• Home
  • Me

சயந்தன்

  • நேர்காணல்
  • வாழ்வு
  • அரசியல்
  • சினிமா
  • குறிப்பு
  • சிறுகதை
  • அரசியல்
  • பயணம்

சுரேஷ் பிரதீப்

April 11, 2018 by சயந்தன் Leave a Comment

பல நூற்றாண்டுகளாக போரினைக் கண்டிராத நிலத்தின் குழந்தைகள் கூட போர் குறித்த மனச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளாமல் தங்களுடைய குழந்தைமையைக் கடந்து இளமையை அடைவதில்லை. கதைகளாக விளையாட்டுகளாக திரைப்படங்களாக போரினை கற்பனித்த அனுபவம் நம் அனைவருக்குமே இருக்கும். நம் கற்பனை செய்யும் போரில் வெற்றியும் தோல்வியும் இருந்திருக்கும். தொழில்நுட்பங்களும் சாகசங்களும் மரணங்களும் இருந்திருக்கும். ஆனால் அப்போர்  தொடங்கி  முடிவடைந்திருக்கும். போருக்கு முன்பான தயாரிப்புகளையோ போருக்குப் பிந்தைய நிலைகளையோ நாம் கற்பனை செய்திருக்கமாட்டோம். போர் களங்களில் மட்டும் நடப்பதாக எண்ணிக் கொண்டு இருந்திருப்போம். போரும் வாழ்வும் நாவலைப் படித்தபோது போர் குறித்த இத்தகைய மனச்சித்திரங்கள் கலையத் தொடங்கின. போர் வேறு வகையானதாக முன் ஊகங்களுக்கு வாய்ப்பற்றதாக தென்படத் தொடங்கியது. ஆனால் அந்த நாவலிலும் களம் என்ற ஒன்று உண்டு. அதில்தான் போர் நிகழ்கிறது. ஒரு வகையில் ஒரு கழுகினைப் போல உச்சி மரக்கிளையில் அமர்ந்து கொண்டும் அவ்வப்போது களத்தில் ஊடுருவிப் பறந்தும் அப்போரினை நாம் காண டால்ஸ்டாய் நம்மை அனுமதிக்கிறார். ஆனால் சயந்தனின் ஆதிரை நாவலில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெறுகிறது. ஆனால் சயந்தன் நம்மை எக்களத்துக்கும் கூட்டிச் செல்லவில்லை. பிரம்மாண்டமான படை நகர்வுகளும் வியூக வகுப்புகளும் உணர்ச்சிகரமான உரைகளும் கூர்மையான தத்துவ விவாதங்களும் இந்த நாவலில் இல்லை. ஆனால் ஒரு போரின் நடுவே வாழ நேரும் மனிதர்கள் சந்திக்க நேரும் திகிலையும் வெறுமையையும்  நாவல் கொடுப்பதே இதன் முதன்மையான வெற்றி எனச்சொல்லலாம். ஒரு எதார்த்தவாத செவ்வியல் படைப்பு தமிழில் எழுதப்பட்ட முன்னோடி எதார்த்தவாதப் படைப்புகளின்(ஆழிசூல் உலகு,மணற்கடிகை) அதே வகையான நேரடிக் கதைகூறல் முறையையும் நுணுக்கமான தகவல் விவரணைகளையும் கொண்ட புனைவாக ஆதிரை தன்னை வகுத்துக் கொள்கிறது. நாற்பதாண்டு காலம் மூன்று தலைமுறை மனிதர்களின் வாழ்வினை வலுவாகச் சித்தரித்துச் செல்கிறது. அந்த சித்தரிப்பினூடாக ஒரு பெரும் போரினை சென்ற நூற்றாண்டில் தொடங்கி இந்த நூற்றாண்டு வரைத் தொடர்ந்த ஒரு பேரழிவினை ஆதிரை விரித்துக் காட்டியிருப்பதே இதனை முதன்மைப் புனைவாக மாற்றியிருக்கிறது. ஈழம் குறித்து தமிழகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் கொந்தளிப்பான சித்திரம் உண்மையில் இலங்கையில் நடந்தவற்றை அறிந்து … [Read more...]

