தலைப்பெதுவும் கிடையாது

பள்ளியின் பின்புறமாக எல்லோருடைய சைக்கிள்களும் நிறுத்தப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் எதேச்சையாக இரண்டொரு தடவை அவளதும் அவனதும் சைக்கிள்கள் அருகருகே நிறுத்தப்பட்டிருந்தன. அப்பொழுது தான் அவள் அறிமுகமானாள்.

வித்தியாசமாக தெரிந்தாள்.

இப்பொழுதெல்லாம் வேண்டுமென்றே அவனது சைக்கிள் அவளினது சைக்கிளின் அருகே நிறுத்தப்படுகிறது.

இயல்பாகவே விழிகள் அவளை தேடத்தொடங்குகின்றன.

தினமும் பார்த்து விடத் துடித்தான்.

மற்றவர்களிடத்தினின்று தன்னை வித்தியாசப்படுத்த, தனித்துவமாய் திகழ திட்டங்கள் தீட்ட ஆரம்பித்தான்.

ரியூசனிலும் அவள் இணைந்து கொண்டாள்.

பின்தொடர்தல்கள் தொடர்கின்றன.

மனசுக்குள் பூப்பூக்கத்தொடங்குகின்றது.

அவள் எப்போதும் அவனையே பார்ப்பதாய் எண்ணங்கள்.

நண்பர்கள் அப்படித்தான் சொன்னார்கள்.

ஒரு சில வேளைகளில் அதுவே உண்மையாயும் இருந்தது.

காதலிக்க தொடங்குகின்றான்.

எதிர்காலம், தொழில், திருமணம் என்பன குறித்த எந்த சிந்தனையும் இல்லாமல், என்னையும் அவள் காதலித்தாக வேண்டும் என்ற ஒரே இலக்கில்

காதலிக்க தொடங்குகின்றான்.

காய்கள் நகர்கின்றன.

அடுத்த நாளினை அவளோடு எப்படி ஆரம்பிப்பது என்ற திட்டமிடலிலேயே இரவுகள் கழிந்தன.

‘இப்படிப் பேசினால், அவள் அப்படிப் பதில் சொல்லுவாள், அதற்கு நான் இப்படிப் பதில் சொன்னால், அவள் சிரிப்பாள்”

அவளின் கவனத்தை பெறும் ஒரே நோக்கில்

நடந்தான்.

இருந்தான்.

படித்தான்.

பாடினான்.

சிரித்தான்.

நண்பர்கள் அவர்களை ஜோடி கட்டி பேசத்தொடங்கினார்கள்.

பொய்யாய் கோபப்பட்டான்.

உள்ளுக்குள் மகிழ்ந்தான்.

மிகுந்த திட்டமிடலின் பின் ஒர வார காலம் வகுப்புக்களுக்கு மட்டம் போட்டான் அவன்.

‘உங்கடை Commerce கொப்பியை தாங்களேன். நோற்ஸ் எழுதிட்டு தாறன்”

முறைத்தாள்.

‘அதுக்கு வேறை யாரையும் பாருங்க”

அவமானப்பட்டது போல இருந்தது.

கோபம் வந்தது.

அவன் கேட்டால் அவள் தந்தே தீருவாள் என்ற கர்வம் உடைந்து போனது.

இருப்பினும், முயற்சி திருவினை ஆக்கியே தீர்ந்தது.

அவன் எது கேட்டானோ அந்த நோட்ஸ் கொப்பி அது அவன் கை வந்தது.

நான்கோ ஐந்தோ நாள் வைத்திருந்தான். அவ்வப்போது எடுத்துப் பார்த்தான்.

நெஞ்சில் அணைத்தான்.

அட, முத்தம் கூட இட்டானாம் அந்த வெற்றுக் காகித கொப்பிக்கு.

அந்த நாட்களில் அவள் கையெழுத்துப் போலவே எழுதவும் பழகினான்.

