் கொண்ட கதையை எளிதாகச் சொல்லும் யுத்தி, உணர்வுகளின் அலைகள் கரையைத் தட்டித்தட்டி சோர்ந்து மீள்வது போல் காமம், பாலைவனத்தில் சுனையாய் கண்ணுக்குத் தெரிந்து கைக்கப்படாமல் போவது என்று பலஅம்சங்களினால் நாவலைவிட்டு வெளியே வரவிரும்பாது அதற்குள்ளேயே கிடக்கும் மனம். நிறைவான வாசிப்பைத் தரும் நாவல்.

By

Read More

අවසන් ගෞරවය – සයන්තන් / இறுதி வணக்கம்

පරිවර්තනය – ජී. ජී. සරත් ආනන්ද

මගේ නෙත ගැටුණු මොහොතේ වලවන් තම පාදවලට පහළින් සිටි කොළ පැහැති, තෙත් ගතියෙන් යුත්, පිට මත කළු පැහැ තිත් සහිත ඒ ගෙම්බාගේ සිරුර මතට අතෙහි දරා සිටි කැඩුණු කොන්ක්‍රීට් ගල් කැබැල්ල ‘දඩස්’ හඬින් අතහැරියේය. ‘චිරිස්’ හඬක් මතුවිය. එක්තරා අප්‍රසන්න හැඟීමකින් මිරිකී සිටි මම වහා දෑස් වසා දත්මිටි කෑවෙමි. වලවන්ට තවම අවුරුදු හයක්වත් සම්පූර්ණ වූයේ නැත. ඔහු මට නෑකමින් බෑණාය. අක්කාගේ පුතාය. අල්ලාගෙන සිටින අත ලිහිල් කළ සැනින් පහළට රූරා හැලෙන්නට සූදානමින් තිබෙන ලිහිල් කොට කලිසමක් පමණක් ඔහු ඇඳ සිටියේය. රවුම් මුහුණෙහි නොසැලකිලිමත් ලොකු ඇස් දෙකකි. උදෑසන සිට වත්ත පුරාම ඇවිදියි. මම ද ඔහු පසුපසින් ගොස් නිරීක්‍ෂණය කරන්නට වීමි.

වලවන් ජීවමානව දැක දවසක් ම ගතවිය. ඊයේ උදෑසන මම ගමට පැමිණියේ අවුරුදු 15කට පසුවයි. කොළඹ ගුවන් තොටුපළේ සිට දිගටම පැමිණියේ අක්කාගේ ගෙදරටය. ජීවිත ගමනේ මතකයන් සිතට ඇතුල් වී ආස්වාදයක් ගෙනදීම සාමාන්‍ය තත්ත්වයකි. ඇතැම් මතකයන් වරෙක පිනිබිඳු සේ සිසිලක් ගෙනදෙයි. තවත් බොහෝ අවස්ථාවල ගින්දර සේ දවාලයි. එදා ශ්‍රී ලංකාව අතැර විදෙස් ගතවූ කාලයේ මම සිටියේ අම්මා, ලොකු අම්මා, ලොකු තාත්තා ඇතුළු සියලු දෙනා සමග මුලතිව්වලය. අක්කා ද සිටියේ එහිය. අපට ජීවත්වීමට සිදුවූයේ දිවා කාලය කා දමන ගන කැළෑවක, ග්‍රීස්මය සඟවාලන කඳවුරක් තුළය.

“මෙයා ඔරුවකින්වත් ඉන්දියාවට යවන්න ඕන. තවදුරටත් මේ බිමේ තියාගන්න තරම් මගේ හිතේ හය්යක් නෑ.”

අම්මා එසේ පවසමින් රාමේස්වරන්වල සිට සැතපුම් 45ක් දුරින් පිහිටි මන්නාරමේ මුහුදුබඩ ගමකට මාවත් ඇදගෙන පිටත් වෙද්දී ලොකු අම්මාත්, ලොකු තාත්තාත් මා බදාගෙන කඳුළු සැළුෑහ. ලොකු තාත්තාගේ ඇඟිල්ලේ ස්පර්ශය මා කෙරෙන් වෙන්ව ගිය මොහොතේ කිසිවෙකුත් නැති පාළු වනාන්තර බිමකට හුදෙකලාවේ ඇතුල්වූවාක් වැනි හැඟීමක් මසිතේ ජනිත විය. මගේ ළමා කාලයේ මතකයන් රැසක් ඒකරාශීව තිබුණේ ඔවුන් වටාය. ලොකු තාත්තාට පිරිමි දරුවෝ නොසිටියහ. අවුරුදු දිනවලදී ඔහු මාව සිය නිවසට කැඳවාගෙන යන්නේය. යේසු බිලිඳාගේ උපන් දිනය යෙදුණු සෑම මැදියම් රැයකදී ම මම ඔවුන්ගේ නිවසේ හිඳගෙන ම ගීතිකා ගැයුවෙමි. ලොකු තාත්තා, ලොකු අම්මා, අක්කා සහ මම පේළියට දණ නමාගෙන මිහිරි හඬින් මෙසේ ගයන්නෙමු.

“උඳුවප් රෑ සීතල අඳුරේ

දේවදූතයකු සේ අවුදින්

ගවයින් එක්වන ගව මඩුවේ

ජනිතවුණා මිණි කැටයක් මෙලොවට

මානව කරුණාවේ….”

මට බයිසිකල් පැදීමට පුරුදු කළේ ලොකු තාත්තාය. ඔහු පුස්තකාලයෙන් පොත් ද රැගෙන විත් මට ඒවා විස්තර කරමින් හඳුන්වා දුන්නේය.

 ‘මාත් එක්ක ඔයාලත් ඉන්දියාවට යමු’ යි ලොකු තාත්තගෙන් හා ලොකු අම්මාගෙන් ඉල්ලා සිටීමට බැරි කාලයක් උදාවිය. ඒ වන විට අක්කා සංවිධානයට බැඳී සිටියාය. දරුවන් අතැර අඟලක්වත් ඉවත්ව යාමට ඔවුන් අකමැතිය. ‘ඈ ආයෙත් එනව. යේසුස් වහන්සෙ මගේ දුව එක්කගෙන එනව’ යි ලොකු අම්මා දිනපතාම යාඥා කරමින් අයැද සිටින්නීය. කඳුළු ගලනවිට ඈ යාඥා කරන්නේ දණ ගසාගෙනය.

 “මෝක්‍ෂයේ පියාණෙනි, ඔබතුමන්ගේ ගව මඩුවේ සිට මග වැරදී ගිය ඔබේ දරුවන් යළිත් මා ළඟට කැඳවා ගෙනැවිත් දෙන ලෙස  ඔබතුමන්ගෙන් අයදිමි….”

අක්කා සංවිධානයට බැඳීම එක්තරා විශ්මිත සිදුවීමකි. ඇය මට වඩා අවුරුදු දෙකකින් වැඩිමල්ය. විසි වසරකට පෙර සෙනසුරාදා දිනයක උදෑසන දේව මෙහෙයට බැතිමතුන් දේවස්ථානයේ රැස්ව සිටියදී වහලට වැටුණු ගුවන් බෝම්බ ප්‍රහාරයේ අත්දැකීම ලැබෙන තුරුම අඟුරු පැහැති අඳුරට හැර වෙන කිසිවකටවත් ඈ බියවූයේ නැත. එදා සිදුවීමේදී සම්පූර්ණයෙන් ම රූරා වැටුණු බිත්තියක සුන්බුන් අතරේ ඈ තැලී පොඩි වී සිටියාය. විසිර ගිය කොන්ක්‍රීට් ගල් ඇනීමෙන් ඇති වූ සීරුම් තුවාලවල වේදනාව ඇයට ඉසිලිය හැකිවිය. එහෙත් ඇගේ දෑස් ඉදිරිපිට ලේ විහිදුවමින් අවසන් හුස්ම හෙළුෑ ජීවිතත්, ශේෂ වූ දේවස්ථාන බිත්ති අතරේ රැව්දුන් මර ළතෝනිත් ඇය උමතුභාවයකට පත්කළාක් වැනිය. විසිර ගිය මිනිස් මස් වැදලි ගොඩවල්වලට දූවිලි මිශ්‍රවී බැතිමතුන්ගේ සිරුරු අතරින් දෙපා එරි එරී ඇවිද එනවිට වලිප්පුව සැදී ඇති සේ ඇගේ සියලඟම වෙව්ලන්නට විය. ඈ සිහිසුන් වූවාය.