இனியன்

April 11, 2018 by சயந்தன் Leave a Comment

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பாகக் கோத்தகிரியில் குழந்தைகள் நிகழ்விற்காகத் தங்கியிருந்த போது புத்தகம் ஒன்றை வாசிக்க எடுத்துத் துவங்கி, முதல் பத்தியினைப் படித்துவிட்டு இத்தனை வலிகள் மிகுந்த எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்தால் நிச்சயம் நிகழ்விழும் பயணத்திலும் ஈடுபாடுச் செலுத்திட முடியாது என்பதால் மூடி வைத்து விட்டுத் தொடவேயில்லை. பிறகு மீண்டும் சென்னை வந்த பிறகு எவ்வளவு விரைவாக முடித்திட வேண்டுமோ அவ்வளவு விரைவாக முடித்திட வேண்டும் என்கிற முனைப்பில் துவங்கினால் சில பக்கங்களைக் கடந்திட முடியாமல் அப்படியே போட்டுவிட்டு அழுதும் அமைதியாய் இருந்தும் உணர்வுகளைக் கடந்து மெதுமெதுவாய் இருதினங்களுக்கு முந்தைய நள்ளிரவில் முழுவதுமாக முடித்தேன் அந்த 664 பக்க நாவலை. ஏற்கனவே பலமுறை பலயிடங்களில் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் வார்த்தைகள் தான் என்றாலும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டிய தேவை இருக்கிறது. “2௦ம் நூற்றாண்டில் இரண்டாம் உலகப்போர்கள் சார்ந்த இலக்கியங்கள் உலகளவில் பெரும் தாக்கத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தின. அவற்றையெல்லாம் விட மிஞ்சி நிற்கப் போவது 21ம் நூற்றாண்டில் படைக்கப்பட்டுக் கொடிருக்கக் கூடிய ஈழத்து இலக்கியங்கள் தான். அதுவும் முதல் 3௦ வருடங்கள் மட்டுமே. அதன் பிறகு வரிசையில் ஈராக், சிரியா, ரோஹிங்கியா என வரிசையில் காத்துக் கிடக்கின்றன.” அந்த வகையில் கவனிக்கப்பட வேண்டிய ஈழத்து இலக்கிய வரிசையில் முக்கிய இடம் பிடித்திருப்பது சயந்தனின் ஆதிரை. 1977 நிகழ்த்தப்பட்ட இனகலவரத்தில் பாதிப்புகுள்ளானக் குடும்பம் ஒன்று ஈழத்தில் புலம் பெயர்வதில் துவங்குகிற கதைகளம். 2009 இன அழிப்பைக் கடந்து 2015 மக்களின் பன்பாட்டு அடையாள அழிப்பு என்கிற பெருந்துயர்மிகுப் பயணத்தில் வந்து முடிகிறது. முப்பது ஆண்டுகால இப்பெரும் பயணத்தில் ஒரு நிலபரப்பின் பன்முகத்தன்மை, இயற்கை வளம், காடு, கடல், மக்களின் இனவேற்றுமை, சாதிய ஒடுக்குதல்கள், வர்க்க முரண்கள், இனக்கலவரங்கள், போராட்டம், போராட்ட வாழ்வியலின் உள்முரண்கள், சிதைவுகள், நம்பிக்கைகள் துரோகங்கள், வலிகள், விமர்சனங்கள், வதைமுகாம்கள், அடையாள அழிப்பு எனப் பலவற்றைப் பதிவு செய்திருக்கிறது புத்தகம். சமகால ஈழத்துப் படைப்புகள் வாசிக்கிற போது புலிகளுக்கான ஆதரவு நிலைப்பாடு அல்லது எதிர் நிலைப்பாடு என்கிற அரசியல் புள்ளிகளில் இருந்து மட்டுமே எழுதப் … [Read more...]