அடி முன் ஜென்மம் நினைவில்லையா
உன் நெஞ்சுக்குள் இடமில்லையா
அடி பெண்ணே நான் அழகில்லையா (!!!!அட்ரா.. அட்ரா.. !!!)
உன் கனவுக்குள் வரவில்லையா..

அவளது கொப்பியில் அவளது கையெழுத்தில் எழுதினான்.

அசாத்திய துணிச்சல்.

அவள் மீதான ஈர்ப்பை நடவடிக்கைகளால் உணர்த்த தொடங்கினான்.

ஒரு முறை அற்லஸ் (உலக வரைபடம்) கேட்டாள்.

அதை அட்ரஸ் என்று அவசரப்பட்டு விளங்கிக் கொடுக்க,

அதில் அவமானப்பட்டுப் போனான்.

ஏற்கனவே வறுமைக்கோட்டிற்கு கீழிருந்த ஆங்கில அறிவு பற்றி என்ன நினைத்திருப்பாள்?

அவனை மலேரியா தாக்கியது. ஒரு வார காலம். அதே காலத்தில் அது அவளையும் தாக்கியது.

அவனுக்கு காய்ச்சல் வந்தால் அது அவளுக்கும் வருகிறது. கணக்குப் போட்டான்.

சந்தோசப் பட்டான்.

குதூகலம்

கிளுகிளுப்பு.

அவளை யாரோ படம் எடுக்க அவள் அந்த யாரோவோடு சண்டை பிடிக்க

சந்தோசப் பட்டான்.

குதூகலம்

கிளுகிளுப்பு.

அவளுக்கு யாரோ காதல் கடிதம் கொடுக்க அவள் அதை கிழித்தெறிய

சந்தோசப் பட்டான்.

குதூகலம்

கிளுகிளுப்பு.

அவளோடு படித்த ஒருவன் அவளிடம் கொப்பி கேட்க அவள் கொடுக்க

கவலைப் பட்டான்.

…………………………….

…………………………….
October 10, 2004

By

Read More

பழைய இரும்புக்கு பழம் வாங்கியிருக்கிறியளா?

கானா பிரபா மாம்பழங்கள் பற்றி எழுதிய போது நினைத்திருந்த பதிவு இது.
பின்னர் மலைநாடான் பாலைப் பழங்கள் (பால்ப் பழம் என்றால் யார் கேட்கப் போறாங்க..?) பற்றியெழுத அவரின் வழி சிநேகிதியும் அம்பிரலாங்காய் குறித்து எழுதியாயிற்று.

இது என் முறை. எல்லாருக்கும் ஒவ்வொரு பழங்கள் பிடித்தது போலவே எனக்கு நிறையப் பிடித்தது ஐஸ்பழங்கள். (தமிழ்நாட்டில் இதனை குச்சி ஐஸ் என்பர்). 50 சதம் விற்றுக் கொண்டிருந்த போது அறிமுகமானது இந்தப் பழம். மத்தியானத்துக்கும் பின்னேரத்துக்கும் இடைப்பட்ட நேரங்களில் சைக்கிளில் மணியடித்துக் ஐஸ்பழக் காரர் வர ஆரேனும் 50 சதம் தரமாட்டினமோ எண்டு மனம் அலைபாயும். அந்த நேரம் கோன் கிறீம் 2 ரூபா வித்தது. எண்டாலும் அது எங்கையாவது கோயிலுக்குப் போனாத்தான் வாங்கித் தருவினம். மற்றும் படி வீடுகளில இருக்கிற நேரம் ஐஸ்பழம் தான்.

ஞாபகப்படுத்திப் பாத்தால் ஐஸ்பழம் சிவப்பு நிறத்திலையும், மஞ்சளும் ஒரேஞ்சும் கலந்த ஒரு நிறத்திலையும் தான் அதிகம் இருந்தது போல. நீல நிறத்திலையோ பச்சை நிறத்திலையோ அதை நான் பாத்ததில்லை.

