என்னாலை எழுத வந்தவராம்

நானெல்லாம் இப்ப ஒண்டும் எழுதுறதில்லை. வசந்தனும் சரியா குறைச்சிட்டார். அதுக்கிப்ப என்ன எண்டும் ஏதோ பெரிசா உவை ரண்டு பேரும் முந்தி வலைப்பதிவில கோலோச்சினவை மாதிரி கதைக்கினம் எண்டு ஆரும் கேப்பினம். ஆனாலும் பாருங்கோ கோலோச்சாட்டிலும் நாங்கள் ரண்டு பேரும் நிறைய வாலாட்டினாங்கள்.

அதுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் நிப்பாட்டிப்போட்டாலும் வலைக்கு என்ன செய்தம் எண்ட கேள்வி நெடுநாளாய் எனக்குள்ளை இருந்தது. அது இண்டையோடை தொலையுது. இண்டைக்கு சும்மா அலசேக்கை பகீ எண்டவரின்ரை ஊரோடி எண்ட ஒரு பதிவைப் பார்த்தன். அவர் தன்ர முதலாவது பதிவில இப்பிடீ சொல்லுறார்.

ஊரோடி – பெரிதாக ஒன்றும் யோசிக்காமலேயே இருக்கிற நேரத்தில ஏதாவது அலட்டுவம் என்டு தான் பதியத் தொடங்கியிருக்கிறன். சயந்தன்ர பதிவுகள் தான் இதை தொடங்கத் தூண்டினது. இருந்தாலும் வழமையா எந்த விசயம் எண்டாலும் இழுத்தடிக்கிறனான் இதைமட்டும் ஏனோ படுவேகமா செய்திட்டன்.

பிறகென்ன.. நான் ஒரு புது ஆளை கொண்டு வந்திருக்கிறன் எண்ட நிம்மதியோடை போய்ச்சேரலாம் தானே..

பகீயின் ஊரோடி அகிலனின் தளம் மற்றும் இன்னொருவர் -மச்சாளின் கையைப்படித்தவர்- பெயர் நினைவுக்கு வருகுதில்லை.. இவையளின்ர பதிவுகளை படிக்கேக்கை சந்தோசமா இருக்கு. வாங்கோடா பொடியங்களா.. சும்மா பிளந்து கட்டுங்கோ..

வசந்தன் உமக்கு பின்னாலை மண்வாசனையோடை எழுத ஆக்கள் இல்லையெண்ட கவலை இனி உமக்கு தேவையில்லைத்தானே..

By

Read More

என் முதல்ப் பதிவு

நினைவுகள் மீட்டல் எவ்வளவு சுகமானது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் செப்ரம்பர் 2004 செப்ரெம்பர் 22 ஒஸ்ரேலியாவிலிருந்து வலையுலகில் எனது முதல் பதிவை இட்டேன். யாழ் நெற் தந்த வசதியூடாக உனது முதலாவது வலைப்பதிவு வலையேறியது.

ம்.. காலம் தான் எவ்வளவு வேகமாயோடுகிறது..

அந்தப் பழைய பதிவுகளை இப்போதும் படித்துப் பார்க்கின்றேன். ஒஸ்ரேலியாவில் ஆரம்பத்திலிருந்த தனிமை தான் உடனடி நினைவில் வருகிறது.

இதுதான் எனது முதற்பதிவு . பாரி மூக்கன் ஸ்ரேயா மதி சந்திரவதனா ஆகியோர் பின்னூட்டமிட்டிருந்தனர்.. அப்போதைய பதிவுகளை படித்து பார்த்தால்.. தினமும் ஒரு பதிவு என்ற கணக்கில் இருக்கிறது.. ம்.. அது ஒரு காலம்.. இனி அந்த பழைய முதல் பதிவு

வணக்கம்
வலைப்பூக்களை பற்றி சாடை மாடையாக நான் கேள்விப்படத்தொடங்கியது கடந்த வருட இறுதியில்த்தான். அப்போது கொழும்பில் இருந்தேன். என்னுடைய நண்பன் மயூரன்தான் அறிமுகப்படுத்தினான். ஆயினும் சரியான தெளிவு அப்போது கிடைக்கப்பெறவில்லை அல்லது நான் பெரிய அளவில் ஆர்வமுற்றிருக்கவில்லை.

