ஞாபகிக்கையில்…

எல்லாருக்கும் வணக்கம்!.. சாரல் தொடங்கி 1 வருமாகப்போது.. டும் டும் டும்.. ஆகவே நண்பர்களே.. என்னவென்றால்.. அதாவது.. ஏதோ சொல்ல வந்தனே.. ஆ… Feb 21 திகதி வரை இது நாள் வரை.. ( எத்தனை பதிவென்று நான் எண்ணவில்லை.. ஆனால்) எழுதியவற்றில் எனக்குப் பிடித்த ஐந்து அல்லது ஆறு பதிவுகளை மீள இடப் போகின்றேன்…

படித்துப் பயன்பெறுக.. ஏற்கனவே எழுதியிருந்த கருத்துக்களில் இந்த ஒரு வருடத்தில் மாற்றங்கள் எனக்குள் இருப்பின்.. அடைப்புக் குறிக்குள்ளை சொல்லுறன்..

நடந்த காலங்களில் வலியையும் இரவுகளில் கண்ணீரையும் தந்த சில சம்பவங்கள் பின்னர் காலக் கிடங்கில் ஆழ அமிழ்ந்து போய் விடுகின்றன. மீண்டும் எப்போதாவது சமயங்களில் ஞாபகிக்கும் போது வலி தந்த அதே சம்பவங்களே சிரிப்பையும் ஒரு வித சுய ஏளனத்தையும் தருகின்றன.

அதிகாலை 6 மணிக்கு அவள் தன் வீட்டிலிருந்து புறப்படுவாள்.

அதனைத் தொடர்ந்து அவளைத் தொடர்ந்து அவனும்!

எப்பொழுதுமே சந்திப்புக்கள் எதேச்சையாக அமைய வேண்டும் என்பதற்காக அவன் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வான்.

‘என்ன அடிக்கடி காலையிலை சந்திக்கிறம்.”

அவளுக்குத் தெரியாது!

வீதியின் வளைவுகளில் மறைந்திருந்து அவள் வருகை தெரிய ஓடிப் போய் அப்போது தான் வருவதாய் அவன் உணர்த்துவது அவளுக்கு தெரியாது.

நடக்கின்ற அந்த பத்து மணித்துளிகளில் அவர்கள் அரசியல், குண்டு வெடிப்புக்கள், சினிமாக்கள் என்று பலதும் பத்தும் பேசிக் கொள்வார்கள்.

ஒரு காலை!

நடக்கின்ற வழியில் மழை தூறத் தொடங்கியது!

குடை எடுத்து விரித்தாள் அவள்.

அவன் மேல்த் தூறல்கள் விழத் தொடங்கின

லேசாய் இடித்தது! காலைக் குளிரில் மழையின் குளிர் வேறு! மின்னல் தெறித்தது. தெறிப்பில் அவள் முகம்…. (டேய் கதையைச் சொல்லடா )

‘……” பெயர் சொல்லி அழைத்தாள் அவள்.. என் பெயர் இத்தனை அழகா என்று அவன் நினைக்க முன்பாக (ஐயோ.. ஐயோ..) அவள் சொன்னாள்.

‘மனசுக்குள்ளை ஒண்டுமில்லாட்டி குடைக்குள்ளை வாங்கோ”

‘மனசுக்குள்ளை ஒண்டும் இல்லாட்டி????”

குடைக்குள் போகாமல் மனசுக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது என உணர்த்தலாமா?

அல்லது மனசுக்குள்ளை கிடக்கிறது மண்ணாங்கட்டி! கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி கொள்வோமா?

ஆயிரம் சிந்தனைகளோடு அவன்!

ஆனால் தூறலடித்த மழை அப்பவே நின்று போனது! மழையாக பொழியாமல்…

அவள் குடையை மடித்து வைத்துக் கொண்டாள்!

உடனடிக்கு நினைவுக்கு வராத மழைக்குப் பொறுப்பான கடவுள் மீது கோபம் வந்தது அவனுக்கு.

நாசமாப் போக!!!

By

Read More

தமிழக மக்கள் பற்றி பிரபாகரன்

தமிழக மக்களுடனான விடுதலைப்புலிகளின் உறவு குறித்தும் போராட்டம் தொடர்பான அவர்களது நிலைப்பாடு குறித்தும் விடுதலைப்புலிகளின் தலைவர் திரு வே. பிரபாகரன் தெரிவித்திருந்த கருத்துக்களை அவரது குரலிலேயே இங்கு கேட்கலாம்.


நன்றி விடுதலைத் தீப்பொறி, வன்னியன்

By

Read More

எம்.ஜி.ஆர் பற்றி பிரபாகரன்!

