சினிமா

அது அடுத்தவன் நெருப்பு!

காலக் கரைதலில் கரைந்து போவது குறித்து அவனுக்கு கவலையெதுவும் இல்லை.
நாளையோ அல்லது பின்னோ அவன் காணாமல் போகலாம்.
ஆயினும் அது வழமையான காணமல் போதல் இல்லை என்பது குறித்து அவன் தெளிவுற்றிருந்தான்.
சன வெள்ளத்தில் அவன் தனித் தீவாயிருந்தான்.
நண்பர்கள் நினைவில் வந்து போனார்கள். நண்பர்களின் கல்லறைகள் வந்து போயின. அவர்களோடு அவைகளோடு பேசினான்.
தனக்கான கல்லறை யார் மனதிலும் வந்து போகாதென்பது அவனுக்குத் தெரியும்.
ஒரு நாளில்
தயாரானான்
புறப்பட்டுப்..
போனான்.. திரும்பவில்லை

+ + +

தடைகள் தகர்த்தெறியப்பட்டன என இவன் தலையங்கம் எழுதினான்.
அக்கு வேறு ஆணி வேராக ஆராய்ந்தான்.
முக்கிய திருப்பங்களை குறித்தான்.
இறந்த நிகழ் மற்றும் எதிர்காலங்களில் இருந்து தரவுகள் சேர்த்தான்.
எழுத்தெங்கும் தன் இராணுவ மற்றும் அரசியல் ஆய்வுத்திறன் வியாப்பித்திருக்க விரும்பினான்.
முடித்து அனுப்பி வந்து சேரும் வாழ்த்து மற்றும் பாராட்டுக்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். –21/07/2002

முதல்ப் பின்னூட்டம் இவ்வாறு ஆரம்பித்தது.
மிக நல்ல ஆய்வு. மிகத் திறமையாக ஆய்வு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

இரண்டாவது பின்னூட்டம் இவ்வாறு ஆரம்பித்தது.
உங்கள் ஆய்வு புதிய தகவல்களைத் தந்தது.. உங்களுக்குள் இத்தனை திறமைகளா.. பாராட்டுக்கள்

இவனுக்கு மனது குளிர்ந்தது. இப்போது நன்றிப் பின்னூட்டங்கள் எழுத ஆரம்பித்தான்.
பூச்சியத்துக்கு கீழான குளிரில் உடலும் குளிர்ந்தது. விறகெடுத்து மூட்டி வரும் நெருப்பில் கதகதப்பை உணர்ந்தான்.

அந்த விறகுகள் இவனுடையது இல்லை. – 05/04/2007

By

Read More

கருத்து உருவாக்கமும் ஈழ ஊடகங்களும் – ஒலிப்பத்தி

ஈழத் தமிழ்ச் சூழலில் ஊடகங்கள், சர்வதேச மக்கள் மத்தியிலும், சர்வதேசத்தின் முடிவெடுக்கும் அதிகார மையங்கள் மத்தியிலும், எவ்வளவு தூரம் கருத்துக்களை உருவாக்கும் ஊடகங்களாக செயற்படுகின்றன என்பது குறித்த ஒலிப்பத்தி இது.

புலம் பெயர்ந்த சூழலில், ஈழ நிலை குறித்து, வெளி மக்களுக்கு மிகச் சிறப்பாகக் கொண்டு சேர்க்கக் கூடிய வாய்ப்புக்களும், வசதிகளும் இருந்த போதும், அது பற்றி கிஞ்சித்தும் சிந்தியாது இணையம், பத்திரிகை, வானொலி, தொலைக் காட்சியென சகல ஊடகப் பரப்பிலும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் நம் மீதான சுய பார்வை இது.



By

Read More

றீகல் தியேட்டரில் படம் பார்த்திருக்கிறீர்களா..?

சாரல் பதிவின் தலைப்பில் இருக்கின்ற படம், யாழ்ப்பாணத்தில் இருந்த சினிமாத் திரையரங்குகளில் ஒன்றான றீகல் தியேட்டரின் முன்தோற்றம்.(அதற்காக பின்தோற்றமெல்லாம் இருக்குமென எதிர்பார்க்க முடியாது. முன்தோற்றம் மட்டும் தான்.) யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் முனியப்பர் கோவிலடிச் சூழலில் அமைந்திருந்த இத் திரையரங்கு, கோட்டைச் சமர்காலத்தின் அத்தனை வடுக்களையும் தாங்கி, இழந்தவை போக மிகுதியாக உள்ள ஒற்றை முன் சுவரோடு, ஏதோ இருந்திட்டு போகிறேன் என்பது போல காட்சியளிக்கிறது.

