ஒளிப்படம்

நான் வளர்கிறேனே! மம்மி

உங்கள் எல்லாருக்கும் இண்டைக்கு நான் வளந்த படங்கள் காட்டப்போறன். குட்டிப் பெடியனா இருக்கேக்கை எடுத்த படங்களில இருந்து இந்தா இப்ப முந்தாநாத்து எடுத்த படம் வரைக்கும்… படங்களோடை கொஞ்சம் கதைக்கவும் போறன்..
Image hosted by Photobucket.com

இந்தப்படம் என்ரை பிறந்தநாள் ஒண்டுக்கு எடுத்த படம். என்ன அமைதியா நல்ல பெடியனாய் இருக்கிறன் என்ன? ம்.. சொல்ல மறந்திட்டன். இந்தப் படம் எடுத்தண்டு தான் இந்தியா எங்களுக்கு சாப்பாடு போட்டது.


Image hosted by Photobucket.com
இந்தப்படத்தை ஏற்கனவே என்ரை வலைப்பதிவில போட்டிருக்கிறன். ஏதோ ஒரு நாடகத்தில (பெயர் மறந்து போச்) நான் ரீச்சர் வேசம் போட்டிருக்கிறன். அசல் பொம்பிளை மாதிரி சீலை நுனியை பிடிச்சிருக்கிறனாம் எண்டு ஆரோ பின்னூட்டம் அப்ப போட்டிருந்தவை. 93 காலப்பகுதியில எடுத்த படமெண்டு நினைக்கிறன்.

Image hosted by Photobucket.com

ஹி..ஹி.. இந்தப் படத்தை வைச்சு வசந்தன் ஒரு போட்டியே அறிவிச்சிருந்தவர். கனபேர் சரியா சொல்லியிருந்தவை. அதுக்கு காரணம் வசந்தன் என்ன படம் போட்டாலும் அது நானாய்த்தான் இருப்பன் எண்ட மாதிரி போட்டுது. ஆனா முதலில இந்தப்படத்தை பாத்த வசந்தனும் உது ஆரெண்டு தான் கேட்டவர். 96 இல வன்னியில முத்தயன் கட்டு அணைக்கட்டோரம் எடுத்த படம் இது. வடிவா இருக்கிறன் தானே!

Image hosted by Photobucket.com

2003 இல ஒரு நாள். வெளிய மழை பெய்து கொண்டிருந்தது. யன்னலைத்திறந்து விட்டுவிட்டு மழைச்சாரல் என்னில பட படுக்கிறதுக்கு எனக்கு சரியான விருப்பம். அப்பிடிப் படுத்திருந்தவனை தட்டி எழுப்பி ராகுலன் எடுத்த படம் இது. தலைகணியை விட மாட்டாங்கள்!



Photobucket - Video and Image Hosting

கடைசியாக

By

Read More

கிட்டு மாமா பூங்கா

யாழ்ப்பாணத்தில நல்லூருக்கு கிட்டவாக இறுதிக்காலங்களில் நான் யாழ்ப்பாணத்திலிருந்த எங்கள் வீட்டுக்கு அண்மித்தாக கிட்டு மாமா பூங்கா இருந்தது.

எனக்கு சுப்பிரமணிய பூங்கா தெரியாது. விருத்தெரிய முதலே அது அழிந்து விட்டது. பூங்கா என்றால் இப்படி இப்படி இருக்குமாம் என்று கேள்விப்பட்டதனை முதலில் நேரடியாக பார்த்தது இங்கு தான்.

அப்பிடியென்ன பிரமாதம் உலகில் இல்லாத பிரமாதம் என யாரும் கேட்கலாம். அப்படி எதுவும் இல்லைத்தான். ஆனால் யுத்த காலத்தில் எங்கள் வயதொத்த சிறுவர்களின் மகிழ்வுக்கான தளமாக அது இருந்தது.

யாழ்ப்பாணம் சிங்கள இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட போது இந்தப் பூங்கா, புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் எல்லாம் அழித்தொழிக்கப்பட்டன. அதிலும் துயிலும் இல்லம் புல்டோசர் கொண்டு தூர்வாரப்பட்டது.

இம்முறை கிட்டு பூங்காவிற்கு சென்று நிறைய நேரம் உலாவித்திரிந்தேன். சிதைந்து போயிருந்தது பூங்கா…


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com

By

Read More

பனங்காய்ப் பணியாரமே..!

பனங்காய்ப் பணியாரம் தெரியுமோ? பனம்பழச்சாறெடுத்து மாவொடு பிசைந்து எண்ணையில் பொரிச்சு.. (அப்பிடிச்செய்யிறதெண்டு தான் நினைக்கிறன். )
நல்ல சுவையாக இருக்கும். யாழ்ப்பாணத்தில பனம்பழ கால சீசனில எல்லா வீடுகளிலும் இந்தப் பணியாரம் செய்வினம்.

கிட்டடியில கேட்ட ஒரு பாட்டில காதலியை பனங்காய்ப்பணியாரத்திற்கு ஒப்பிட்டிருந்தவை. பனங்காய்ப் பணியாரமே பச்சை கொழும்பு வெத்திலையே என்று!

இந்தியாவில இப்பிடியொரு பணியாரம் இருக்கா என்று தெரியவில்லை. இருந்தால் சொல்லவும்! அது இப்பிடித்தான் இருக்கும். அய்.. பனங்காய்ப் பணியாரமே..


Image hosted by Photobucket.com

பட உதவி – திரு கிளிநொச்சியிலிருந்து

By

Read More

ஊர்ப்பூக்கள்

Image hosted by Photobucket.com
செவ்வெரத்தம் பூ

Image hosted by Photobucket.com
நித்தியகல்யாணியும் மொட்டும்

By

Read More

யாழ்ப்பாணம் வரவேற்கிறது!

Image hosted by Photobucket.com
யாழ்ப்பாணத்தினுள் நுழையும் வாயில்

Image hosted by Photobucket.com
யாழ் நூல் நிலையத்தின் அண்மித்தாக

By

Read More

× Close