එදා පටන් යන්තමින් වෙඩි හඬක් ඇසුණත් ඈ කලබල වන්නීය. ඈතින් ඇසෙන වෙඩි හඬ සාමාන්‍යයෙන් අපි ගණනකට ගන්නේ නැත. එහෙත් ඇය එසේ නොවේ. එවන් අවස්ථාවල දියෙහි ගිලී ගොඩ ආවාක් මෙන් ඇගේ මුහුණ සුදුමැලි වී දෑස්වලින් බිය වෑස්සෙන්නට පටන් ගනියි. කිසිවකු සමගවත් කතා නොකරයි. තනිවී සිටියි. ඇගේ කාමරයේ තේක්ක ලීයෙන් තැනු බරැති මේසයක් තිබුණි. එය පැරණි ගෘහ භාණ්ඩයකි. සිමෙන්ති පොළව මත එය පසෙකට අදිනවිට ‘බ්‍රා…ස්’ යි හඬක් මතුවෙයි. එය යම් ප්‍රමාණයකට කෆීර් යානයක් අහස දෙබෑ කරගෙන එන හඬකට සමානය. අක්කා දිවා කාලයේ නිදාගන්නා වෙලාව බලා මම විහිළුවක් කිරීමට සිතා මේසය ඇද ඒ හඬ නන්වමි. ඈ කලබලයෙන් නැගිට ‘දෙය්යනේ….’ යි හඬ නගමින් බියෙන් දුවන්නට පටන් ගනියි.

මට හොඳින් මතක තිබෙන සිද්ධියක් ඇත. අප අවතැන්වී මුලතිව්වලට පැමිණ පැල්පත් අටවාගෙන පදිංචිවී මාස දෙකක් ගෙවී ගියේය. ෂෙල් ප්‍රහාර හෝ වෙඩි හඬ හෝ දැන් නෑසෙයි. එහෙත් ‘එල්’ හැඩයේ බංකරයක් මිදුලේ ආසන්න දුරින් ඉදිකරගෙන සිටියෙමු. අක්කාගේ හැසිරීම මඳක් යහපත් තත්ත්වයක පැවතුණි. ඒ වනවිට උසස් පෙළ විභාගය සඳහා ඈ පාසැලකට ඇතුල්ව සිටියාය. එය මඳක් දුරින් පිහිටා තිබුණි. ලොකු තාත්තා රතු පැහැති ‘ලුමාලා’ බයිසිකලයක් ඇයට මිලදී ගෙනැවිත් දුන්නේය. දිනක් උදෑසන ඈ නිවසේ සිට පිටත්ව ගියාය. මිනිත්තු පහක් පමණ ගතවිය. කෆීර් යානා දෙකක් සමාන්තරව ඇදී යන ඊතල මෙන් අහසට එක්විය. ප්‍රාණය සූරාගෙන යාමට එන භයානක හඬකි.

“බංකරේට දුවමු. අය්යෝ…. දුව තාම පාරෙ තනියම….”

ලොකු අම්මා වරින්වර බංකරයෙන් හිස ඔසවා එබෙමින් ළතවෙයි. කෆීර් හඬ ඝෘජුවම කන්වලට ඇතුල්ව මොළයේ මෘදු පටල සූරාගෙන යන්නාක් සේ දැනෙයි. ඒ ගොරහැඩි හඬ තවත් උත්සන්න වෙයි. ක්‍ෂණයෙන් වීදුරු මාලිගාවක් කුඩුපට්ටම්ව කඩා වැටුණාක් වැනි ‘සරාං සරාං’ හඬක් ඇසුණි. ‘බෝම්බ ගැහුව…. බෝම්බ ගැහුවා….’ යි කියමින් මම ද ගෙම්බෙකු මෙන් බංකරයේ සැඟවී සිට කෑගැසුවෙමි. සුළඟ ‘හෝ…. හෝ….’ හඬින් හමා ගියේය. ටිකින් ටික පිපිරුම් හඬ අඩුවන්නාක් මෙන් දැනුණි. කෆීර් හඬ ක්‍රමයෙන් අඩුවෙද්දී මමත්, ලොකු අම්මාත් වහ වහා පාරට ආවෙමු. අක්කා හති දමමින් දිව ආවාය.

“කොහේට වැටුණද දන්නෑ. සංවිධානෙ වාහනේක තුවාල වෙච්ච මිනිස්සු පටවගෙන මේ පාරෙන් තමයි ගියේ. ඇස් දෙකෙන් බලන්නවත් බෑ. වාහනේ පිරෙන්න ලේයි, මර ළතෝනි හඬයි….”

ඈ හති දමමින් පවසා සිටියාය.

“අක්කේ, කෝ බයිසිකලේ?”

මම ප්‍රශ්න කළෙමි. ඈ ගැහෙන හඬින් ‘රතුපාට දැක්කමලු බෝම්බ ගහන්නෙ; ඒ නිසා සයිකලේ පාර අයිනට වීසිකරල දුවගෙන ආවා’ යි පිළිතුරු දුන්නාය. මා සිනාව මැඩගැනීමට ගත් උත්සාහය ව්‍යර්ථ විය. ‘හොඳ වෙලාවට සුදු ඇඳුමින් ගියේ’ යි කීවෙමි. ඈ මුහුණ එල්ලාගෙන දිව ගොස් බිත්තියට පිට දී අඬන්නට පටන් ගත්තාය.

අක්කා සංවිධානයට එක්වූ බව කිසිවෙකුටත් විශ්වාස කළ නොහැකි විය. ගෙදරින් වෙන්වන මොහොත දක්වාම ඇය සිටියේ ඒ බියවන ස්වභාවයෙනි. කුමන අවස්ථාවක එවන් තීරණයකට එළඹුණේ ද යන්න මහත් ප්‍රහේළිකාවක් විය. සංවිධානයට බැඳුණේ ඇයිදැයි ඇගේ එකදු ලිපියක හෝ ලියා නොතිබුණි. පාසැලේ සිට සවස තුන වනවිට සැමදාම ගෙදර එන ඇය එදා නොපැමිණීම නිසා ලොකු අම්මාගේ සිත කලබල විය. ලොකු තාත්තා ඒ ගැන සොයා බැලීමට ගියේය. අඳුර වැටෙන විට ඔහු සයිකලය ගසකට හේත්තු කර මළකඳක් මෙන් පැමිණ බිම ඇණතියා ගත්තේය. කුඩා දරුවකු මෙන් ඔහු හඬන්නට පටන් ගත් විට සිදුව ඇත්තේ කුමක්දැයි මට අවබෝධ විය. එදා අක්කාගේ පාසැලේ 13 දෙනෙක් සංවිධානයට එක්වූහ. ඊ ළඟ දිනය පුරාම මමත්, ලොකු අම්මාත්  අවට පිහිටි කඳවුරුවලට ගොස් විමසා බැලුවෙමු. අවසානයේ එක් ස්ථානයක දී ඇගේ රතු පැහැති ලුමාලා බයිසිකලය දුන්නේය. ලොකු අම්මා ඒ කඳවුරේ දොරටුව අතැර පිට නොවෙමියි කියමින් බිම දෙපා දිගහැර හිඳ වැළපෙන්නට වූවාය. ‘අනේ රත්තරන් මහත්තුරුනේ, එක වතාවක් හරි මගෙ කෙල්ල ඇස් දෙකට දැකගන්න ඉඩ දෙන්න’ යි බිම පෙරළෙමින් වැළපුනාය. ඒ මොහොතේ මම සිතින් අක්කාට නොසෑහෙන්න දොස් තැබුවෙමි.

