தனியே தன்னந்தனியே :)

வெளியே போகும் வரும் போதுகளில் ச்சும்மா ஐபோன் கொண்டு கிளிக்குவதுண்டு. இந்த முறை போட்டியின் தலைப்பில் அமைந்த (என நான் நினைக்கும்) ஒரு படம் இது - என்ன சோகத்திலோ அமர்ந்திருக்கின்றார் பூனையார். … [Read more...]

பூவைப் போல புன்னகை காட்டு – புலிகளின் பாடல்

நேற்று யூ ரியுப்பில் மேய்ந்து கொண்டிருந்த போது இந்தப் பாடலை பார்க்கக் கிடைத்தது. ஒவ்வொரு பூக்களுமே பாடலை நினைவுபடுத்துகின்ற தன்னம்பிக்கைப் பாடலை பகிர்ந்து கொள்ள வேண்டும் போலிருந்தது. காட்சி முழுவதும் பெண்போராளிகள் பங்கு பற்றியிருக்கிறார்கள். பாடலை அனுராதா சிறிராம் பாடியிருக்கிறார். இசை வழங்கியிருப்பவர் போராளி இசைப்பிரியன். அண்மையில் இசைபிரியனின் செவ்வியொன்றினைக் காணக்கிடைத்தது. அதில் இசையை இந்தியாவிற்கு அனுப்பி அங்கிருந்து குரல்களைப் பெற்று கலவைசெய்து பாடல்களை வெளியிட முடிகிறதென அவர் சொன்னார். அவர் இசையமைத்த விடுதலை மூச்சுத் திரைப்படத்தில் பாடகர் திப்புவின் பாடலும் இடம் பெற்றிருந்தது. … [Read more...]

பின்னவீனத்துவம் – புரிதலுக்கான உரையாடல்

ஏற்கனவே ஒரு தடவை கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு முன்னர் பதிவுலகில் பின்னவீனத்துவம் குறித்த உரையாடல்கள் நடந்த போது எனக்கும் வசந்தனுக்குமான இந்த உரையாடலை வசந்தன் தனது பதிவில் வெளியிட்டிருந்தார்.அடுத்த ஒருவருடத்தில் அந்த உரையாடலை மீளவும் வெளியிடுவதில் மகிழ்வடைகிறேன் :)முதற்பதிப்பு Friday, February 23, 2007இரண்டாம் பதிப்பு இன்று :) … [Read more...]

இது ஒப்பாரி அல்ல – நினைவு 1

புனைவுகளில் கற்பனை கலந்திருக்குமா என்பது குறித்து எனக்குத் தெரியாது. இந்த 86 களிலிருந்து என்பது எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து நான் நேரடியாகத் தொடர்புற்றிருந்த சம்பவங்களின் பதிவு. இவை அனைத்திலும் மகனாக நண்பனாக வழிப்போக்கனாக வாய் பார்த்தவனாக செய்தி கேட்டவனாக நான் ஏதோ விதத்தில் உள்ளிருப்பேன். டப் என்ற சத்தத்தில் கிணற்றிற்குள்ளிருந்து கேட்குமாப்போல் ஒரு சத்தம் அம்மாவிற்கும் அம்மம்மாவிற்கும் கேட்டிருக்கக் கூடும். எந்தவித அதிர்வினையும் பய உணர்ச்சியினையும் தராத அச்சத்தம் குறித்து அவர்கள் ஒரு சில நிமிசத்துளிகள் அசட்டையீனமாக இருந்திருக்கலாம். அல்லது அவ்வாறெதுவும் கேட்காத அளவில் நித்திரையிலும் இருந்திருக்கலாம்.ஆனால் தொடர்ந்தெழுந்த மிரட்டும் இரைச்சலும் இரைச்சலின் ஆர்முடுகலும் அவர்களை … [Read more...]