ஈழ விடுதலைப் போரின் ஆரம்ப காலங்களில் போராட்ட வளர்ச்சிக்கு அதிக அளவில் உதவி புரிந்த அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் குறித்தும் அவரின் உதவிகள் குறித்தும் விடுதலைப்புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் கூறுவதை அவரது குரலிலேயே இங்கே கேட்கலாம். இதற்கு realPlayer என்னும் மென்பொருள் அவசியமாகிறது.

நன்றி விடுதலைத் தீப்பொறி, வன்னியன்

By

Read More

நான் நாடகம் போட்ட கதை

UTS பல்கலைக்கழக தமிழ்ச்சங்க நிகழ்வு என்றாலும் கிட்டத்தட்ட சிட்னியின் அனைத்து பல்கலைக்கழக தமிழ் மாணவர்களின் பங்களிப்புடனும் நடந்த நிகழ்வு அது!

கதம்ப மாலை 2006!

தமிழர் புனர் வாழ்வுக் கழகம் தாயகத்தில் முன்னெடுக்கின்ற மருத்துவப் பணியொன்றிற்கான நிதி திரட்டலுக்காக கடந்த சனிக்கிழமை சிட்னியில் அது நடந்து முடிந்தது.

வருடாவருடம் நடைபெறும் இந் நிகழ்வில் கடந்த வருடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம் கையளித்த நிதித் தொகை 8000 ஒஸ்ரேலிய டொலர்கள். இம்முறையும் இதேயளவு தொகை கையளிக்கப்பட இருக்கிறது.

பெருமையாக இருக்கிறது!

எழுதுவதையும் பேசுவதையும் விட எழுதும், பேசும் நோக்கத்திற்காக செயலாற்றுதல் சந்தோசமாக இருக்கிறது.

18 இலிருந்து 24 வயசுக்குள் உட்பட்ட இளைஞர்களால் ஒரு நிகழ்வுக்கு 1000 பேரைக் கூட்டுவதென்பது ஆச்சரியப் பட வைக்கிறது.

எங்கெங்கோ எல்லாம் இளைஞர்கள் குழுப் பிரித்து சண்டை பிடிக்கிறார்களாம் என செய்தி வரும் போது இச் செயலாற்றுகை குறித்து பெருமை வருகிறது.

நிகழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மாணவர்களால் தயாரிக்கப்பட்டவை! அவர்களால் இயக்கப்பட்டவை! அவர்களால் சிந்திக்கப்பட்டவை!

இந்தியாவிலிருந்து எவரேனும் வருகை தராத நிகழ்வொன்றிற்கு 100 பேரை எதிர்பார்ப்பதே அதிகம் என்றிருந்த யதார்த்த நிலையில் 1000 பேர் வந்தார்கள் என்பது பரவசப் படுத்துகின்ற ஒரு நிலை தான்!

கிட்டத்தட்ட 40 நாட்கள்!

பொழுது மிக மகிழ்வாக, உற்சாகமாக சென்றது!

நிகழ்வில் ஒரு நாடகத்தினை எழுதி இயக்கும் பொறுப்பு என்னிடம்!

எழுதி முடிப்பதொன்றும் பெரிய வேலை இல்லை. ஆனால் அதனை அனைவருக்கும் பழக்கி முடிக்கின்ற வேலைதான் பெரிய பொறுப்பாக முன் நின்றது.

சரி! நாடகம் என்றால் கதை வேணுமே! முடிவாயிற்று! நாடகத்தின் முக்கிய இழை காதல் தான்!

வெளிநாடுகளில் காதலின் எல்லாப் பக்கங்கங்களையும் காட்டலாம் என முடிவு செய்தாயிற்று.. இங்கே காதல் (அல்லது அதன் பெயரில் வேறேதோ ஒன்று) ஏற்படும் போதும், முறியும் போதும் காட்டப்படுகின்ற அவசரம், சரியான புரிந்துணர்வின்மை, ஒரு முதிர்ந்த நிலையில் நின்று அதனை அணுகாமல் சிறுபிள்ளைத்தனமாய் அணுகுதல், காதல் முறிவுகளுக்கான சிரிப்பை வரவழைக்கும் காரணங்கள் இவை தான் நாடகம் முழுவதும் இழையோடின!

கூடவே வெளிநாடுகளில் வந்தும் விடுப்புக் கதைக்கும் ஒரு அம்மா! கழகங்கள் தொடங்குவதும் பின்னர் கருத்து மோதல்ப் படுவதும் பின்னர் புதுக்கழகம் தொடக்குவதுமாயிருக்கின்ற ஒரு அப்பா!

காதலர்களாக நடித்தவர்கள் உண்மையிலேயே கலக்கினார்கள்! காதலன் என்னுடைய கத்தரித்தாட்டத்து மத்தியிலே என்ற பாடலுக்கு இசையமைத்த ராஜ! காதலியாக நடித்தவர் —————(Censored)—————- அவர் நாடகத்தில் பேசுகின்ற வசனங்கள் இவை!