“ඒකි හැමදේටම බය දරුවෙක්. ගෙදර හැර වෙන කොහේවත් නතරවෙලා ඉඳල නෑ. කොහොමහරි එනව.”

වසර තුනක් පුරාවට ලොකු අම්මා එය කියවමින් සිටියාය. ඇගේ ඉල්ලීම්, බැගෑපත්වීම් සියල්ලම අක්කාගේ පැමිණීම උදෙසාය. මේ අතරේ එක්තරා දිනෙක අක්කා ගෙදර පැමිණියාය.

දොරකඩ දෙසින් ඇසුණු මෝටර් සයිකලයේ හඬ ක්‍රමයෙන් අඩු වී නැති වී ගියේය. අක්කා එහි හිඳගෙන ම පාදවලින් පොළවට ඇන ඉදිරියට තල්ලුවෙමින් වත්ත ඇතුළට පැමිණියාය. පසුපසින් ඇගේ මිතුරියක් හිඳගෙන සිටියාය. දෙදෙනාම සංවිධානයේ නිල ඇඳුමින් සැරසී සිටියහ. අක්කාගේ කොණ්ඩය උරහිසට උඩින් කපා තිබුණි. ඒ තුළින් ඇයට නැවුම් පෙනුමක් ගෙන දුනි. ගෙලෙහි එල්ලෙන කළු පැහැති නූල නිල ඇඳුමේ වම්පස සාක්කුවට ඇතුල් කර තිබුණි.

ලොකු අම්මා ‘මගේ දරුව ඇවිල්ලා’ යි කලබලකාරීව හඬ නගා ගොස් අක්කාව වැළඳ ගත්තාය. මව් තුරුලේ ශරීරය උණුසුම් වෙද්දී අතේ බැඳ තිබූ කළු පැහැති ඔරලෝසුවෙන් අක්කා වෙලාව බැලුවාය.

“සංවිධානෙ වැඩකටයි මේ පැත්තෙ ආවෙ. ඒ ගමන් මෙහෙත් ඇවිත් යන්න ආව.”

“තව ටිකකින් තාත්ත ඒවි. රෑ ඉඳල එළිවුණාම යන්න පුළුවන් නේ?”

ලොකු අම්මා ආයාචනාත්මක ස්වරයෙන් කියා සිටියාය. කිසිදු පිළිතුරක් නොදී සිනාසුණු අක්කා තනියම ම කුස්සියට ගොස් දෙහි යුෂ මිරිකා දියකර ප්‍රමාණවත් තරමට වතුර හා සීනි ද දමා ගෙනැවිත් මිතුරියට පිළිගැන්වූවාය. ඇය ද දෙහියුෂ උගුරක් බී මා දෙස බලා ‘මොනවද කරන්නෙ?’ යි ප්‍රශ්න කළාය. ‘ඉන්නව’ යි තනි වචනයෙන් පිළිතුරු දුන් මම නිහඬ වීමි.

ලොකු අම්මා අක්කාගේ නළල ආදරයෙන් පිරිමැද්දාය. ‘උඹට බය නැද්ද දුවේ’ යි ප්‍රශ්න කළාය. එවිට පසෙක සිටි අක්කාගේ මිතුරිය ඇඟ ගස්සමින් සිනහවක් නැගුවාය. ඇගේ උගුරේ තිබු දෙහි යුෂ නාසයෙහි ද සිරවිය. ලොකු අම්මා ඇගේ පිටට සෙමින් තට්ටු කළ අතර ඈ සුසුමක් පිට කළාය.

“ඒ ගැන මොනවට අහනවද අම්මේ….? කළුවර වැටුනහම හතර දෙනෙක් ඕන ඔයාගෙ දුව ළඟ තනියට ඉන්න.”

“ඒය් කට වහගෙන හිටපන් !”

අක්කා මිතුරියට තරවටු කළාය. ‘ආයෙ දවසක එන්නම් අම්මේ’ යි පවසමින් මෝටර් සයිකලයට නැගුණු ඈ එය ස්ටාර්ට් කළාය. හොණ්ඩා සීඩී 90 වර්ගයේ යතුරු පැදියක් වූ එය රතු පැහැතිය. දෙවතාවක් එහි ඇස්ලේටරය කරකැවූ ඈ මිතුරිය ද හිඳුවාගෙන සුළඟේ පාවී නොපෙනී ගියාය. මොහොතක්වත් ප්‍රමාද නොවුණු ලොකු අම්මා ගෙතුළට දිව ගොස් දණ ගසා ගත්තාය.

“සර්ව බලධාරී දෙවියන් වහන්ස, මගේ දරුවව ඔබ වහන්සේට භාරකරනව. ඔබ වහන්සේගෙ යටත් සේවිකාවක වශයෙන් භාරගෙන ළඟින්ම ඉඳන් ඇයට ආරක්‍ෂාව ලබා දෙන්න කියල ඔබ වහන්සේගෙන් අයැද සිටිනව….”

මම විශ්මයට පත්වීමි. පෙර දිනවල කුමක් හෝ විහිළුවක් කර අක්කාගේ කේන්තිය අවුස්සන මම අද අක්කා යළි පිටව යනතුරුත් පැවසීමට වදන් නොමැතිව මුල්ලකට වී නිහඬව සිටියා නොවේද? ගම ගැනත්, ගෙදර ගැනත් නිතර සමීපව කතාබහ කරමින් සිටි ඈ හදිසියේ අතුරුදහන් වූවාක් වැනිය. කුමක් හෝ වැරදි හැඟීමක් නිසා මා එසේ නිහඬ වූයෙම්දැයි කල්පනා කළෙමි. එදායින් පසු මට අක්කාව ඊයේ වනතුරු යළි දැකගත නොහැකි විය.

මම ඉන්දියාවේ හොඳ ඒජන්සිකාරයකු සම්බන්ධ කර ගත්තෙමි. ‘විදේශ ගතවී රැකියාවක් ලබාගත් පසු මුදල් ගෙවමි’ යන කොන්දේසිය මත දින හතරක් තුළ ලන්ඩනයට ගියෙමි. විදේශ ගතවීම සඳහා මාස 10 ටත් වඩා කල් බලා සිටීමට  සිදුවූ කාලයකි ඒ. අනාථභාවය, නඩු, වීසා සම්බන්ධ ගැටලු, රැකියා විරහිතභාවය, කාලය නාස්තිවීම ආදී සියලු තත්ත්වයන්ගෙන් නිදහස් වීමට හැකිවීම භාග්‍යයකි. දින 12කට පසු සර්පයකු දෂ්ට කිරීමෙන් ලොකු තාත්තා මියගිය පුවත ලැබෙන විට මා සිටියේ දෙවන රැකියාවේය. එය පෙට්රල් ෂෙඩ් එකක රැකියාවකි. රාත්‍රි වැඩට පිටත්ව යමින් සිටියෙමි. ලොකු තාත්තා යළි කවදා හෝ සජීවීව දැකගැනීමට ලැබේවායි  ප්‍රාර්ථනාවක් සිත පතුළේ තිබුණි.

අක්කා කසාද බඳින බව දන්වා ලිපියක් ලැබුණේය. යුද බිමේ දී ඇගේ පාදයක් ආබාධිත වූ බවත්, පසුව වෛද්‍ය අංශයේ සේවිකාවක ලෙස සේවය කළ බවත් ඒ දිනවල දී එකට වැඩ කළ සංවිධානයේ අයකු සමග ප්‍රේමයෙන් බැඳුණු බවත් එහි සඳහන්ව තිබුණි. එක් රාමුවක් තුළ කොටු කර තැබිය නොහැකි ලෙස ඇගේ ජීවිතය හැරෙමින් ගලා යන්නේ යැයි සිතා මම විශ්මයට පත්වීමි. ඇය පිළිබඳව දැන ගැනීමට ලැබෙන සෑම අවස්ථාවකදීම ක්‍ෂණිකව රූප රාමු මාරුවන්නාක් සේ එක් එක් චරිතයන්ට ඈ ජීවය දුන්නාය. අවසානයේ වලවන්ගේ ආදරණීය අම්මා බවට පත් වූවාය. ඒ වන විට යුද්ධය විසින් ජනතාව මුහුදු වෙරළ දෙසට පන්නා දමන ලදී. එළු රංචුවක් ඇදී යන්නාක් මෙන් ජනතාව ගමන් කරන්නට වූහ.

