அண்மையில் சோமிதரன் கேரளா போய் வந்திருக்கிறார். ஏற்கனவே அவருக்கு பிட்டு அனுபவங்கள் இருப்பினும் பிட்டுக்குப் பிரபல்யமாகப் பேசப்படுகின்ற கேரளாவில் அவரது பிட்டு அனுபவங்களைப் பற்றிப் பேசுகிறது இப்பதிவு.
மொக்கைப் பதிவு வழங்கி நீண்ட நாட்களாகி விட்டது என்பதனாலும் அதுவே எந்த விதமான புயல்களுக்கும் கால் கோலாய் அமையாது என்ற காரணத்தினாலும் எழுதுவதில் உள்ள ஆர்வமும் தீவிரமும் இல்லாது போய்விட்டதாலும் இவ்வாறான பதிவுகள் இலகுவாகத் தெரிகின்றன.
தவிர சென்ற முறை வெளியான சோமியை திட்டமிட்டுப் புறக்கணிக்கும் திரைமறைவு நாடகங்கள் என்பதான கிசுகிசுவை பொய்யாக்கவும்..::))))) வெளிவிடுகின்ற இவ் ஒலிப்பதிவைக் கேளுங்கள். பிட்டுப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Last modified: May 18, 2007
உழுத்தம் புட்டை விட்டிட்டியள்.. இப்ப புலத்திலை புட்டு கொத்து என்று உருவாக்கி வெள்ளைக்காரன் அந்த மாதிரி முழுங்குறான்
என்னுடைய சொய்ஸ் புட்டுக்கு மிளாகாய் பொரியல் தான்.
பிட்டு/ புட்டு உங்கள் பேச்சு பழைய ஞாபகங்களை கிளறிவிட்டது. ஆனா நாம் பிட்டு எணடது தான் சரி எண்டு நினைக்கிறம், ஆனா புட்டு எண்டு தான் கெரளாவிலை சொல்லுறதோ ???
என்னோட ஒரு கேரளா நண்பர், நான் பிட்டு எண்ட தாங்கள் புட்டு எண்டு சொல்லுற எண்டு சொன்னார்.
மூங்கில் குழாய்க்கு கயிறு சுத்துறது குழாய் வெக்கைக்கு விரிஞ்சு சுருங்கி வெடிக்காமல் இருக்க, துணி சுத்துறது, பானைக்க விழாமல் இருக்க
கேரளாவில் பிட்டு என்றால் மலையாளப் பட செக்ஸ் சீனுய்யா!
சயந்தன்
புட்டுக் குழாய்க்குள்ளை சில்லுப்போட மறந்திட்டா பிறகு களி கிண்டலாம் தானே?
அன்புடன்
சாதாரணன்
அய்யோ.. அய்யோ.. சோமித்ரனுக்கு கேரளத்துப் பிட்டை விட இலங்கைப் பிட்டுத்தான் ரொம்பப் பிடிக்குமாம்.. ..::::))))))
முன்னாடி சொதி இப்போ புட்டா?? 😉
கானா பிரபாவையும் சேர்த்திருக்கலாம். கேரளா பற்றி பேசும் போது அவரில்லாமலா..? அது சரி ஏன் சிநேகிதியை இடையில சேர்த்து இடையில அனுப்பினீங்க..?
//At 1:27 AM, Anonymous
கானா பிரபாவையும் சேர்த்திருக்கலாம். கேரளா பற்றி பேசும் போது அவரில்லாமலா..? //
அப்பிடிப் போடுங்க அரிவாளை
அட.. தமிழ் வலையுலகில் புட்டுப் பற்றி நிறையத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. மேலே அனானிகள் தந்த முகவரிகளில் பார்த்துக் கொள்ளுங்கள்.
//அப்பிடிப் போடுங்க அரிவாளை//
ஏனுங்க.. அத இப்பிடி போட்டா என்னா..?
uluththam puddu, aalankaai puddu, paal puddu,keetaippuddu enrellam naan sappiddu etukkiran.
ennaththa patti kathaikkirenkal enratha vida eppidi kathaikkirenkal enrathuthan intrestai etukku.
soomi annavukku pintija pirantha naal vaalththukkal.
krishna
புட்டது … பிட்டானால் ….