ஜிஃப்ரி ஹாஸன்

April 11, 2018 by சயந்தன் Leave a Comment

ஈழப் போர் முடிவுக்கு வந்ததன் பின் போராட்டமும் தமிழர் வாழ்வும் பற்றி பல நாவல்கள் வெளிவந்து விட்டன. ஷோபா சக்தியின் BOX கதைப்புத்தகம், குணா கவியழகனின் விடமேறிய கனவு, சாத்திரியின் ஆயுத எழுத்து, சயந்தனின் ஆதிரை போன்றன இந்தவகையில் குறிப்பிடத்தக்க நாவல்கள். ஆதிரை வடபுல சாமான்ய தமிழ்ச்சனங்களினது வாழ்வு ஈழப்போரால் எப்படிச் சிதைந்தது என்பதை மிக அழுத்தமாக தனிமனிதர்கள், குடும்பங்கள், கிராமங்கள் என ஆழமாக ஊடுறுவி சரளமான புனைவு மொழியில் எடுத்துக் கூறுகிறது.  மலையக மக்களினதும் ஒரு குறிப்பிட்ட காலகட்ட அவலம் சிதைந்த சித்திரமாக நாவலுக்குள் ஊடுறுவிச் செல்கிறது. வடபுல எழுத்தாளர்களின் ஈழப் போராட்ட நாவல்களில் போராட்டத் தீயின் கொடு நாக்கு எப்படி அப்பாவி மலையகச் சனங்களையும் தீண்டியது என்பதை மனச்சாட்சியோடு இந்நாவல்தான் பதிவு செய்கிறது. 1983 இனப்படுகொலையில் மலையகத் தமிழ் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். அது பற்றி முழுமையாகப் பதிவுசெய்யும் ஒரு மலையக நாவலே தெளிவத்தை ஜோசப்பின் நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983. அதைத் தவிர்த்து இலங்கை இனப் பிரச்சினையின் மலையகப் பரிமாணம் பற்றி பேசும் மலையகத்துக்கு வெளியிலிருந்து வந்த நாவலென்றால் அது ஆதிரைதான். ஈழப் போராட்ட கால வரலாற்று நாவல் என்ற வகையில் சயந்தன் பாதிக்கப்பட்ட எல்லாத் தரப்பாருக்கும் நாவலில் முகமும், குரலும் வழங்கி இருக்கிறார். புலிகளின் போராட்டம் குறித்து சனங்களுக்குள்ளிருந்து எழுந்த மாற்றுக் குரல்களுக்கும் ஒரு இடம் வழங்குகிறார். சந்திரா போன்ற கதாபாத்திரங்கள் இத்தகைய மாற்றுக் கருத்துகளுக்கான குரலை உயர்த்துகின்றனர். பாரபட்சமற்றவனாக ஒரு வரலாற்றாசிரியன் இருக்க வேண்டும். வரலாற்றுப் புனைவை எழுதும் ஒரு படைப்பாளியும் பாரபட்சத்திலிருந்து விடுபட்டவனாகவே இருக்க வேண்டும். முஸ்லிம் ஊர்காவல் படை பற்றிய அணுக்கமான வரலாற்றுப் புரிதல் சயந்தனிடம் இல்லாமல் இருப்பதனால் அதை அவர் நாவலில் தவிர்த்திருக்கலாம். ஆயினும் அது ஒரு பெரிய விசயமாக நாவலில் இடம்பெறுவதுமில்லைதான். தமிழ் (இந்து) சமூக அமைப்பில் “அனைவரும் சமமே“ என்ற கோட்பாடு இல்லை. சாதிரீதியாக பிளவுண்ட சமூக அமைப்பையே தமிழ்ச் சமூகம் கொண்டுள்ளது. அது மிகத் தீவிரமானது. சாதியை முன்னிறுத்தி தங்களை மிகத் தீவிரமாக கூறுபடுத்திக்கொண்டது. அது சமூகத்தில் தாழ்ந்த சாதி மட்டத்தில் இருப்பவர்களைத் தீண்டத் … [Read more...]