இத்தனைக்கும் இணைய வலைப்பக்கங்கள் பலவற்றினுடும் எனக்கு பரிச்சயம் இருந்தது. 2000 ஆயிரம் ஆண்டிலிருந்து விதம் விதமாக இணையப் பக்கங்கள் தயாரிப்பதும் அவற்றை இலவசமாக பதிவேற்றுவதும் தான் என்னுடைய பொழுது போக்கு.

உங்களில் சிலர் நன்கு அறிந்திருப்பீர்கள் என நான் நம்புகின்ற எழுநா என்னும் இணையத்தளத்தின் வடிவமைப்பாளராகவும் இருந்திருக்கின்றேன் என்றாலும் கூட வலைப்பூ ஒன்றினை நான் ஆரம்பிக்க 1 வருடம் எடுத்தது என்பது எனது ஆர்வமின்மையாகத்தான் இருக்கும். (எழுநாவின் ஆயுட்காலம் வெறும் ஆறு மாதங்களுக்கு உட்பட்டது தான். ஆயினும் அக்காலம் எனக்கு சுவாரசியமான காலம். பல நண்பர்களை பெற்றுத்தந்த காலம். அது பற்றி பின்னர் கதைக்கலாம் என்றிருக்கிறேன்.)

அதன் பின்னர் அவுஸ்ரேலியா வந்த பின்னர் தான் வலைப்பூக்களை அதிகம் படிக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னரே ஆர்வமும் வந்தது. ஆயினும் ஆரம்பத்தில் எனது வலைப்பூவினை யார் படிப்பார்கள் என்ற சந்தேகமும் அதனை எப்படி மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள் என்ற கேள்வியும் இருந்தது.

எனினும் கடந்த சில வாரங்களாக காசியின் தமிழ்மணம் பற்றியே எங்கும் பேச்சு. அதற்குப் பின்னர் என் சந்தேகம் போச்சு..

இந்த வலைப்பூ பெயர் கூட எப்போதோ இருக்கட்டும் என்பதற்காக பதிந்து வைத்தது தான். நுழைவுச்சொல் கடவுச்சொல் எல்லாம் மறந்து விட்ட நிலையில் நான் அதிகம் பாவிக்கின்ற ஒரு நுழைவுச்சொல்லையும் கடவுச்சொல்லையும் உள்ளிட்டுப் பார்த்தேன். அட அதிஷ்டம் அப்போது என் பக்கம் இருந்தது. இப்பொழுது கூட இந்த வலைப்பூவின் தலைச்சொல்லை தமிழில் மாற்றவும் இதன் பின்னணி நிறங்களை மாற்றவும் விரும்புகின்றேன். எவராவது எனக்கு உதவுவதாயிருந்தால் அவர்களுக்கு இப்போதே எனது நன்றிகள். படி நிலை படிகளாக சொல்லித்தாருங்கள். முயற்சித்து கண்டு பிடிக்க பஞ்சியாக இருக்கிறது.

வேறென்ன.. வலைப்பூ வட்டத்தில் அதிகம் எனது தந்தை நாடாம் இந்திய நண்பர்களின் வருகையை அவதானிக்கிறேன். அவர்களும் சற்றே வளர்ந்த இந்த முரட்டு சகோதரனாம் ஈழத்தமிழனின் வாசல் வரவேண்டும்.

இங்கே இதனைத்தான் எழுதப்போகின்றேன் என்ற எந்த வரையறையையும் நான் ஏற்படுத்திக் கொள்ள போவதில்லை. அது என்னோடிணைந்த நகைச்சுவையாகவும் இருக்கலாம் அல்லது அரசியலாக இருக்கலாம்.

