ஈழத்து நாவல்களில் என்ன விசேடமாக இருந்துவிடப்போகின்றது என்ற பிரஞ்சை பெரும்பாலானோர்க்கு இருப்பதுண்டு. ஓலம் ஒப்பாரி கண்ணீர் மீண்டும்மீண்டும் மரணம் என்றே பேசிக்கொண்டிருக்கும். ஈழம் வலிகளினாலும் ஓலத்தினாலும் நிரம்பியது. நாம் சந்தித்த கண்ணீர் முடிவற்றது. கொடுத்த தியாகங்கள் கற்பனைக்கு எட்டமுடியாத பிரமாண்டமானவை. இவற்றின் தரவுகளும் வலிகளும் எம்மிடம் ஏராளம் உண்டு. கடந்து வந்த வாழ்க்கையினை ஏதோவொரு விதத்தில் பதித்து வரலாற்றில் ஒப்பேற்றிவிட மனம் விரும்பிக்கொண்டிருக்கும். இவற்றைக் கட்டுரைகளாக எழுதுவதிலும் பார்க்க கதை…
Author: sayanthan
சுதாகர் சாய்
ஆதிரை, சயந்தனின் இரண்டாவது நாவல். சிங்கமலை லெட்சுமணனின் நினைவுகளாக விரியும் ஆதிரை, ஈழத்தின் முப்பது ஆண்டுகால யுத்தப் பின்னணியியில் நிகழும் பெரும் கதை. தூக்கத்திலும் துயரத்தை இதயத்தில் சுமத்து செல்லும் மனிதர்களை குறித்த களப் பதிவு. ஆதிரை வலியின் உச்சம். மனிதர்கள்,மரங்கள்,பறைவைகள்,விலங்குகள், விவசாயம், தெய்வங்கள், வழிபாடு,வேட்டை முறைகள், உணவு வகைகள், வாகனங்கள், யுத்தகருவிகள்,போர்முறைகள்,பதுங்கு குழிகள்,பாட சாலைகள் என அனைத்தையும் துல்லியமாக பதிவாக்கியிருப்பது நாவலின் சிறப்பு. தனிக்கல்லடி,ஓதியமலை, காட்டுப்புலவு,மணலாறு, மந்துக்காடு,கட்டையடி,மல்லிகாபுரம், பிரமந்தனாறு,வாகையடி,வீரசோலை,ஏறாவூர்,…
கோகுல் பிரசாத்
A depressing book about three generations living amidst bomb shells. The writing was crisp, vivid and chilling. The mental ravages of ‘insanity killing’ echoes throughout the book. Female protagonists’ characterisation was unique and complete. ‘Aachimuthu’ will remind us Ma Joad from the famous Grapes of wrath. The human spirit’s basic…
பெயரற்றது – சிறுகதை
“ஓ.. பிரச்சனைதான். ஆர் என்னாக்கள் எண்டு ஒண்டும் தெரியாத கண்ட கண்ட நாயெல்லாம் வந்து கோயில் கிணத்தில குளிச்சிட முடியுமோ.. எல்லாத்துக்கும் ஒரு முறையிருக்கு. இது சாமிக்கு அபிசேகத் தண்ணியெடுக்கிற கிணறு.” என்ற கோயிற்காரர் “கொண்டா இங்கை” என்று வாளியை இவனிடமிருந்து பறித்து கயிற்றைக் கப்பியிலிருந்து கழற்றிய நேரம் இவனுக்குக் கோபம் கிளம்பியது. சோப்புப் போட்டவரைப்பார்த்து குரலை உயர்த்தி “அண்ணை வாங்கோ, எனக்கு இயக்கக்காரரைத் தெரியும். போய்ச் சொல்லுவம். வெளிக்கிடுங்கோ”…
குற்ற உணர்வின் பிரேத பரிசோதனை: யதார்த்தன்
நான் போரினை உணரத்தொடங்கும் போது போர் முடியத்தொடங்கி விட்டது. துப்பாக்கிகளும் பீரங்கிகளும் கிபிர் சத்தமும் உறுமி கேட்ட செவிப்பறைகளை கொண்ட இறுதித்தலை முறையாக நாங்கள் நிற்கின்றோம். தோற்ற தரப்புகளும் வென்ற தரப்பும் எஞ்சிய தர்ம அதர்மங்களை பங்கு போட்டு இன்னும் முடியவில்லை. ஒட்டு மொத்த மானுட இருப்பையும் போர்கள் மாற்றியமைத்தன . ஈழம் அதற்கு விதி விலக்கல்ல. மக்கள் தோற்ற தரப்பிற்கும் வென்ற தரப்புக்கும் இடையே முப்பது வருடங்களாக மாற்றப்படாத…