ஆதிரை – ஆதிலட்சுமி சிவகுமார்

December 1, 2017 by சயந்தன் Leave a Comment

1977 தொடக்கம் 2009 வரையான காலத்தை பேசும் ஒரு நாவல். விமர்சனம் அல்லது கருத்துரை என்பதற்கு அப்பால் சயந்தனின் இந்த ஆர்வம் அல்லது முயற்சியை வரவேற்பதுடன் பாராட்டியும் ஆகவேண்டிய கடமை எனக்கு உண்டு என நினைக்கின்றேன். மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் சயந்தன். படைப்பியற்றுறையில் சயந்தன் தனித்துவமான ஒரு கதைசொல்லியாக தன்னை அடையாளப்படுத்தியிருப்பதுடன், நிறுவியுமிருக்கின்றார். ஆதிரைக்கு முன்பதாகவே இதனை அவர் நிறுவியிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. நாடற்றஒருவன் சிறையில் அனுபவிக்கும் மிகக்கொடூரமான சித்திரவதைகளுடன் நாவல் ஆரம்பிக்கிறது. “லெட்சுமணன்” இனத்துவேசத்தால் கொல்லப்பட்ட, மற்றும் இன்னமும் சிறைகளில் வதைபடும் தமிழ் இளைஞர்களின் ஒரு குறியீடாகவே தெரிகிறான். மிகநீண்ட இடைவெளிக்கு பிறகு மலையக தமிழ்மக்களின் பிரச்சினைகளை வெளிப்படையாக பேசுகின்ற ஒரு படைப்பாகவும் ஆதிரை உள்ளது. கண்டுகொள்ளப்படுவதில் பின்தள்ளப்படுகின்ற மக்களைப்பற்றி பேசும் ஆற்றல் வரவேற்கத்தக்கது. தன்னுடைய நறுக்கென்ற உரையாடல்கள் மூலமாக படிப்பவர்கள்நெஞ்சில் ஆணிஅறைந்துவிடுகிறார் சயந்தன். உதாரணமாக, (பக்கம் 28, 29 ல்வரும் உரையாடல்) “யாருக்கு தனிநாடு கேக்கிறாங்க? “ “தமிழங்களுக்கு தான்” “நமக்குமா..” இது மலையகத்தில் வாழ்ந்த தமிழனின் கேள்வி. இந்தக்கேள்விக்குள் தொங்கிநிற்கும் அரசியல் மிகப்பெரியது. இதனை நாசூக்காக வெளிப்படுத்தும் சிறப்பு சயந்தனுக்குரியது. மலைநாட்டிலிருந்து அன்று ஏதிலிகளாக வந்தவர்கள் பட்ட துன்பதுயரங்கள், அவர்கள்மீது பிரயோகிக்கப்பட்;ட அடக்குமுறைகள் மற்றும் மனவடுக்கள்,  மிக கச்சிதமாக செதுக்கப்பட்டிருக்கின்றன. நானும் பல ஆண்டுகாலம் இவர்கள் மத்தியில் ஒன்றாகவாழ்ந்து, இவர்களின் துன்பதுயரங்களில் பங்கெடுத்திருக்கின்றேன். ஆனால் ஒரு காலத்தில் இருந்த இந்த ஒடுக்குமுறைகள் படிப்படியாக குறைந்துசென்றிருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது என்பதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். இதற்கு நாவலிலேயே எடுத்துக்காட்டு உள்ளது. (பக்கம் 83) மூத்ததலைமுறையான இராசமணி “ வேலைக்காரப் பெடியன்…ஒருயோசினை இல்லாமல் தன்ர வீடுமாதிரி வாறான் போறான்…..” என கேட்க, “ஆர் வேலைக்காரப் பெடி…” என்ற அடுத்த தலைமுறைச் சந்திராவின் கேள்வி தான் சேகரித்த அல்லது அறிந்த தகவல்களை திரட்டி ஒழுங்குபடுத்தி வரலாற்று நாவல் ஆக்கியிருக்கிறார் … [Read more...]