அப்புறம் எனக்கு வலைப்பூவை அறிமுகப்படுத்திய மயூரனுக்கு நன்றி. அவன் ஆரம்பித்த ம்.. என்னும் வலைப்பூவினை இடைநடுவில் கைவிட்டு விட்டானா என்று தெரியவில்லை என்பது கூடுதல் தகவல்.

By

Read More

ஈழம் குறித்து ஜெயலலிதா..

சற்று முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் செல்வி ஜெயலலிதாவின் செவ்வியில் ரவி பெர்ணாட் வைகோ திருமா ஆகியோரின் தமிழ் உணர்வுகள் குறித்து குறிப்பிட்டு ஈழப்பிரச்சனையில் ஜெயலலிதாவின் நிலை குறித்துக் கேட்டார். அதற்கான ஜெயாவின் முழுமையான பதில் கீழே..

ஈழம் என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஈழம் என்பது ஒரு concept, ஒரு லட்சியம், ஒரு கனவு, ஒரு குறிக்கோள். ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு கனவு காண்கிறார்கள். அவர்களைத்தான் நீங்கள் ஈழத்தமிழர்கள் என்று குறிப்பிடுகிறீர்கள். அதையே நான் இலங்கைத் தமிழர்கள் என்று சொல்கின்றேன். அவ்வளவுதான் வேறுபாடு. ஆனால் நான் இலங்கைத்தமிழர்கள் என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஈழத்தை அடைய வேண்டும் என்று ஒரு தொகுதியில் இருக்கின்றவர்களைத்தான் இன்று ஈழத்தமிழர்கள் என்று சொல்கின்றோம். ஆனால் வேறு பகுதிகளிலும் தோட்டத்தொழிலாளர்களாக பணி புரியும் மலையக பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்களும் இருக்கின்றார்கள். அவர்களையும் இணைத்து தான் நான் சொல்கின்றேன். ஆகவே நான் ஒட்டு மொத்தமாக இலங்கைத்தமிழர்கள் என்று சொல்கின்றேன். என்னுடைய கொள்கையில் ஆரம்பத்திலிருந்து இன்று வரை எந்த மாறுபாடும் இல்லை. இலங்கைத்தமிழர்கள் மதிப்போடும் மரியாதையோடும் பாதுகாப்போடும் அங்கே வாழ்க்கையை நடாத்த வேண்டும். அதற்கான ஒரு உகந்த சூழ்நிலையை இலங்கை அரசு ஏற்படுத்த வேண்டும். இலங்கைத்தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. இது தான் என்னுடைய கொள்கை.

By

Read More

தஞ்சாவூரு மண்ணெடுத்து…

இதில பாவிக்கப்பட்டிருக்கிறது மண்ணா அல்லது என்னது என்று சரியா தெரியெல்லை. எண்டாலும் மிக அற்புதமான motion graphics வகையைச் சார்ந்த இந்தத் துண்டு வீடியோவை நேரமிருந்தா நீங்களும் பாருங்க.. கொஞ்சம் நீளமானது..



By

Read More

ஜோதிடசிகாமணி ஜோதிகா சாமி

நீங்கள் திரிஷா ஜாதகக் காரரா..? அல்லது நயன்தரா ஜாதக காரரா..? உங்களுக்குரிய இந்த அண்டிற்கான பலாபலன்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா..? சரி.. கீழே வீடியோவில் ஜோதிட சிகாமணி ஜோதிகா சாமி காத்திருக்கிறார். கெட்டு தெரிந்து கொள்ளுங்கோ..

இதுவும் கனடாவில் ஒளிபரப்பானதென்று தான் நினைக்கிறேன். அவர்களுக்கு நன்றி. இதுவும் டிசேக்காகத் தான்! டிசே.. நீங்கள் என்ன ராசி?

By

Read More

× Close