”ஓம்.. சொல்வாய் சொல்வாய்! நீ மட்டும் இன்னொருத்தியைக் காதலிச்சு கல்யாணம் கட்டி செற்றிலாவாய்! நான் மட்டும் மனசாலை நினைச்சவனை கல்யாணம் கட்டாவிட்டா எனக்கு வாழ்க்கையே இல்லையெண்டு விட்டு இருக்கவேணும் எண்டு நினைக்கிறியாக்கும். ஒரு பொம்பிளை முதன் முதலாய் தான் மனசாலை நினைச்சவனைத்தான் கல்யாணம் கட்ட வேணும் எண்டிருந்தால் இங்கை அரைவாசிப் பொம்பிளையள் தங்கடை புருசன்மாரை கல்யாணம் கட்டியிருக்க மாட்டினம்”

அம்மா, அப்பா இருவருமே நன்றாக செய்தார்கள்! அதிலும் அம்மாவாக நடித்த கல்யாணி பழகும் நாட்களில் எல்லாம் அநியாயத்துக்கு வெட்கப்படுவார். அப்போதெல்லாம் ‘கல்யாணம் முடிந்து 20 வருஷமாயிற்று! இன்னும் என்ன ரொமான்ஸ் வேண்டிக் கிடக்கிறது என்று சக இளைஞ இளைஞிகள் கேலி செய்வார்கள். ஆனால் மேடை ஏறியதும் அசல் அம்மாவாகி விட்டார்.

நாடகம் நகைச்சுவைதான்! ஆனால் பார்த்திருந்த பல நிஜ அப்பா அம்மாக்கள் சில உண்மைகளை விளங்கி கொண்டிருப்பார்கள். காதலன் காதலியிடம் இன்று சினிமா போகலாமா என கேட்க அவள் தன் அப்பாக்கு போன் பண்ணி இப்படித்தான் சொல்வாள்!

”அப்பா இண்டைக்கு UNI ல ஒரு assignment இருக்கு. இண்டைக்கு தான் due date! அதனாலை வர கொஞ்சம் லேற் ஆகும்.. ”

ஆரம்பத்தில் இது மேடையேறும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அப்படி ஏறினாலும் ஊரே கைகொட்டி சிரிக்கும் என்று தான் நினைத்திருந்தேன். ஏனெனில் அவ்வளவு சொதப்பல்கள் நிறைந்திருந்தது. அதிலும் எந்த உலகம் போனாலும் திருந்தாத தமிழனின் நேரந்தவறுதல் எரிச்சலையும் சினத்தையும் மூட்டியது என்னவோ உண்மைதான்.

இருப்பினும் இந்நிகழ்வில் திரட்டப்பட்ட பணம் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் ஊடாக தாயகத்தில் ஐந்து பேருக்கு இதய மாற்றுச் சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தப் படப் போகின்றது என்பதில் மகிழ்ச்சி தான்.

இந்நிகழ்வின் தயார்ப்படுத்தலின் போது பதிவு செய்யப்பட்ட ஒளிப்பட துண்டுகள், ஒலிப்பதிவுகள், படங்கள், தவிர இந்நிகழ்வில் நமது நாடகத்திற்காகவும் இன்னும் ஒரு நடன நிகழ்ச்சிக்காகவும் நான் செய்திருந்த வீடியோ முன்னோட்டம் எல்லாவற்றினையும் விரைவில் பதிவில் இடுகிறேன்.

By

Read More

வந்தேன் வருவேன்

எழுதாமல் விட்டு மூண்டுமாசம் ஆகவில்லைத்தான் எண்டாலும், மெல்பேணில இருந்து வசந்தன் ‘எழுதும், எழுதும் இல்லாட்டி தூக்கிப் போடுவாங்கள்’ எண்டு பயப்பிடுத்திக் கொண்டிருந்தார். சரி.. நானும் தான் எழுதி நாளாச்சு எண்டதாலை இந்தப் பதிவு! எழுதிக் கொண்டு போகேக்கையே விளங்கிட்டுது. உது பெரிசா நீளும் எண்டு. அதுதான் தொடராக்கிப் போட்டன். ஏற்கனவே பல தொடர்கள் தொடங்கி இடையில நிப்பாட்டியிருந்தாலும் விக்கிரமாதித்தன் மாதிரி திரும்பவும் தொடங்கியிருக்கிறன். பாப்பம் எதுவரைக்கும் போகுது எண்டு!

