நடந்த காலங்களில் வலியையும் இரவுகளில் கண்ணீரையும் தந்த சில சம்பவங்கள் பின்னர் காலக் கிடங்கில் ஆழ அமிழ்ந்து போய் விடுகின்றன. மீண்டும் எப்போதாவது சமயங்களில் ஞாபகிக்கும் போது வலி தந்த அதே சம்பவங்களே சிரிப்பையும் ஒரு வித சுய ஏளனத்தையும் தருகின்றன.
அதிகாலை 6 மணிக்கு அவள் தன் வீட்டிலிருந்து புறப்படுவாள்.
அதனைத் தொடர்ந்து அவளைத் தொடர்ந்து அவனும்!
எப்பொழுதுமே சந்திப்புக்கள் எதேச்சையாக அமைய வேண்டும் என்பதற்காக அவன் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வான்.
‘என்ன அடிக்கடி காலையிலை சந்திக்கிறம்.”
அவளுக்குத் தெரியாது!
வீதியின் வளைவுகளில் மறைந்திருந்து அவள் வருகை தெரிய ஓடிப் போய் அப்போது தான் வருவதாய் அவன் உணர்த்துவது அவளுக்கு தெரியாது.
நடக்கின்ற அந்த பத்து மணித்துளிகளில் அவர்கள் அரசியல், குண்டு வெடிப்புக்கள், சினிமாக்கள் என்று பலதும் பத்தும் பேசிக் கொள்வார்கள்.
ஒரு காலை!
நடக்கின்ற வழியில் மழை தூறத் தொடங்கியது!
குடை எடுத்து விரித்தாள் அவள்.
அவன் மேல்த் தூறல்கள் விழத் தொடங்கின
லேசாய் இடித்தது! காலைக் குளிரில் மழையின் குளிர் வேறு! மின்னல் தெறித்தது. தெறிப்பில் அவள் முகம்…. (டேய் கதையைச் சொல்லடா )
‘……” பெயர் சொல்லி அழைத்தாள் அவள்.. என் பெயர் இத்தனை அழகா என்று அவன் நினைக்க முன்பாக (ஐயோ.. ஐயோ..) அவள் சொன்னாள்.
‘மனசுக்குள்ளை ஒண்டுமில்லாட்டி குடைக்குள்ளை வாங்கோ”
‘மனசுக்குள்ளை ஒண்டும் இல்லாட்டி????”
குடைக்குள் போகாமல் மனசுக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது என உணர்த்தலாமா?
அல்லது மனசுக்குள்ளை கிடக்கிறது மண்ணாங்கட்டி! கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி கொள்வோமா?
ஆயிரம் சிந்தனைகளோடு அவன்!
ஆனால் தூறலடித்த மழை அப்பவே நின்று போனது! மழையாக பொழியாமல்…
அவள் குடையை மடித்து வைத்துக் கொண்டாள்!
உடனடிக்கு நினைவுக்கு வராத மழைக்குப் பொறுப்பான கடவுள் மீது கோபம் வந்தது அவனுக்கு.
நாசமாப் போக!!!
Last modified: March 13, 2005
//நாசமாப் போக!!!//
ஹா,ஹா ஹா.
இப்படித் திட்டித்திட்டிதான் மழையே வரமாட்டேங்குது!
🙂
எழுதிக்கொள்வது: Thadcha
ஆழ்ந்த அனுதாபங்கள்!!
11.54 30.3.2005
அட!
இதக் கவனிக்கேலயே.
இல்லாட்டி வலைப்பதிவர் மாநாட்டில விவாதிச்சிருக்கலாமெல்லே. நல்லாயிருக்கு.
நல்லாயிருக்குது.
இன்னொரு நாள் மழை பெய்ததா? :o)