අක්කා ගැනවත්, ලොකු අම්මා ගැනවත් ඉන් පසුව මා හට කිසිදු තොරතුරක් නොලැබුණි. ලැබෙන සෑම පුවතක්ම ලේවලින් නැහැවී තිබුණි. අන්තර්ජාලය ඔස්සේ ලෙයින් නැහැවුණු ළදරු ශරීර දකින සෑම විටකදී ම තවමත් මුහුණ නොදුටු වලවන් මසිතට නැගෙයි. ඔහු ගැන සිතුවමක් සිතින් මා තුළ ඇඳගත්තෙමි. ලොකු තාත්තාගේ මෙන් ගණ වූ ඇහිබැම, තියුණු නැහැය, මඳක් පටු, සැමවිට ම සිනාමුසු මුව මඬල….

දරුණු රාක්‍ෂයෙක් තම විශාල දිවෙන් භූමිය සූරා රෝල්කර ගෙන කා විනාශ කර දැම්මාක් මෙන් එක්තරා දිනයක දී සියල්ල ම සුන්නද්දූලි විය. දුමින් වැසී ගිය භූමියේ වලවන්ව ඉනේ රුවාගෙන අක්කා පිටව ගියාය. මස්සිනා හමුදාවට භාරවිය. එදා ලොකු අම්මාගේ අට වන සැමරුම් දිනයයි.

මා දුටු සැනින් මෘදු හඬින් ඉකි ගසන්නට වූ අක්කා අත්ලෙන් කඳුළු පිසලෑවාය. කඳුළු වළක්වාලීමට නොහැකිව මුහුණ වසාගෙන හඬන්නට පටන් ගත්තාය. එවිට ඇය කුඩා ශබ්දයකට පවා බිය වු අතීතයේ සිටි අක්කා ලෙස ම පෙනුණි. මම ඇය නිල ඇඳුමෙන් සිටිනු ද දැක ඇත්තෙමි. ඒ අතීතය සිහිලැල් බවින් උතුරා ගිය අලුයම් කාලයක දුටු සිහිනයක් වැනිය. මම හිස නමාගෙන සිටියෙමි. වලවන් අක්කාගේ ඇඳුමට මුවාවෙමින් මා දෙස බලා හිස සඟවා ගත්තේය. මම ඔහුව වඩාගෙන හාදුවක් දුන්නෙමි. ඔහු එයට අකමැති බව පාමින් කම්මුල් තදින් පිසලෑවේය.

“උඹේ මස්සිනාව දැකලම නෑ නේද මල්ලි?”

අක්කා රාත්‍රියේ ප්‍රශ්න කළාය.

“එයා ෂෙල් පැක්ටරියක භාරකරු හැටියටයි වැඩකළේ. ගම ත්‍රිකුණාමළේ සාම්පූර්. වතාවක් වැරදීමකින් ඒ පැක්ටරියෙ පිපිරීමක් වුණා. එයාගෙ මූණෙයි පපුවෙයි දරුණු තුවාල ඇතිවුණා. ඒවට ප්‍රතිකාර ගන්න ආපුවහම තමයි මාව අඳුරගත්තෙ.”

ඇය මස්සිනාගේ ඡායාරූපයක් පෙන්නාවි යැයි මම බලා සිටියෙමි. වලවන් කුඩා කාලයේ ගන්නා ලද ඡායාරූප කිහිපයක්ම ඈ පෙන්වූ අතර ඒවායේ මස්සිනා සිටියේ නැත.

“එයාගෙ එක ෆොටෝඑකක්වත් මා ළඟ නෑ මල්ලී. තිබුණ සේරම යුනිෆෝම් ඇඳල ගත් ඒව. හමුදා පාලන කලාපෙට යනකොට ඒව ඉරල වීසිකරල දාල ගියේ.”

ඈ පැවසුවාය. මම ගැඹුරින් සුසුමක් පිටකළෙමි. හ්ම්…. කවද අහපු කතාවල්ද මේ….?

“උඹේ මස්සිනා අන්තිම කාලෙ අපිත් එක්ක හිටියෙ නෑ. ෂෙල් පැක්ටරි වැහිල ගියාට පස්සෙ සංවිධානෙ අයගෙ මළකඳන් භූමිදානය කිරීමේ කටයුතු භාරව හිටිය. ඒවත් එක තැනක නෙමෙයිනේ කළේ. ලැබෙන පොඩි පොඩි ඉඩම් කෑලි ඔක්කොගෙම වළවල් හාරල මළකඳන් දාල වහනව. එයා කවදහරි ප්‍රයෝජනවත් වේවි කියල හිතල ඒ මැරුණු වීරයන්ගෙ නම්, විස්තර, වළදාපු ස්ථාන වගේ හැම තොරතුරක්ම ලේඛන ගතකළා. අතට අහුවෙන කඩදාසි කෑලිවල ඒ තොරතුරු ලියල ඒ වළදාපු තැන්වලම තිව්ව. මම එයාව හමුවෙන්න ගිය හැමවෙලාවෙ ම වලවනුත් වඩාගෙන ගියේ. දරුව තනිකරල අඟලක්වත් පිට ගියේ නෑ. කොයි වෙලාවෙ ගියත් භූමිදානෙ කරන්න තියෙන මළකඳන් ගොඩක් පේළියට ගොඩගහල තියෙනව. ඒව ළඟ අයිතිකාරයො වැළපෙනව. අයිතිකාරයො කවුරුවත් නැති ශරීරත් තිබුණ. අඬන්නවත් කවුරුවත් නැති කාලයක් උදාවේවි කියල අපි හිතාගෙන හිටිය. අවසන් ගෞරව කටයුතු මිනිත්තු දෙකක් ඇතුළත අවසන් කරනව. ඊළඟට වළවල් වහල දානව. ඒව අවසන් කරනකොට ම ආයෙත් මළකඳන් ගොඩක් අරන් එනව. දවසක් උඹේ මස්සිනා කිව්ව ‘කඩදාසි කෑලිවල වීරත්වයට පත්වුණු කෙනෙක් කියල ලියනකොට මගේ අත වෙව්ලනව’ කියල….”

අක්කා කතාව නතර කළාය. නිදිමතින් ශරීරය සොලවන වලවන් දෙස හැරී බැලුවාය. එහි වූයේ ළෙන්ගතු බැල්මකි. මා ඇගේ මතකයන් අවුස්සමින් දුක වැඩිකරන්නේදැයි සිතුණි.