ஐஸ் பழக்காரர் ஒரே பெட்டியிலயே ஐஸ்பழங்களையும், கிறீமையும் வைச்சிருந்து எடுப்பார். சில வேளை பெட்டியை ரண்டாப் பிரிச்சு வைச்சிருப்பார் எண்டு நினைக்கிறன். முன்னாலை கோன் பிஸ்கற்றை அடுக்கி வைத்திருப்பார். சில வசதியான ஐஸ்பழக்காரர் சைக்கிள் டைனமோவில பாட்டும் போட்டுக் கொண்டு வாறவை. ஆனா மணிச் சத்தம் தான் பிரசித்தம்.

எங்கடை அம்மம்மா கச்சான் விக்கிற படியாலை அதுக்கான பைகளை ஒட்டிக் குடுத்தால் 25 சதம் அல்லது 50 சதம் தருவா. அல்லது கச்சான் விற்கும் போதும் நேரை கோவிலுக்குப் போய் அம்மம்மாவை ஒரு அப்பாவிப் பார்வை பாத்துக் கொண்டு நிண்டா ஐஸ்பழம் வாங்கக் காசு தருவா.

இதெல்லாத்தையும் விட அந்த நேரம் ஒரு நடைமுறையிருந்தது. ஐஸ்பழக் காரரிடம் ஏதாவது பழைய இரும்பைக் குடுத்தால் அவர் ஐஸ்பழம் தர மாட்டார். ஆனா ஒரு தட்டையான பிஸ்கற்றில கொஞ்சக் கிறீம் போட்டுத் தருவார். இதனாலை எங்கடை வீட்டில இருந்த பழைய நெளிஞ்ச புட்டுப்பானை, வாளிக் கம்பி இதெல்லாம் அந்தரத்தக்கு எனக்குக் கை கொடுத்திருக்குது.

ஒரு முறை.. எங்கடை வீட்டுச் சாமியறைக்குள்ளை சாமிக்குத் தண்ணி வைக்கிறதுக்கெண்டு (ஒரு கமண்டலம் இருந்தது. கமண்டலம் அங்கை அப்ப அரிதான பொருளாம். (கமண்டலம் தானா சரியான பெயர் எனத் தெரியாது. அகத்தியர் வைச்சிருந்தாரே அது ) அந்தக் கமண்டலம் ஒரு நாள் வீட்டில இருந்து காணாமல் போனது. கடைசியில சரியான விசாரனைகளுக்குப் பிறகு அதை நான் தான் ஐஸ்பழக் காரருக்கு குடுத்தனான் எண்டதை ஒப்புக் கொள்ள வேண்டியதாப் போச்சு. எண்டாலும் வழமையா வெறும் பிஸ்கற்றில கிறீம் பூசித் தாற ஐஸ்பழக் காரர் கமண்டலத்துக்கு ஒரு முழு ஐஸ்பழமே தந்தார் எண்டால் பாத்துக் கொள்ளுங்கோவன்.

ஐஸ்பழங்களிலயும் நிறையச் சுவையள் இருக்கு. சிலது முடியும் வரை நாவுக்குச் சுவை தரும். சிலது ஒரே உறிஞ்சலில, நிறமும் போய், சுவையும் போய் வெறும் ஐஸ்கட்டியா குச்சியில ஒட்டிக் கிடக்கும்.

காலம் போகப் போக ஐஸ்பழ வாகனங்கள் ஊருக்குள்ளை வரத் தொடங்கின. சினிமாப் பாட்டுக்களைப் போட்டு விட்டு குழந்தைகள் இருப்பதாய் அவர்கள் அவதானிக்கிற வீடுகளில் நெடுநேரமாய் நிறுத்தி வைத்திருப்பார்கள். அவர்களிடம் அறிமுகமானது தான் ஐஸ் சொக்.
வெளியே சொக்லெற் பூசப்பட்ட, உள்ளே பாற் சுவையில் (ஐஸ் பழத்தைப் போலல்லாது கடைசி வரை நிண்டு நிலைக்கும் மாறாச் சுவை) நிறைய ருசியாக இருக்கும். அதுவும் கோன் கிறீமும் சமமான விலையில் விற்றன.