Next Page »
  • Email
  • Facebook
  • Google+
  • Instagram
  • RSS
  • Twitter
  • YouTube

வாசிப்பில்

ஆதிரை நாவல் இணையத்தில் வாங்க

  • Discovery Book Palace
  • We can shopping
  • உடுமலை
  • கலப்பை
  • பாரதி புத்தகாலயம்

ஆதிரை விமர்சனக் குறிப்புக்கள்

  • சுரேஷ் பிரதீப்
  • இனியன்
  • ஜிஃப்ரி ஹாஸன்
  • ஆதிலட்சுமி சிவகுமார்
  • மருது
  • ப்ரகாஷ் சிவா
  • கருப்பையா பெருமாள்
  • மணிமாறன்
  • ராஜசுந்தர ராஜன்
  • முருகபூபதி
  • கோணங்கி
  • மங்கை செல்வம்
  • ஹரி ராசலெட்சுமி
  • புருஜோத்தமன் தங்கமயில்
  • டிசே தமிழன்
  • ஆதவன் தீட்சண்யா
  • அமல்ராஜ் பிரான்சிஸ்
  • பாதசாரி
  • தமிழ்நதி
  • அ.இரவி (பொங்குதமிழ்)
  • யூட் ப்ரகாஷ்
  • தேவிகா கங்காதரன்
  • மலைநாடான்
  • தீபன் சிவபாலன்
  • எஸ்.வாசன்
  • இரவி அருணாசலம்
  • ஜேகே
  • நடராஜா வாமபாகன்
  • லவநீதன் ஜெயராஜ்
  • சுகன்
  • மீரா பாரதி
  • ப.ரவி
  • தமிழ்கவி
  • ரேவதி யோகலிங்கம்
  • யதார்த்தன்
  • கோகுல் பிரசாத்
  • இளங்கோ கல்லணை
  • சுதாகர் சாய்
  • சுரேகா பரம்
  • அனோஜன் பாலகிருஷ்ணன்
  • கெளதமி

ஆதிரை உரையாடற் காணொளிகள்

  • வைதேகி
  • அசுரா
  • காலம் செல்வம்
  • ப.ரவி
  • சித்திராதரன்
  • குமாரதேவன்
  • கிரிசாந்
  • கருணாகரன்
  • தமிழ்க்கவி
  • நிலாந்தன்
  • யோகா மாஸ்டர்
  • நிலா மாணிக்கவாசகர்
  • லண்டன் உரையாடல்
  • மாதவி சிவலீலன்
  • தோழர் வேலு
  • அ.இரவி
  • பௌசர்

ஆறாவடு விமர்சனத் தொகுப்பு

  • முகப்புத்தகக் குறிப்புக்கள்
  • விமர்சனப் பதிவுகள்
  • விமர்சனக் காணொளிகள்

Recent Posts

  • சுரேஷ் பிரதீப்
  • இனியன்
  • ஜிஃப்ரி ஹாஸன்
  • ஆதிரை – ஆதிலட்சுமி சிவகுமார்
  • கயல்விழி – தமிழரசி – சந்திரிகா
  • புத்தா.. அல்லது ஆதிரையின் முதலாம் அத்தியாயம்
  • மருது
  • ப்ரகாஷ் சிவா
  • ஈழத்துஇலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு கரிசனை உள்ளதா? – நேர்காணல்
  • காஸா! படுகொலை நாட்களின் குறிப்புகள்

Archives

Copyright © 2018 · Magazine Pro Theme on Genesis Framework · WordPress · Log in