“….මෙයා ගැන හිතනකොට තමයි වාවගන්න බැරි. මට විතරක්නම් මොනව වුණාම මොකද? ලේයි මසුයි තමයි මට ජීවිතය වුණේ. දරුණු විදියට යුද්දෙ පැවතුණ දවස්වල අපේ වෛද්‍ය සෙබළු ලේවලින් නෑවිලා හිටියෙ. වේදනාව උහුලගන්න බැරි මර ළතෝනි, පිස්සුවෙන් වගේ කෑගහන හඬවල් මට හුරුපුරුදු වුණා. අත් දෙකයි කකුල් දෙකයි කැඩිල ගෙනාපු ගෑනු ළමයෙක් ‘අක්කේ මට සයනයිට් කරලක් දීපන් ඉක්මනට මැරිල යන්න ඕන’ කියල බැගෑපත් වෙනකොට හිත ගල් කරගෙන, ක්ලාන්ත ගතියෙන් ම තමයි තුවාල වෙච්ච තැන් කපල උණ්ඩ කෑලි අයින් කරල දැම්මෙ. වලවන්ට ඒ වගේ හිතේ හය්යක් නෑ. එයා දරුවෙක්. එයා වටේ අනන්තවත් මරණ සිද්දවුණා. විසිරිලා ගිය මොළ, බිඳුණු අත පය, බඩ පැලිල පිටට වැටුණු බඩවැල්, මස් ගොඩවල් වගේ තිබුණ ශරීර ඔක්කෝම එයා ඇස් දෙකෙන් දැක්ක. මුලදි මම එයාගෙ ඇස් වහගත්ත. ‘එපා වලවන්, ඔයා මේ හැම දෙයක් ම දකින්න හොඳ නෑ’ කියල වෙන කොහෙට හරි එක්ක යනව. මුලදි මමත් කී වතාවක් නම් ඇස් වහගත්තද? උමේ මස්සිනා හොයාගෙන ගිය හැම වතාවෙම මෙයා මගේ අතින් මිදිල ඒ භූමියෙ හැම තැනම දුව පැනල ඇවිදිනව. අවුරුදු හතරෙදි වෙච්ච හැම දේම කොහොම මතක තියාගෙන ඉන්නවද කියල මට නම් හිතාගන්න බෑ. ඒත් දොස්තර මහත්තය නම් ඒවට ප්‍රතිකාර තියෙනව කිව්ව….”

මම අවධානයෙන් ‘දොස්තර ළඟට ගියේ…?’ යි තරමක් පැකිලෙමින් ප්‍රශ්න කළෙමි. මගේ යටි සිත අවුල් සහගතව පැවතුණි.

“මෙයා වත්තෙ ඉන්න කුරුමිණියො, කටුස්සො, ගෙම්බො, පත්තෑයො එකෙක්වත් අතහරින්නෙ නෑ. මොළේ අවුල්වුණ කෙනෙක් වගේ උන්ගෙ පස්සන් ම ගිහින් ගල්කැට අරන් ගහනව. නැත්තම් පොල්ලකින් හරි ගහල මරල දානව. කටුස්සොන්ගෙ බිත්තරවලට කෝටුවකින් ඇනල බිඳල දානව. කුරුළු කූඩු කඩල දානව. ඒව නපුරු වැඩ බව තේරෙන්න නෑ. ගෙම්බෙක් මරල වළදාල දවස් 10ක් 15ක් ගියාට පස්සෙ හාරල ඇටකටු ගොඩ ගන්නව. කේන්තියට ගහන්නත් බයයි තවත් මුරණ්ඩු වේවි කියල. බලපන් එයාගෙ මුණ දිහා. විශ්වාස කරන්න පුළුවන්ද? කොහොම ගහන්නද….?”

අක්කාගේ කඳුළු වැඩිවන්නට විය. මම වලවන් අසලට ගොස් හිඳගත්තෙමි. ඔහුගේ කොන්ද පිරිමැද්දෙමි. ඔහුගේ මුහුණ මට සිහිපත් කළේ මීට පෙර මා පුවත්පත් හා අන්තර්ජාලයෙන් දුටු දරුවන්ය.

“තව ටික දවසකින් තාත්ත ගැන අහවි. දැනුත් කල්පනා කරන්න පුළුවන්.”

අක්කා පැවසුවාය. මස්සිනා පිළිබඳව මා තුළ එක්තරා එළඹුමක් තිබුණි. එහෙත් සෑම දවසක් පාසාම විශ්වාසය පොදි බැඳගෙන සිටින්නියක සමග මට මගේ වදන් පැවසීමට නොහැක. දෑසින් නොදුටු ‘සිහින මිනිසකු’ ලෙස මස්සිනා මගේ සිතෙහි කිඳා බැස සිටියේය. ඒ නිසාමදෝ ඔහු වෙනුවෙන් මසිතේ එතරම් ම තැවුලක් නොතිබුණි.

“මොනව වේවිද කියල මටත් අනුමාන කරන්න නම් පුළුවන්….”

එසේ පැවසූ අක්කා දිගටම කතා කරන්නට වූවාය.

“….එයාට ආපහු පණපිටින් නම් එන්න ලැබෙන්නෙ නෑ. ඉස්සෙල්ලම වලවන්ට කියන්න උත්තරයක් ඕන. ඊ ළඟට පුරුෂය ගැන උනන්දුවක් නැතුව ඉන්නව කියන මේ ගමේ මිනිස්සුන්ට කියන්න උත්තරයක් ඕන. ඒ වෙනුවෙන් තමයි මම මේ තරම් මහන්සි වෙන්නෙ, බැගෑපත් වෙන්නෙ, පෙළපාලි යන්නෙ, මේ හැමදේම කරන්නෙ. ඕනම තොරතුරක් භාරගන්න සූදානමින් තමයි මම ඉන්නෙ. එයත් හිටියෙ එහෙම සූදානමින් තමයි. අවසන් දවසෙ පාන්දර ම එයා මගේ ළඟට ආව. ‘අද අපි මැරුණම ඉතිහාසයෙ නොපෙනී ගිය අය බවට පත්වේවි. සමහර විට වැරදිලා ඉතිහාසය විසින්ම ඔසවල වීසිකෙරුණු අය බවට පත්වේ’ කියලත් එයා කිව්ව. ඉබාගාතෙ ඇදි ඇදී තමයි අපි මේ තරම් දුරක් ඇවිදගෙන ආවෙ. ටිකක් එළිය වැටුණට පස්සෙ පාර අයිනෙ ඇරල තිබුණ බංකරයක් ඇතුළෙ මළකඳන් 20 -30ක් ගොඩගහල තියෙනව මම දැක්ක. ඒ ඔක්කොම සංවිධානෙ සෙබළුන්ගෙ. දවස් දෙක තුනකට කලින් මැරිල තියෙන්න ඇති. ගඳ ගහනව. උඹේ මස්සිනාත් එතන බිම දනින් වැටුණ. මොළේ අවුල් වෙච්ච කෙනෙක් වගේ අත්වලින් බිම පස් හූරන්න ගත්ත. අත්ල දිගහැරල, ඒ පස් අහුරු අරගෙන දික්කරල ‘අය්යෝ….’ කියල හඬා වැටුණ. මම දන්නව. පපුවෙ මස් පිඬු ඉරිල තුවාල වෙච්ච වෙලාවෙවත් ඇඬුවෙ නැතුව හිටපු කෙනෙක් එයා. ඒත් ඒ මොහොතෙ ඉකි ගගහ ඇඬුව. මම එයාව අල්ලල ඇද්ද. මුල් ඇදිල වගේ හෙල්ලුනේවත් නෑ. නැමිල කනට ළන්වෙලා ‘වලවන් වෙනුවෙන්’ කියල කෙඳිරුව. එතකොට තමයි හෙමින් නැගිටල ඇවිදින මළකඳක් වගේ සක්මන් කළේ. හමුදාවෙ අය ලේසියෙන් ම එයා සංවිධානෙ කෙනෙක් බව හඳුනගත්ත. එයා වැඩිය තර්ක කරන්න ගියෙත් නෑ. මගේ ළඟට ඇවිත් රහසින් ‘ඔයා සංවිධානෙ බවක් කියන්න ඕන නෑ. කවුරුහරි පාවල දෙනකල් ඔයා කියන්න යන්න එපා. වලවන් වෙනුවෙන්….’ කියල ඇවිදගෙන ගියා. එයාල ඔක්කෝම එක බස්එකකට පැටෙව්ව. බස්එක පිටත්වෙන්න කලින් කිසිම හැඟීමක් නැතිව ඇතුළෙ ඉඳන් අත වැනුව. මම බස් එක යන දිහා බලන් හිටිය….”

මදුරුවන්ගේ නාදය ඇසුණි. ඉන් එකෙක් දෙන්නෙක් මට දෂ්ට කළහ. අක්කා නැගිට ගොස් පට සාරියක් ගෙනැවිත් වලවන්ට පෙරෙව්වාය.

