மகாப் பிரபுக்கள்

Smoke

கனகுராசா கக்கூசுக்குப் போகிற வழியில், கையில் வைத்திருந்த தண்ணீர் வாளி முழுவதுமாகத் துருப்பிடித்திருந்தது. அதன் ஓரங்களிலும் உள்ளேயும் பாசி பரவி பச்சைக் கலரிலிருந்தது. அவர் வெறும் மேலுடன் நின்றார். பழைய சவுதி சாரமொன்றை துாக்கிக் கட்டியிருந்தார். கக்கூசு வீட்டின் கொல்லைப் புறத்திலிருந்தது. பழைய காலக் கக்கூசு, யாழ்ப்பாணத்திற்கு கக்கூசுக் கலாச்சாரம் வந்தபோது அவரது ஐயா ஊரில் முதலாவதாகக் கட்டிய கக்கூசு அது. கிணற்றடியில் இருந்து இத்தனை முழத்திற்கு அப்பால் இருக்க வேண்டுமென சுகாதார அலுவலர்கள் அப்போது அறிவுறுத்தினார்கள். அருகாக இருந்தால் தண்ணீரில் மலக்கிருமிகள் பரவுமாம். கனகுராசரின் ஐயா அதற்கேற்ப பின்கோடியின் மூலையில் அதனைக் கட்டினார். அதற்குப் பின்புறத்தே வேலியிருந்தது. வேலிக்கு அப்பால் விநாசித்தம்பியின் வீட்டுக் கிணறு … [Read more...]

சின்ராசு மாமா – சிறுகதை

sintasu

2009 இல் சின்ராசு மாமா என்கின்ற துரோகியென்றொரு குறிப்பினை எழுதியிருந்தேன். குறிப்புத்தான் அது. எப்பிடியோ கதையாகி விட்டிருந்தது. அந்தப் பெயரில் தொகுப்பிற்கான அலுவல்களும் நடந்தன. அப்பொழுதே அக்குறிப்பினை விரித்து எழுத வேண்டுமென்றிருந்தேன். இப்போதைக்கே கூடி வந்திருக்கிறது. தொகுப்பிற்காக திரட்டப்பட்ட எல்லாக் கதைகளையும் மீளத்திருத்தியெழுதுகிறேன். ஒரு பயிற்சியாக இருக்கட்டும். வசந்தகுமார் அண்ணனுக்கு நன்றி சின்ராசு மாமாவின் சட்டைப் பையினில் எப்போதுமிருக்கிற பீடிக் கட்டு அல்லது சுருட்டு அல்லது ஒற்றைச் சிகரெட் முதலானவற்றைப் பார்த்து அவரது தொழில் நிலவரத்தைச் சொல்லுகிற ட்ரிக்ஸ் எனக்குத் தெரிந்திருந்தது. “மாமோய், கடலம்மா இண்டைக்கு பார்த்துப் பாராமல் அள்ளித் தந்திருக்கிறா போல” என்றால் அன்றைக்கு ஒரு முழுச் சிகரெட் பெட்டி சின்ராசு … [Read more...]

முதல் விமர்சனம்

SONY DSC

விமர்சனங்கள் அவை எவ்வகைப்பட்டவையாக இருப்பினும், படைப்பாளியை ஒரு வித கிளர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்லுமெனச் சொன்னார்கள். அது உண்மைதான். அண்மைக் காலமாக நான் அதனை அனுபவித்தேன். ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்னால் ஒரு விமர்சனத்தை நான் பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்தேன். எனது சிறுகதையொன்றிற்கான விமர்சனமது. (அர்த்தம் சிறுகதைத் தொகுப்பிற்கானது அல்ல. அதனை யாரும் கண்டுகொள்ளவில்லையென்பதே காலம் எனக்களித்த கருணை:) புடுங்கியிருக்கிறது என்ற சிறுகதையொன்றிற்காக கருணாகரன் அண்ணன் இந்த விமர்சனக் குறிப்பை 2009 ஓகஸ்டில் அனுப்பியிருந்தார். அவரது கையெழுத்தில் ஸ்கான் செய்யப்பட்ட பிரதியாக அது எனக்குக் கிடைத்தது. எனக்கான முதல் விமர்சனமாக அமைந்ததினால் மட்டுமன்றி - அப்போது அவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடாதபடி முகாம் வாழ்க்கையில் அவரது காலம் … [Read more...]

புரட்சீ

test

April-24-2008 From Web Archive கிளர்ந்தெழுந்த வெட்கத்தின் படரலை என் முகத்தில் யாரும் கண்டுணர முடியாது. நான் நடந்து கொண்டிருந்தேன். மூடப்பட்டிருந்த பெருவீதியில் விதைத்திருந்த சன நெரிசலுக்குள் என்னை நுழைத்து நுழைத்து வெளிவருவது எரிச்சலைத் தந்தது. எங்காவது, இருப்பதற்குரிய வாய்ப்புக்களை மறுத்து நெரிசல் இரு திசைகளிலும் இயங்கிக் கொண்டிருந்தது. எரிச்சலும், கோபமும் இருவேறு உணர்ச்சிகளா அல்லது ஒருமித்தவையா எனத் தெரியவில்லை. ஆனால் அவையிரண்டும் முகத்தில் பரவத்தொடங்கியிருந்ததை நான் அறிந்தேன். என் எதிர்ப்படுவோருக்கு நான் கோபமுற்றிருக்கின்றேன் என்பது தெரியலாம். ஆனால் எனக்குள் விரவிக் கிடக்கும் வெட்கத்தை அவர்கள் அறிவார்களா ? அறியக் கூடாதென்பதை நான் விரும்பினேன். வெட்கம், கோபம், எரிச்சல் என வெவ்வேறு உணர்வுத் திரள்களை புகையாக்கித் திரட்டி, … [Read more...]