இரண்டு மூன்று பேர்களுடன் ஐஸ் பழம் வாங்கி அவர்கள் குடித்து முடிக்கும் வரை காத்திருந்து விட்டு அதன் பிறகு நான் குடிக்கத் தொடங்குவதில் ஒரு ஆனந்தம்.

ஒரு முறை கோவில் திருவிழா ஒண்டில் எனக்கு கோன் ஐஸ் கிரீம் ஒண்டு வாங்கித் தந்தினம். தனியக் கிறீமை மட்டும் சாப்பிட்டு விட்டன். கோன் பிஸ்கற் மட்டும் அப்பிடியே முழுசாக் கிடந்தது. மனசுக்குள்ளை ஒரு யோசினை. யாருமில்லாமல் நான் மட்டும் ஐஸ்பழ வாகனத்தை நோக்கிப் போனன். அங்கை ஆக்கள் எல்லாம் வாங்கி முடியட்டும் எண்டு காத்திருந்தன். ஒரு மாதிரி ஒரு இடை வெளி கிடைச்சுது. ஒரு தயக்கமாவும் கிடக்குது. பரவாயில்லை எண்டு நேரை போய் அண்ணாந்து வாகனத்துக்குள்ளை இருந்தவரைப் பாத்து வெறும் பிஸ்கற் கோனை நீட்டிக் கேட்டன்

இதுக்கை கொஞ்சம் கிறீம் போடுவியளே..?

அவருக்கு ஒரே சிரிப்பு. இங்கை என்ன சபையோ வைக்கிறம்.. ( சாப்பாட்டுப் பந்தி ) கறி முடிஞ்சால் போடுறதுக்கு..

நான் கொஞ்ச நேரம் அப்பிடியே நிண்டன். பிறகு வந்திட்டன். என்ர கஸ்ர காலம் பரன் எண்டொரு அண்ணை அதை கண்டு வீட்டை சொல்ல.. எல்லாற்றை மானத்தையும் நான் காத்தில பறக்க விடுறதா … பிறகென்ன வழமையான பூசை தான்.
கிராமத்தின் பாடசாலையை விட்டு நகரப் பாடசாலைக்கு பெயர்ந்த காலங்களில்த்தான் எனக்கு கூல்பார்களும் கப்பில் போட்டுச் சாப்பிடும் ஐஸ்கிறீம்களும் அறிமுகமாயின. அப்போது கூட நோர்மல் ஸ்பெசல் என்ற இரண்டு வகைதான் பாவனையிலிருந்தது. சொன்னா நம்ப மாட்டியள்.. 6 ம் ஆண்டு நகரப் பாடசாலைக்கு வந்த பிறகு முதலாம் தவணைச் சோதினையில 7ம் பிள்ளையா வந்த எனக்கு அடுத்த முறை 3ம் பிள்ளைக்குள்ளை வந்தால் ஒரு ஸ்பெசல் ஐஸ்கிரீம் வாங்கித் தரப்படும் என வாக்குறுதி தரப்பட்டது. என்னால் நிறைவேற்ற முடியேல்லை எண்டாலும் ஐஸ்கிரீம் கிடைச்சது.

அதுவே அடுத்த ஐந்தாறு வருடங்களில் 20ம் 25 ம் பிள்ளையாக வந்த போது எனக்கு எதுவும் வாங்கித் தருவதாய் எவரும் சொல்ல வில்லை. அந்த நேரங்களில ஆசைப் பட்டதை வாங்கித் தரவும் முடியாது தானே.

