ஆறா வடு – நந்தா கந்தசாமி sayanthan, March 15, 2012 சாரலின் ஆரம்ப காலங்களில் இருந்தே தனித் தன்மையான எள்ளலுடன் கூடிய சயந்தனின் எழுத்துகளுடன் எனக்கு பரீட்சயம் உண்டு, சயந்தன் ஒரு நல்ல சிறுகதை சொல்லி. சயந்தனின் ஏற்கனவேயான அறிமுகம் ஆறாவடு நாவலை வாசிக்க தூண்டியது.கனடாவில் வெளியீடு நடக்கும் என அறிவிப்பு வராத ஒரு தரணத்தில் இந்தியாவில் இருந்து அந்த நாவலை எனது நண்பி ஒருவர் அனுப்பி இருந்தார். எந்த புத்தகத்தையும் ஒரே மூச்சில் படித்து முடிப்பது எனது வழக்கம் அல்ல. … Continue Reading
ஆறா வடு – கறுப்பி sayanthan, March 15, 2012 ”இனிமேல் படைப்புக்களை விமர்சனம் செய்பவர்களை, அப்படைப்பில் இருக்கும் அரசியலை தவிர்த்து படைப்பின் மற்றைய குணங்களை விமர்சனத்திற்குட்படுத்துக்கள் என்று கேட்டுக்கொள்ளல் நன்று” ”இப்போது இரண்டு இலக்கியத் தரப்புக்கள் உருவாகி விட்டன. ஒன்று யோ.கர்ணனைத் துாக்கிப் பிடிக்கின்றது, மற்றது சயந்தனைத் துாக்கிப் பிடிக்கின்றது’ ’இப்போது இரண்டு சார்புநிலைகள் இலக்கியவிமர்சனங்களில் உருவாகி விட்டன. ஒன்று புலிசார்பு இலக்கியங்கள், மற்றையது புலி எதிர்ப்பு இலக்கியங்கள்” ”உலகமே சார்பு நிலையில் தான் இயங்கிக்கொண்டிருக்கின்றது, அதிலிருந்து எவரும் தப்ப… Continue Reading
ஆறா வடு – கவிஞர் திருமாவளவன் sayanthan, March 15, 2012 (ஆறாவடு நாவலில்) ஆரம்பத்தில் கேலியும் கிண்டல் சார்ந்த விமர்சனங்கள் எல்லா இயங்கங்கள் மீதும் சம அளவில் இருந்தது. புலிகள் மீது தூக்கலாக இருந்தது என்றுகூட சொல்லலாம் போகப்போக அது தணிந்து புலிகள் மீது ஒரு அனுதாபப் பார்வை, விட்டுக்கொடாத தன்மை, அல்லது போற்றுதல் தனம் என்பதுபோல உணரமுடிந்தது. இதுவே ஒருவருக்கு பிடிக்காமல் போனதும் கட்டுரையாளருக்கு அவையே பிடித்துப்போன இடங்களுக்கு கா…ரணமாக அமைந்தது என நான் நினைக்கிறேன். நானும் கட்டுரையாளரின் கருத்தையே… Continue Reading
ஆறா வடு – நடராஜா முரளிதரன் sayanthan, March 15, 2012 தமிழினி வசந்தகுமாரின் வார்த்தைகள் பெரும்பாலும் மெய்ப்பிக்கப்பட்டதாகவே சயந்தனின் “ஆறா வடு” நாவலை வாசித்து முடித்தபோது என்னால் உணரக்கூடியதாக இருந்தது. சில தினங்களுக்கு முன்பாக இந்நாவலை வாசிக்க ஆரம்பித்தபோது பல்வேறு சிக்கல்கள், வேலைகள் என்பன குறுக்கீடு செய்து கொண்டிருந்தது. அதனையும் மீறி அரைவாசிக்கட்டத்தை நான் தாண்டியபோது மீதி அரைவாசியையும் உடனே படித்து முடித்துவிட வேண்டுமென்ற உந்துதலை அந்த நாவல் உண்மையாகவே அளித்தது. இலங்கைப் பிரச்சினையில் இந்தியத் தலையீடு, அதற்குப் பின்னரான இலங்கை… Continue Reading
ஆறா வடு – லேகா சுப்ரமணியம் sayanthan, March 15, 2012 மனதை கலங்கடிக்கும் எத்தனையோ நாவல்களை புனைவு என வகைப்படுத்தி எளிதில் கடந்து விட முடிந்தது.அவ்விதம் தப்பித்து கொள்ள வழியில்லாது செய்து விட்டது சயந்தனின் “ஆறா வடு”. “நிழலை விலக்க முடியாதபோது தோற்றுப் போன போர் வீரன் பாதுகாப்பில்லாத வெளியில் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தான் மூடியிருந்த கதவுகள் அவனை அச்சமடையச் செய்தன திறந்திருந்த கதவுகளும் அபாயமாகவே தோன்றின …” – கருணாகரன் Continue Reading