“මදුරු දැලක් තියෙනව. මෙයා ඒක යට ඉන්නෙම නෑ. මටත් ඉන්න බෑ. කොහේහරි බංකරයක් ඇතුළට ගිහින් ඉන්නව වගේ තෙරපීමක් දැනෙනව. හුස්ම හිරවෙනව වගේ.”

“වලවන් මාත්තෙක්ක ඉඳපුදෙන්.”

මම පැවසුවෙමි.

“එයා අතින් පයින් අනීවි. පරිස්සමෙන්.”

එසේ පැවසූ අක්කා ‘එක්සත් ජාතීන්ගේ සංවිධානෙ මානව හිමිකම් නිලධාරියෙක් හෙට ටවුමට එනව; අභියාචනයක් ඉදිරිපත් කරන්න ඕන; මම උදෙන්ම පිටවෙලා යනව ඒකට; මෙයා පරිස්සමින් බලාගන්න’ යි ඉල්ලීමක් කළාය.

අක්කා අපි අවදිවීමටත් පෙර පිටව ගොස් සිටියාය. වලවන් දැන් බිම දණ නමාගෙන සිටියි. කොන්ක්‍රීට් ගල වැදි පොඩිවී තිබූ ගෙම්බා දෙස ඔහු උනන්දුවෙන් බලා සිටියේය. ළඟට ගොස් ඔහුව කැඳවාගෙන ඒමට සිතුවෙමි. එහෙත් චප්පවී තිබූ ගෙම්බා ගැන කල්පනා කරන විට බඩ පපුව දැවී යන්නාක් සේ දැනෙයි.

“වලවන්, ඔයා හොඳ දරුවෙක්නේ…. මෙහෙ එන්නකො.”

ඔහු මා දෙස හැරී බැලුවේවත් නැත. ඉනේ ලිස්සමින් තිබෙන කොට කලිසම ඇද අල්ලා ගනිමින් දිවගොස් ලොකු සූරිය කොළයක් කඩා රැගෙන ආවේය. ගෙඹි සිරුර කෝටුවකින් තල්ලුකර කොළය මතට ගත්තේය. යළිත් දිවගොස් වැට අයිනේ වීසිකර දමා තිබූ පැරණි පොල්කටුවක්  ගෙනැවිත් ඉන් පස් ඉවත්කරමින් වළක් හාරන්නට විය. ගෙඹි සිරුර සූරියා කොළය සමගම ඒ කුඩා වළ තුළට දැමූ ඔහු කම්මුලට අතක් තබා ඒ දෙස ම බලා සිටියේය. මා සිත කැලඹී ගියේය. වලවන්ගේ දෑස්වලින් කඳුළු බිඳු දෙකක් පස මතට වැටෙනයුරු මම දුටිමි. මගේ සියලග ම වෙව්ලන්නට විය. වහා දිවගොස් ඔහුව අල්ලා ඔසවාගෙන පපුවට තබාගත්තෙමි. ‘වලවන් නිර්භීත දරුවෙක්නේ; අපි වැල්ලෙ සෙල්ලම් ගෙයක් හදල සෙල්ලම් කරමුකො’ යි ඔහුගේ නළල පිරිමදිමින් පැවසුවෙමි. ඒ සමගම කකුලකින් පස් දමා එම වළ වසා දැමුවෙමි. එහෙත් ඒ ගෙඹි සිරුර දෙස බැලීමෙන් වැලකී සිටියෙමි.

වලවන් මගේ ග්‍රහණයෙන් මිදෙන්නට දැඟලුවේය. කකුල්වලින් ඇන්නේය. මගේ පපුවට අත තබා තල්ලු කළේය. ‘මම බිමින් තියන්න; මට එයා වීරත්වයට පත් කරල අවසන් ගෞරව දක්වන්න ඕන. බිමින් තියන්න’ යි කියමින් අඬන්නට පටන් ගත්තේය. ඔහුගේ ඇඬුම් හඬ මගේ හඬ පරයමින් ඒ භූමිය පුරා පැතිර යන්නට විය.””     

පින්තාරු කිරීම – Yulanie Jayasena

By

Read More

சாதியமும் புலிகளும் |புலிகளின் அதிகாரபூர்வ பார்வை

காலங்காலமாக தமிழீழ சமூகத்தின் உணர்வுடன் கலந்திருந்த வெறுக்கத்தக்க ஒடுக்குமுறையாகிய சாதியப் பேய் இன்று தனது பிடியை இழந்து வருகிறது. எமது 18 வருடகால ஆயுதப்போராட்டம் இதைச் சாதித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்படைந்து வர வர சாதியத்தின் முனையும் மழுங்கிவருகின்றது.

அப்படியிருந்த பொழுதிலும் சாதிய ஒடுக்குமுறையின் வெளிப்பாடுகளை சிற்சில இடங்களில் இன்றும் காணக்கூடியதாகவே உள்ளது. அவ்விதம் நாம் சந்தித்த ஒரு முக்கிய சம்பவத்துடன் கட்டுரை ஆரம்பமாகிறது.

சாதியம் தொடர்பான புலிகளின் கருத்தை இக்கட்டுரை தொட்டுச் செல்கிறது.

விடுதலைப்புலிகள் – புலிகளின் அதிகாரபூர்வ இதழ் – 1991 ஐனவரி

00

யாழ்ப்பாண நகருக்குச் சமீபமாக ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் ஒரு நல்ல தண்ணீர்க் கிணறு இருக்கிறது. அந்தக் கிணறு அமைந்திருக்கும் காணி ஒரு தனிமனிதருக்குச் சொந்தமானது. அந்தத் தனிமனிதர் தன்னை ஒரு “உயர்சாதிக்காரர்” என எண்ணிக்கொள்பவர். அந்தக் கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் எனப்படும் ஒரு மக்கள் பிரிவும் இருக்கிறது. இந்த மக்களுக்கு குடிதண்ணீர் வசதியில்லை. இவர்கள் இந்த நல்ல தண்ணீர்க் கிணற்றிற்கு வருகிறார்கள். தண்ணீர் அள்ளுவதற்கு முயற்சிக்கிறார்கள். இதைக் கண்டதும் கிணற்றுக் காணியின் சொந்தக்காரர் ஓடிவருகிறார். தண்ணீர் எடுப்பதற்குத் தடை விதிக்கிறார். தாழ்த்தப்பட்டோர் தனது கிணற்றை தீண்டக்கூடாது என்கிறார்.

இதே போன்று வடமராட்சியில் ஒரு சம்பவமும் காரைநகரில் ஒரு சம்பவமும் நடக்கிறது.

பாதிக்கப்பட்ட அந்த ஏழை மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் வந்து முறையிடுகின்றார்கள். விடுதலைப்புலிகள் அந்த “உயர்சாதிக்காரர்” என்பவரை அழைத்து நியாயம் கேட்கிறார்கள். சமூக நீதி – சமத்துவம் பற்றி விளக்குகிறார்கள். மாறும் உலகத்தைப் பற்றியும் மனித நாகரிகத்தைப்பற்றியும் பேசுகின்றார்கள். கிணற்றுச் சொந்தக்காரர்கள் இலகுவாக மசிவதாக இல்லை.

தனது காணி, தனது கிணறு, தனது சாதி என அகம்பாவம் பேசுகிறார். உளுத்துப்போன சமூக மரபுகளை நியாயமாகக் காட்ட முனைகிறார்கள்.

இவைகள் உண்மையில் நடந்த சம்பவங்கள். இப்படிச் சில சம்பவங்களை யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் சந்திக்கின்றார்கள்.

சாதிவெறி என்ற பிசாசு எமது சமூகத்திலிருந்து இன்னும் ஒழிந்துவிடவில்லை என்பதற்கு இந்தச் சம்பவங்கள் நல்ல உதாரணம்.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில், சாதிப்போய் கோரத் தாண்டவம் ஆடியது. அதுதான் சமூக நீதியாகவும் பேணப்பட்டுவந்தது. பின்னர் அதற்கெதிராக நியாயம் கேட்டு, அடக்கப்பட்ட மக்கள் போர்க்குணம்கொண்டார்கள்.