முக்கிய குறிப்பு:- இக் கதையில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் எல்லாம் கற்பனையே!!! ஹி ஹி ஹி

‘வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்’ எண்டதை கொஞ்சம் வளைச்சு எழுத நல்ல வடிவா இருந்தது. ‘சுப்பர் மச்சான் அந்த மாதிரி இருக்குது’ எண்டான் வசந்தன். வாயில அவனுக்கு இங்கிலிஷ்தான் ஈஸியா வருமெண்டாலும் சங்கம் தமிழ்ச்சங்கமாம், ஆனாத் தலைவர் கதைக்கிறது இங்கிலிஷாம் எண்டு ஆரும் சொல்லுவினம் எண்டதுக்காக கஸ்ரப்பட்டு தமிழில கதைச்சுக் கொண்டிருந்தான் அவன்.

‘டேய்.. உந்த எழுத்துக்களுக்குப் பின்னாலை ஏதாவது வாள், கேடயம் எண்டு ஏதாவதைப் போட்டால் இன்னும் நல்லாயிருக்குமடா..’ எண்டு பக்கத்தில இருந்த மதன் சொன்னான். நாளைக்கே அந்த டிசைனை ஆரும் நல்லாயிருக்கு எண்டு சொல்லேக்கை தன்ரை பேரும் அதில இருக்க வேணும் எண்ட விருப்பம் அவனுக்கு.

‘ச்சீ.. வாளை விட துவக்குப் படம் போட்டால் இன்னும் நல்லாயிருக்கும்’ எண்டவன்ரை பேர் சரியாத் தெரியேல்லை. ஆனா அதைப்பற்றி ஒருத்தரும் கணக்கெடுக்காததை வைச்சுப்பாத்தால் ஒருத்தருக்கும் பிரச்சனைக்குள்ளை மாட்டுப்பட விருப்பம் இல்லையெண்டு விளங்கிச்சுது.

* * *
‘டேய், ரிக்கெற் விக்கிறதுக்கு பெட்டையளையும் கூட்டிக்கொண்டு போ.. அப்பத்தான் சனம் வாங்கும் எண்டு சொன்னதை நினைக்க வசந்தனுக்கு வெக்கமாயிருந்தது. ‘இதென்ன ரண்டு பேரும் சங்கத்தில இருக்கினம். பெடியனும் போகத்தான் வேணும். பெட்டையளும் போகத்தான் வேணும் எண்டு அவனாலை தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்ள முடியேல்லை. போன கிழமை முழுக்க பெடியள் தான் ரிக்கெற் வித்தவங்கள். ஆனா ஒரு சனமும் ரிக்கெற் வாங்கிற மாதிரி தெரியேல்லை. அதுக்குப் பிறகு தான் வசந்தன் பெட்டையளையும் ரிக்கெற் விக்க போகச் சொன்னவன். ஆனா அவனோடை கதைச்ச அவன்ரை நண்பன் உதெல்லாம் உலகமயமாக்கலில சாதாரணம் எண்டு ஈஸியாச் சொல்லிப் போட்டான். எண்டாலும் பெட்டையள் ரிக்கெற் விக்கப் போன பிறகு சனமும் வாங்கத் தொடங்கிட்டுது எண்டதை இந்த ஒரு கிழமையில அவன் விளங்கிக் கொண்டான்.
* * *
‘ஓய், நாடகம் போடாமல் ஒரு புரோக்கிராம் எப்பிடிச் செய்யிறது’ மாலதி எப்பவுமே காட்டுக் கத்தல் தான் கத்துவாள். விசரன், கழுதை, எருமைமாடு எண்டதுகளோடை அரைகுறையில முடியிற சில இங்கிலிஷ் சொல்லுகளும் அவளின்ரை வாயில வரும். அநியாயத்துக்கு நாணிக் கோணி பெடியங்களோடை கதைக்க வெக்கப்படுற விசயமெல்லாம் அவளுக்கு தெரியாது. ‘போங்கோடா லூசுப்பெடியன்களா, நீங்கள் என்னை மாதிரி ஆக்களோடை சிற்றி சுத்த மட்டும் தான் விரும்புவியள். கலியாணம் எண்டால் ஓடிப் போய் ஊரில தான் பொம்பிளை எடுப்பியள். உங்களை மாதிரி நாங்களும் ஜில்மால் வேலையள் செய்திருப்பம் எண்டு பயம் உங்களுக்கு! பாவம் ஊரில இருக்கிற பெட்டையள்’ எண்டு கத்திக்கொண்டிருந்த மாலதியை ‘எடியே.. அண்டைக்கு நீ சாறி கட்டிக்கொண்டு க்ளப்புக்கு போக உன்னை உள்ளை விடேல்லையாம். பவுண்சர் தூக்கிக்கொண்டு வந்து வெளியில போட்டு விட்டானாம் ..உண்மையே’ எண்டு சீண்டினான் ஒருவன்.

‘உஷ்.. பிள்ளையள்.. இப்ப ட்ராமா பற்றிக் கதைப்பம்’ எண்டு வாணி இடையில புகுந்தாள்.

தொடரும்!

By

Read More

× Close