அஷேரா! பத்திரப்படுத்திய புத்தகம் – சவீதா சேந்தன்

அஷேரா… பெயரைக் கேட்டதும் ஏதோ சுவிட்சர்லாந்து பெண் தெய்வமோ? வரலாறு சம்பந்தப்பட்ட கதை என்றுதான் வாசிக்கத் தொடங்கினேன். அருள்குமரன்….எங்களில் ஒருவன்.. கூடவே 90களில் வாழ்ந்த யாழ்ப்பாணத்து இளைஞன்….நாவல் முழுவதும் அவனுடன் கூடவே பயணித்தேன்… அவன் அம்மா “ அப்பன் அம்மாவை பிழையாக நினைக்க கூடாதென்ற “ இடத்தில் நெஞ்சடைத்துப்போனேன்.

அமலி அக்கா… எரிச்சலை ஏற்படுத்திய ஒரு கதாபாத்திரம்… உண்மைகள் கசப்பானவைதானே… என்னைப்பொறுத்தவரை ஒரு சிறுவனின் உணர்வுகளோடு விளையாடிய ……. அவ்வளவுதான்.

ஆராதனாக்களை எல்லா இளைஞர்களும் சந்திப்பதில்லை. சந்திப்பவரகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பேன்.

குமரனுடன் கூடவே இந்தியாக்கு பயணித்தேன். மண்டபம் முகாமின் சுயங்கள் மனதை வலிக்கச் செய்கின்றன். குமரன் அங்கிருந்து புறப்பட மனது சமாதானமானது. அவந்தி… கடைசியில் காலை வாரிட்டா… அபர்ணா ஆறுதலா இருந்தாலும் கடைசியில ..அடப்போம்மா…அற்புதத்தார்… அற்புதத்தார்தான். இதையெல்லாம் தவிர்த்து நகைச்சுவை அருமை… இன்னும் நினைத்து ரசித்துச் சிரிக்கிறேன்.

இது எங்களில் ஒருவனின் ஒருத்தியின் கதைதான். நிஜங்களை நிஜங்களாக காட்டியிருக்கிறீங்கள். ஆனாலும் ஆனாலும் எங்கோ ஏதோ என்னை மௌனியாக்குகிறது… பிணைக்கப்பட்டிருக்கும் என் கைகளை உயர்த்தி தட்ட முடியவில்லை.

உங்களின் முடிவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. நான் கற்பனையில் குமரனுக்கு விசா வாங்கிக் கொடுத்தேன்.. பின்ப ஆராதனாவை sponser செய்து சந்தோஷமாக வாழ வைத்தேன்… வாழ்ந்திட்டுப் போகட்டுமே… பாவம் குமரன் எவ்வளவு கஷ்டப்பட்டான்.

ஒரு சாதாரணப் பெண்ணின் மனநிலையோடு இதை எழுதுகிறேன். புத்தகங்களை நேசிக்கும் ஒருத்தியின் கைப்பிரதி இது.எங்களின் வாழ்க்கை இவ்வளவுதானே…

மனசார நன்றியுடன் பாராட்டுகிறேன். இந்தப்பதிவுகள் காலம் சென்றும் அடுத்த தலைமுறைக்கும் நிஜங்களை கடத்தும். என் குழந்தைகளுக்காக பத்திரப்படுத்திய புத்தகங்களில் ஒன்றானது அஷேரா…

ஒன்று கேட்கட்டுமா? யாழ்ப்பாணத்து பெடியள் இவ்வளவு கெட்ட வார்த்தை பேசுவார்களா? என்னைச்சேர்ந்தவர்கள் என் முன் பேசி சத்தியமாக கேட்டதே இல்லை. வயதானவர்கள்தான் பேசுவார்கள் என்று நினைத்திருந்தேன்…அதுதான் ஒரு நெருடல்…நன்றி