“அடங்காத்தமிழர்”? ஒரு புறமும் அடக்கப்பட்ட தமிழர்கள் ஒருபுறமுமாக களத்தில் இறங்கினார்கள்.

தாழ்த்தப்பட்டோர் எனப்படும் மக்களுக்கு கோவில்கள் திறந்துவிடப்படவேண்டும், தேனீர்க் கடைகளில் பாகுபாடு காட்டப்படக்கூடாது என்பதுதான் இந்தச் சாதிய எதிர்ப்புப் போராட்டத்தின் குறிக்கோள்.

இதற்காக மோதல்கள் நடந்தன. இரத்தம் சிந்தப்பட்டது. உயிர் இழப்புகளும் நடந்தன.

இது அன்றைய காலகட்டத்தின் ஒரு முற்போக்கான போராட்டமாகும். அடக்கப்பட்ட அந்த மக்களின் போர்க்குணம் புரட்சிகரமானது.

ஆனால் தீண்டாமையைக் கடைப்பிடிப்போரின் மனம் திறபடாமல் கோவில்களைத் திறப்பதிலோ தேனீர்க்கடைகளில் சமவுரிமை கிடைப்பதிலோ சாதியம் ஒழிந்துவிடப்போவதில்லை.

அதே சமயம் “தீண்டாமை ஒழிப்பு” என்ற பெயரில் சாதிய ஒழிப்பிற்காகக் கூட்டணித் தலைவர்கள் நடாத்திய போராட்டம் கேலிக்கூத்தானவை மட்டுமல்ல சாதியத்திற்கு எதிரான அடக்கப்பட்ட மக்களின் போர்க்குணத்தைத் தமக்கே உரிய “புத்திசாதுரியத்துடன்” மழுங்கடிக்கும் ஒரு சதிச்செயலுமாகும்.

இவர்கள் நடாத்திய “சம பந்திப்போசனம்” என்ற நாடகம் தங்களை “உயர்சாதிக்காரர்கள்” என தம்பட்டம் அடித்து விளம்பரப்படுத்தத்தான் பயன்படுத்தினார்கள். கூட்டணியினரின் இந்தப் போராட்டங்கள் அரசியல் இலாபங்களுக்காக நடாத்தப்பட்ட விளம்பரங்களேயல்லாமல் சாதிய முரண்பாட்டை அழித்துவிடும் புரட்சிகர நோக்கத்தைக் கொண்டதல்ல.

“சாதியம்” என்பது காலம் காலமாக எமது சமுதாய அமைப்பில் வேரூன்றிக்கிடக்கும் ஒரு சமூகப் பிரச்சனை. வேதகால ஆரிய நாகரீகத்தின் வர்ண குல அமைப்பிலிருந்து சாதிப்பிரிவுகள் தோற்றம் கொண்டன என்றும், பின்னர் திராவிட சமுதாயத்தில் சாதியம் வேரூன்றிப் பரவியது என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். பிராமணர்கள் வேத நூல்களை எழுதினார்கள். மனுநீதி சாஸ்திரங்களைப் படைத்தார்கள். இவற்றில் எல்லாம் பிராமணரை அதி உயர்ந்த சாதியாகக் கற்பித்து சாதிய அமைப்பை இறைவனின் படைப்பாக நியாயப்படுத்தினார்கள் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. சாதியத்தின் மூலத்தை ஆராய்ந்தபடி செல்வது இங்கு அவசியமில்லை. எங்கிருந்தோ, எப்படியோ இந்த சமூக அநீதிமுறை தமிழீழ சமுதாயத்திலும் வேரூன்றி விருட்சமாகிவிட்டது. தமிழீழ மக்களின் சமூக உறவுகளுடனும், சம்பிரதாயங்களுடனும், பொருளாதார வாழ்வுடனும், கருத்துலகப் பார்வையுடனும் பின்னிப் பிணைந்ததாக சாதியம் உள்ளது என்பது யதார்த்த உண்மை. சாதிய முறை, தொழிற் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார உறவுகளிலிருந்து எழுகிறது. மத நெறிகளும் சித்தாந்தங்களும், சட்டங்களும் சாதிய முறையை நியாயப்படுத்தி வலுவூட்ட முனைகின்றன.

மத நெறிகளும் சித்தாந்தங்களும், சட்டங்களும் சாதிய முறையை நியாயப்படுத்தி வலுவூட்ட முனைகின்றன.

கிராமியப் பொருளாதார வாழ்வை எடுத்துக்கொண்டால் தொழிற் பிரிவுகளின் அடிப்படையில் சாதிய முறை அமையப்பெற்றிருப்பதைக் காணலாம். ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சாதி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது. ஒரு தொழில் உன்னதமானது, மற்றைய தொழில்கள் உன்னதம் குறைந்தது அல்லது இழுக்கானது என்ற மூட நம்பிக்கையின் அடிப்படையில், தொழில் செய்து வாழும் மக்கள் சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தொழில் பிரிவுகளிலிருந்தும் அவற்றிற்குக் கொடுக்கப்பட்ட பொய்யான அந்தஸ்த்துக்களில் இருந்தும் “உயர் சாதி” “தாழ்ந்த சாதி” என்ற மூடத்தனமான சமூக உறவுகளும் அவற்றைச் சூழவுள்ள சடங்குகள், சம்பிரதாயங்களும் தோற்றம் கொண்டுள்ளன.

செய்யும் தொழில் எல்லாம், உயர்ந்தது, உழைப்பில் உன்னதமானது, இழுக்கானது எனப் பாகுபாடு காட்டுவது மூடத்தனம். தொழிலின் மகத்துவத்தை சாதியம் இழிவுபடுத்துகிறது. உழைக்கும் வர்க்கத்தை, உண்மையான பாட்டாளி வர்க்கத்தை தாழ்த்தப்பட்டோர் என்றும் தீண்டாதார் என்றும் அவமானப்படுத்துகிறது. மனித அடிமைத் தனத்திற்கும், படுமோசமான ஒடுக்குமுறைக்கும், சுரண்டல் முறைக்கும் சாதியம் காரணியாக இருந்து வருகிறது.

தொழிலின் மகத்துவத்தை சாதியம் இழிவுபடுத்துகிறது. உழைக்கும் வர்க்கத்தை, உண்மையான பாட்டாளி வர்க்கத்தை, தாழ்த்தப்பட்டோர் என்றும் தீண்டாதார் என்றும் அவமானப்படுத்துகிறது.

நீண்டகாலமாக எமத சமூதாயத்தில் நிலவி வந்த சாதிய வழக்குகளையும் சம்பிரதாயங்களையும் தொகுத்து அந்நிய காலனித்துவ ஆட்சியாளர்கள் சட்டமாக்கினார்கள். இதுதான் தேச வழமைச்சட்டம் எனப்படும். இச்சட்டங்கள் சாதியப் பிரிவுகள் பற்றியும் சாதிய வழக்குகள் பற்றியும் விளக்குகின்றன. சாதியத்தை நியாயப்படுத்தி வலுப்படுத்த முனைவதோடு உயர்சாதிக்காரர் எனக் கருதப்படும் ஆளும்வர்க்கத்தின் அபிலாசைகளைப் பேணும் வகையிலும் இந்தச் சட்டத்தொகுப்பு அமைந்திருக்கிறது.

பிரித்து ஆளும் கலையில் கைதேர்ந்த அந்நிய காலனித்துவவாதிகள் மூட நம்பிக்கைகளிலிருந்து பிறந்த சமூக வழக்குகளை சட்டவடிவமாக்கி சாதிய முரண்பாட்டை வலுப்படுத்தினார்கள். சாதியத்தால் பயனடைந்த உயர்சாதியினர் எனப்படுவோர் சாதியத்தை எதிர்க்கவில்லை. இந்தப் பழைய பிற்போக்கான ஆளும் வர்க்கம் அரசியல் அதிகாரத்தை நாடியதே தவிர எமது சமூகத்தில் நிலவும் அநீதிகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப்போராடத் துணியவில்லை.

