Skip to content
Sayanthan
Sayanthan
  • எழுத்து
    • சிறுகதை
    • குறிப்பு
    • நனவிடை
    • பயணம்
    • பிரதிகள்
  • விமர்சனங்கள்
    • அஷேரா
    • ஆதிரை
    • ஆறா வடு
  • நேர்காணல்
  • ஒளிப்படம்
  • காணொளி

ஒளிப்படம்

Follow on Instagram

ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது.
-எழுத்தாளர் ஜெயமோகன்

ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.
-எழுத்தாளர் சு. வேணுகோபால்

ஈழத்தில் பல அற்புதமான கதைகள் இருக்கின்றன. சயந்தனுடைய `ஆறாவடு’ நாவல் திரைப்படமாக்குவதற்கான எல்லாத் தன்மைகளோடும் இருக்கிறது.
-இயக்குனர் வசந்தபாலன்

தமிழீழத் தாயகத்தையே கனவாகக் கொண்டு, குழுக் குழுவாகச் சிதைந்து ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டு மண்ணை ரத்தக்களறியாக்கிய ஈழத்து அரசியலை அஷேரா நாவலின் உள்ளீடாக வைத்துப்பேசுகிறார் சயந்தன். ‘ஆறாவடு’, ‘ஆதிரை’ வரிசையில் ‘அஷேரா’வும் கவனத்தில் இருக்கும் முக்கிய நாவல்!
-ஆனந்த விகடன்

எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்.
- எழுத்தாளர் ஷோபா சக்தி

நாவல் வடிவமும் சரி, நாவலானது வாசகருக்குக் கடத்த வேண்டிய உணர்ச்சியின் உக்கிரமும் சரி... இரண்டுமே சயந்தனுக்கு நன்றாகக் கைவரப்பெற்றிருக்கின்றன. இலங்கையில் நடைபெற்ற போர் அங்குள்ள தமிழ் மக்களின் வாழ்க்கையை எப்படிச் சின்னாபின்னப்படுத்தியது என்பதன் அழுத்தமான இலக்கியப் பதிவுகளாக சயந்தனின் படைப்புகள் இருக்கின்றன.
-தி இந்து

Powered by WordPress | Theme: Write by Themegraphy