வசந்தனுக்கு இசையின் மீது தீராத காதல் இருப்பது உங்களில் பலருக்குத் தெரியாது. இசை மீதான அவரது காதல் நடனம் மீதான மோகமாக மாறியதில் வியப்பில்லைத் தானே. மாயாவின் பாடல் ஒன்றுக்கு அவர் எப்படி நடனப் பயிற்சி செய்கின்றார் என்பதை நீங்களும் பார்க்க வேண்டாமா..? வழமை போலவே என்னதான் தன் முகத்தை மறைக்க அவர் முயற்சித்தாலும் தருணங்கள் அவ்வப்போது காட்டிக்கொடுத்து விடுகின்றன.
நினைவில் வைத்திருங்கள் இது வெறும் ஒத்திகை தான்.
ஆடுகிறார் வசந்தன்
உயிராய்.. உணர்வாய்
பொதுவாவே எனக்கு கொஞ்சம் மென்மையான பாட்டுக்கள் கூடப் பிடிக்கும். துள்ளல் பாட்டுக்களை விட!
போன கிழழை ஒரு பாட்டு ஒண்டு பாக்கவும் கேட்கவும் கிடைச்சது. அதிலை என்ன வித்தியாசம் எண்டால்.. அது ஒரு காதல் பாட்டுத்தான்.. ஆண் குரல் சிங்களத்திலையும் பெண் குரல் தமிழிலையும் இருக்கிறது தான்.
என்னவோ கேட்ட உடனை பிடிச்சிட்டுது எனக்கு. வீட்டிலை இப்ப அது தான் அடிக்கடி போற பாட்டு.
சினிமா பாட்டெண்டால் சொல்லிட்டு விட்டிடலாம். எப்பிடியும் நீங்களும் கேப்பியள். இது கொஞ்சம் வித்தியாசம் தானே.. அது தான் இதிலை ஒலி வடிவிலை இணைச்சிருக்கிறன். எங்கை காணவில்லை எண்டு தேடுறியளோ?
வரும். வரும் என்ரை கதை முடிய பாட்டு வரும். நானும் கொஞ்சம் கதைக்கிறேனே!
பாட்டை பாடியிருக்கிறது சந்துஷ் பார்த்தி மற்றது நிரோஷா.. சிங்களப் பாடகியான நிரோஷா சிறீலங்கால பேசப்படுற ஒரு ஆள். அவ ஏதோ ஒரு தென்னிந்திய தமிழ்ச் சினிமாவிலையும் பாட்டொன்று பாடியிருக்கிறா!
மற்றது இலங்கையிலை சமாதானம் வேண்டி வெண்புறாவை வரச் சொல்லியும் ஒரு பாட்டு அவ பாடினவ. பாட்டு பாடி பத்து வருசமாயிருக்கும். வெண்புறா தான் இன்னும் வரேல்லை.
அதை விடுவம். இந்தப் பாட்டு ஆராலை எனக்கு கிடைச்சது எண்டதை நான் சொல்லாமல் விடேலாது. அப்பிடி விட்டால் நண்பன் எண்ட பேரிலை ஒராள் வந்து உங்களுக்கு நன்றி சொல்லுற பழக்கம் எல்லாம் கிடையாதோ எண்டு பின்னூட்டம் எல்லாம் விடுவார்.
அதனாலை இந்தப் பாட்டை எனக்கு வீடியோ வடிவில் அனுப்பினது சேயோன். அவருக்கு என்ரை நன்றி.
அகலப் பட்டையா பாட்டையா எண்டு தெரியேல்லை. எதுவோ அந்தப் பட்டை வைச்சிருக்கிறாக்கள்.. குடுத்திருக்கிற இந்தச் சுட்டியிலை போய் வீடியோவையும் தரவிறக்கி பாக்கலாம். நல்ல ஒளிப்பதிவு.
சரி. தொடர்ந்து பாட்டைக் கேளுங்கோ!!!