95 இன் ஒரு காலத்தில், ஒக்ரோபர் இடப்பெயர்வுக்கு சில காலமே முன்பாக, கோட்டையை அண்டிய பகுதிகளில் பதுங்கு குழிகள் வெட்டுவதற்காக, பொடிப்பயல்களாக இருந்த நாமும் போயிருந்தோம். போயிருந்தது மட்டும் தான், மற்றும் படி பராக்குத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். அதிலும் மதியம் புரியாணி தரப்படும் எனச் சொன்னதனால் மதியம் வரை காலங் கடத்த வேண்டிய புறச் சூழ்நிலை வேறு. (கிடைத்தது பாணும் பருப்பும் தான்:()

அப்போது தான் விரிவாக வீரசிங்கம் மண்டபம், றீகல் தியேட்டர், யாழ் நூல்நிலையம் என அச் சூழலில் அமைந்த பகுதிகளை சுற்ற முடிந்தது.

றீகல் தியேட்டரின் முன் சுவரில், 90 இல் (என நினைக்கிறேன்) ஓடிய இறுதித் திரைப்படத்தின் சுவரொட்டி ஒட்டப் பட்டிருந்தது. அது ஒரு ஆங்கிலப் படம். அது தவிர அது ஒரு வயது வந்தோருக்கான திரைப்படம் என்பது கூடுதல் செய்தி.

எடேய்.. இந்த தியேட்டரில இப்பிடிப் படமெல்லாம் போட்டிருக்கிறாங்களடா என நாம் நண்பர்களுடன் பேசிக் கொண்டோம். நம்மில் சிலருக்கு பெருமூச்சுக்களும் வந்தன.

பிற்காலங்களின் அறிதலில் இத் திரையரங்கில் பெரும்பாலும் ஆங்கிலத் திரைப்படங்களே திரையிடப்பட்டன எனவும் அக்கால இளைஞர்கள் தூர இடங்களில் இருந்து கூட இரவுக் காட்சிகளுக்கு வந்து சென்றதாயும் கேள்விப் பட்டேன்.

யாராவது இருக்கிறீங்களா.. :))

(சமாதானத்திற்கான காலத்தில் இச்சூழலை அண்டிய யாழ் நூல் நிலையம் உட்பட பல திருத்தப்பட்டிருந்தன. என் தனிக் கருத்தின் படி 81 இல் சிங்கள மேலாதிக்கத்தால் கொளுத்தி எரிக்கப்பட்டு கரிய கட்டடமாகக் கிடந்த தெற்காசியாவின் தலை சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ் நூலகம் அவ்வாறே எரிந்த நிலையில் பேணப்பட பிறிதொரு இடத்தில் நூல் நிலையத்தை அமைத்திருக்கலாம்.)

By

Read More

சொதி மீதான மறு வாசிப்பும் சோமியின் பாடலும்

நாமோர் உறுதியெடுத்திருந்தோம். வெறுமே அலட்டுகிறோமெனவும், வெறும் வெண்ணைகளாயிருக்கிறோமெனவும், சிரித்துச் சிரித்து வந்த சீனாத்தானா போல சித்தரிக்கப்பட்டிருந்த நிலையில், எங்களாலும் பயனுள்ள வகையில் எதையாவது தரமுடியுமென நிரூபித்திருக்கிறோம். இது ஆரம்பம் தான். இந்த ஒலிப்பதிவில் நிறையப் பயனுள்ள தகவல்களைத் தந்த சென்னைச் சாமி எங்கள் சோமிக்கு நன்றி.



By

Read More

சொதி மீதான மறு வாசிப்பும் சோமியின் பாடலும்

நாமோர் உறுதியெடுத்திருந்தோம். வெறுமே அலட்டுகிறோமெனவும், வெறும் வெண்ணைகளாயிருக்கிறோமெனவும், சிரித்துச் சிரித்து வந்த சீனாத்தானா போல சித்தரிக்கப்பட்டிருந்த நிலையில், எங்களாலும் பயனுள்ள வகையில் எதையாவது தரமுடியுமென நிரூபித்திருக்கிறோம். இது ஆரம்பம் தான். இந்த ஒலிப்பதிவில் நிறையப் பயனுள்ள தகவல்களைத் தந்த சென்னைச் சாமி எங்கள் சோமிக்கு நன்றி.



By

Read More

× Close