பதவிகளைக் கைப்பற்றிக்கொள்வதற்காக காலத்திற்குக் காலம் சாதிய எதிர்ப்புப் போராட்டம் என்ற போர்வையில் சில கேலிக்கூத்துக்களை நடாத்தி அப்பாவிகளான அடக்கப்பட்ட மக்களின் ஆதரவுகளைப் பெற்று பதவிக்கட்டில் ஏறினார்கள்.

விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் அவர்கள் முன்னெடுத்த தேசிய விடுதலைப் போராட்டமும் தமிழீழ சமுதாயத்தில் ஒரு யுகப்புரட்சியை உண்டு பண்ணியது எனலாம். அரச பயங்கரவாத அட்டூழியங்களும் அதனை எதிர்த்து நின்ற ஆயுதம் தரித்த விடுதலைப் போராட்டமும் எமது சமூக அமைப்பில் என்றுமில்லாத தாக்கங்களை விழுத்தின. பழமையில் தூங்கிக்கொண்டிருந்த எமது சமுதாயம் விடுதலை வேண்டி விழித்தெழுந்தது. வர்க்க, சாதிய காழ்ப்புணர்வுகளுக்கு அப்பால் தேசாபிமானப் பற்றுணர்வு தோன்றியது. தமிழீழ மக்கள் ஒரே இன மக்கள் என்ற இனவுணர்வும் பிறந்தது. சாதிய வேர்களை அறுத்தெறிந்து எல்லா சமூகப்பிரிவுகளிலிருந்தும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் ஒரு தேசிய விடுதலை இராணுவத்தைப் புலிகள் இயக்கம் கட்டி எழுப்பியது. ஒரு தேசிய விடுதலை இயக்கமாக புலிகள் கண்ட வளர்ச்சியும் அவர்களது புரட்சிகர அரசியல் இலட்சியங்களும் சாதியத்திற்கு ஒரு சவாலாக அமைந்தது. தேசிய சுதந்திரத்தை மட்டுமன்றி சாதியம் ஒழிக்கப்பட்ட ஒரு சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்பும் உறுதியான கொள்கையில் எமது இயக்கம் செயற்பட்டு வருகிறது.

புலிகள் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் அவர்களது இலட்சியப் போராட்டமும் சாதி வேறுபாட்டிற்கு அப்பாற்பட்ட புலிகளின் செயற்பாடுகளும் சாதிய அமைப்பின் அடித்தளத்தில் ஒரு பெரிய உடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இது சமூகத்தின் உணர்வுகளிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சாதி குறித்துப் பேசுவதோ, செயற்படுவதோ குற்றமானது என்பதைவிட – அது வெட்கக்கேடானது, அநாகரிகமானது என்று கருதும் ஒரு மனப்பாங்கு எமது சமூகத்தில் உள்ளது.

இது சாதியம் தொடர்பாக காலம் காலமாக இருந்துவந்த சமூக உணர்வில் ஏற்பட்ட பிரமாண்டமான மாற்றமாகும்.

இருந்தாலும் சாதியப் பேயை எமது சமூகத்திலிருந்து முற்றாக ஓட்டிவிடமுடியவில்லை. சாதிய வழக்குகள் இருக்கத்தான் செய்கின்றன. சாதிய வெறியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சாதியப் பிரச்சனைகளையும் நாம் சந்திக்கத்தான் செய்கிறோம்.

காலம் காலமாக எமது சமூகத்தில் வேரூன்றி வளர்ந்து மக்களின் ஆழ் மனதில் புரையோடிவிட்ட ஒரு சமூக நோயை எடுத்த எடுப்பிலேயே குணமாக்கி விடுவதென்பது இலகுவான காரியம் அல்ல. அப்படி நாம் அவசரப்பட்டு சட்டங்கள் மூலமாகவோ நிர்ப்பந்தங்கள் மூலமாகவோ சாதியப் பேயை விரட்ட முனைவதும் புத்திசாலித்தனமானது அல்ல.

இன்றைய நிலையில் இந்தப் பிரச்சனைகளை நாம் இவ்விதமாகப் பார்க்கலாம்.

உயிர் வாழ்வுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களில் சாதி வெறி காட்டி அடக்கப்பட்ட மக்களைச் சாவின் விளிம்புக்கு இட்டுச் செல்ல வைத்தல். இது கொடூரமானது. அனுமதிக்க முடியாதது.

மற்றையது, சாதி ரீதியான ஏனைய முரண்பாடுகள். இவற்றை அதனதன் தன்மைகளுக்கேற்றவிதத்தில் பல்வேறு அணுகுமுறைகள் மூலம் கால ஓட்டத்தில் செயல் இழக்கச் செய்யலாம்.

சாதியத்தால் பயனடைந்த உயர்சாதியினர் எனப்படுவோர் சாதியத்தை எதிர்க்கவில்லை. இந்தப் பழைய பிற்போக்கான ஆளும் வர்க்கம் அரசியல் அதிகாரத்தை நாடியதே தவிர எமது சமூகத்தில் நிலவும் அநீதிகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப்போராடத் துணியவில்லை.

புலிகளின் விடுதலைப் போராட்டமும், அதனால் எழுந்த புரட்சிகர புறநிலைகளும் சாதிய அமைப்பை தகர்க்கத் தொடங்கியிருக்கிறது. எனினும் பொருளாதார உறவுகளிலும் சமூகச் சிந்தனைகளிலும் அடிப்படையான மாற்றங்கள் நிகழாமல் சாதியம் முற்றாக ஒழிந்துவிடப்போவதில்லை. எனவே சாதிய ஒழிப்புக்கு சமுதாயப் புரட்சியுடன் மனப் புரட்சியும் அவசியமாகிறது.

பொருளாதார சமத்துவத்தை நோக்கமாகக்கொண்ட சமுதாயப் புரட்சியை முன்னெடுப்பது புலிகளின் அடிப்படையான கொள்கைத் திட்டமாகும். தேசிய விடுதலையைப்பெற்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னரே இந்தக் கொள்கைத் திட்டத்தைச் செம்மையாகச் செயற்படுத்தமுடியும். ஆயினும் விடுதலைக்கு முந்திய காலத்திலிருந்தே கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் புரட்சிகரமான பொருளாதார திட்டங்களைச் செயற்படுத்தி கூட்டுத்தொழில் முயற்சிகளை அமுல்படுத்தி சாதிய உறவுகளை படிப்படியாக உடைத்தெறிவது சாத்தியமானதொன்று.

சமூகச் சிந்தனையில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவருவது சாதிய ஒழிப்புக்கு அத்தியாவசியமானது. ஏனெனில் சாதிய வழக்குகளும், சம்பிரதாயங்களும் மூட நம்பிக்கைகளில் தோற்றம் கொண்டிருக்கின்றன. இந்த அறியாமையைப்போக்க மனப்புரட்சி அவசியம். மன அரங்கில் புரட்சிகரமான விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம். இங்குதான் புரட்சிகரக் கல்வி முக்கிய இடத்தைப் பெறுகிறது.

எமது இளம் பரம்பரையினருக்கு புரட்சிகரக் கல்வி போதிக்கப்பட வேண்டும். பழைமையான பிற்போக்கான கருத்துக்கள், கோட்பாடுகள், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு புதிய முற்போக்கான உலகப் பார்வையை புதிய இளம் பரம்பரையினர் பெற்றுக்கொள்ள வேண்டும். அறியாமை இருள் நீங்கி புதிய விழிப்புணர்வும், புரட்சிகரச் சிந்தனைகளும் இளம் மனங்களைப் பற்றிக்கொண்டால்தான் சாதியம் என்ற மன நோய் புதிதாகத் தோன்றப்போகும் புரட்சிகர சமுதாயத்திலிருந்து நீங்கிவிடும்.

By

Read More

× Close