By

Read More

பனி விழும் இரவு

நேற்றைய இரவில் இருந்து இங்கு பனிப் பொழிந்து கொண்டிருக்கிறது. அதிகாலை 6 மணிக்கு புகையிரத நிலையத்திற்கு செல்ல கால்கள் புதையப் புதைய நடக்க வேண்டியிருந்தது. முதல் முறை.. அதனால் ஒரு வித கிளர்ச்சி.. நாளாக நாளாக அலுப்பினையும் எரிச்சலையும் தருவது உறுதி. படங்களின் மேல் கிளிக்குக..

wweeeeee

wweeeeee

By

Read More

படங்களில் நோண்டுதல்

சில்லென்ற தண்ணீரும் அழகிய மாலையும் அதோ தூரத்தில் பனி மலையும் இன்னும் ஒரு மொட்டை மரமும் வீடும். படங்களில் மேல் கிளிக்குக.

wweeeeee

wweeeeee

By

Read More

உலக வலைப் பதிவுகளில் முதல் முறையாக

கொஞ்ச நாளுக்கு முன்னாலை வசந்தன் தன்ர வலைப்பதிவின்ர ரண்டாம் ஆண்டு நிறைவுக்காக ஏதாவது செய்ய இருக்கிறதாகவும் என்ன செய்யலாம் எண்டும் கேட்டார். வழமையா குரல் பதிவுகள் தான் அவரின்ர விசேசமான பதிவுகள். அதனாலை ஒரு குரல் பதிவைப் போடும் எண்டு சொன்னன். சரியெண்டு அவரும் அதைப்பற்றிக் கதைச்சக் கொண்டிருக்கும் போது இதை ஒரு கலந்துரையாடல் குரல்ப்பதிவாப் போடலாமே எண்டு நான் தான் அவருக்குச் சொன்னன்.

ஏற்கனவே வானொலிக்காக சிலரைச் செவ்வி கண்டு அதனை நேரடியாக கணணியில் ஒலிப்பதிவு செய்த அனுபவம் இருந்தபடியாலை இது பெரிய அளவில் கஸ்ரமாக இருக்கவில்லை.

அதுவும் ஒரு சதமும் செலவழியாமல் இந்த கலந்துரையாடல் நடந்தது. Voip தொழில் நுட்பத்துக்கூடாக அவரை தொலைபேசியில் அழைத்து இந்தக் கலந்துரையாடலை ஒலிப்பதிந்தன். நன்றி Voipcheap.com

ஆயத்தம் ஏதுமில்லாமல் செய்த படியாலை முழு ஒலிப்பதிவையும் கால் மணி நேரமளவக்குச் சுருக்க வேண்டியிருந்ததாலை அங்கங்கே வெட்டியதும் நான் தான். இதனாலை சிலநேரம் தொடர்ச்சித் தன்மை இல்லாமல் இருக்கும். இப்ப முழுசா கேட்ட பிறகு இன்னும் சிலதை வெட்டியிருக்கலாம் போல இருக்கு. ஆனா இனி வெட்டிப் பிரியோசனம் இல்லை.

வசந்தன் சயந்தன் அவ்வப்போது சிலரால் கிளப்பப்படும். கடைசியா குழம்பியவ தமிழ்நதி அக்கா. ஆரம்பத்தில் படு தீவிரமாக குழம்பியது மட்டுமல்லாமல் மற்றோரையும் குழப்பியவர் கறுப்பியக்கா.

பதிவை வசந்தன் வெளியிட்ட பின்னர்தான் வந்த கருத்துக்களின் அடிப்படையில் இதுவரை வலையுலகில் இப்படி யாரும் செய்திருக்கவில்லையெண்டு உணர முடிந்தது. இதை ஒரு தொடக்கமாக வைத்து இதுபோலவே வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடி வலையில் ஏற்றலாம். ஏற்றுவோம்.

இந்த ஒலிப்பதிவு கேட்பதற்கு இங்கே கிளிக்கவும்
நட்பு ரீதியில் கலாய்த்துரையாடிய இந்தப் பதிவின் மூலம் யாரேனும் மனம் புண்பட்டிருந்தால் very very sorry.

By

Read More

× Close