ஆறா வடு – அருண்மொழி வர்மன்

நண்பர் சயந்தனின் ஆறாவடு நாவலை ஒரே நாவலில் வாசித்து முடித்தேன்.  எனக்குத் தெரிந்து எமது தலைமுறையச் சேர்ந்த ஈழத்தைச் சேர்ந்தவரிடம் இருந்து வந்திருக்கும் முதலாவது நாவல்.  நான் வாழ்ந்த சூழல், நாட்களை மீளவும் நினைவுக்குக் கொண்டுவந்திருக்கின்ற நாவல்.  எனக்கு மிகவும் பிடித்தும் இருக்கின்றது, வாழ்த்துக்கள்

புத்தகத்தின் பக்கங்கள் சற்றே பளுப்பேறிய வெள்ளையாக இருக்கின்றது, எழுத்துக்கள் கறுப்பில் இருக்கின்றன, அட்டை நீல நிறத்தில் இருக்கின்றது, நாவலின் ஓரிடத்தில் மஞ்சள் சிவப்பு நிற முக்கோண வடிவக் கொடிகள் பற்றிக் கூறப்படுகின்றது.  இதை கறுப்பு, வெள்ளை, சாம்பல் என்று எப்படி வகைப்படுத்துகின்றனரோ தெரியாது ;((