இளங்கோ கல்லணை

When we use the term classic, postmodern critics deconstruct by selecting class and use it in a nagative fashion. It is seldomn seen as a virtue for a good reader. Sayanthan Kathir’s novel Aathirai has been released from Tamizhini publishing house with the tag line classic. A less art minded postmodern reader tends to look for a political line than a sublime form of art. Aathirai framing three generations of war infected eezham has done justice to the artistic side or the tragic grandeur.

A self critical spectrum with deeper nuances pointed painting makes a classic out of the novel in the real classical sense. Aathirai is a by product of matriarchy Tamil mind where motherhood is the land, forest, war and society. Aathirai is also a mystical star of hope. This novel describes a systematic evolution of a genocide by a majoritiarian government of a forty year old despair where more than 190000 people had been killed. Is this tragedy bringing the cathartic effect? Well. the effect of tragedy has moved the pillars and posts. People are people. NO. That’s the difference between an art and a documentary.
As the mother goddess in a tree, star, carrying children she is also in the middle of a artillery waiting to explode herself for her children .

The illusory spine of otherwise manly image is here the war bitten mother. I hope I made my point why Aathirai is a classic. Read and verify yourself.

0 0 0

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழின் முக்கியமான படைப்பொன்றை வாசித்தேன். இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் ஆதிரை தமிழின் முக்கியப் படைப்பாளியான சயந்தனின் Sayanthan Kathir மேக்னம் ஓபஸ் என்று தான் சொல்ல வேண்டும். ஈழத்தின் முக்கியமான படைப்பாளியான சயந்தன் உலக தமிழ் இலக்கியத்தின் ஒரு உன்னதமான படைப்பு ஆதிரை.

ஈழத்துப் படைப்புகள் அரசியல் சிக்கல்களை சொல்வதாகவே இங்கு பரப்பப்பட்டு அவற்றின் தரத்தை குறைக்கும் ஒரு போக்கு எப்போதும் இங்குள்ளது. ஈழத்து எழுத்தாளர்கள் வெறும் பிரச்சாரம் செய்வார்கள், கலை நுணுக்கத்தோடு எழுத மாட்டார்கள் என்று அடித்துவிடும் ஆட்கள் உண்டு. ஈழத்தில் நடந்த இழப்பைப் பற்றிய அரசியல் படைப்புகள் நிறைய வந்துவிட்டன. அ. முத்துலிங்கம் மாதிரி முழுவதும் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட படைப்புகளும் வந்துள்ளன. சயந்தனின் ஆதிரை நாவலில் மலையகத் தமிழகம் துவங்கி வன்னிக் காட்டில் தனிக்கல்லடியில் இருந்து பேச்சித் தோட்டம் வந்தடையும் (அகதிகளாகத் தான்) கதை மாந்தர்களின் வாழ்க்கையை உயிர்ப்பாக சித்தரித்துள்ளார். இயக்கங்கள் அரசியல் எல்லாம் திரைக்குப் பின்னால் இருத்தி மனிதனின் வாழும் விளைவை இச்சையை காட்டும் பெரும் காப்பிய இலக்கணக் கட்டமைப்பு.

தமிழ் மரபில் தாய்மை வழியாக கதை சொல்லப்படுவது என்பது தான் அதன் தனித்துவம். தாய்மையைக் கொண்டு குழந்தைகளின் வாழ்க்கையை விளக்க பெரிய திரைச்சீலை ஒன்றில் வண்ணம் தீட்டியுள்ளார். துயர் படும் மக்களின் வாழ்க்கையில் காளியே என்று தான் ஏதிலிகள் கூப்பிட முடியும். வாங்க காந்தியே என்று கூப்பிட்டிருக்க வேண்டும் என்று சொல்கிற அறிவிலித் தனத்தை அவ்வப்போது காண்கிற போது வேதனையாக இருக்கும். நெருப்பில் தன் கண்ணுக்கு குழந்தையை முன்னால் பலி கொடுத்த ஒரு தாய் மனப் பிறழ்வை அடைகிறாள். வேறு குழந்தைகளை காணும் போது “ஒடி வாங்க, தீ கடலைப் போல கலைச்சுக் கொண்டு வருது ” என்று அணைக்க ஓடுகிறாள். கொடுங் கனவையும் பெரும் துயரையும் நம்பிக்கை கொண்டு மீண்டு வர நினைக்கும் மக்களின் வாழ்க்கை பற்றிய நீண்டதொரு பயணம். மூன்று காதல்கள் மூன்று பயணங்கள் என்று சொல்லலாம். மீண்டும் மீண்டும் தர்க்கத்தால் வாழ்க்கையை அளக்க நினைக்கும் அறிவு வேட்கையில் இருந்து விலகி இதயத்தின் வேட்கையான வாழ்க்கையைத் தேடும் ஒரு நாவல். எத்தனை இழப்புகளுக்குள்ளும் உயிர்கள் ஒண்டிக் கொண்டு இச்சைகளை வளர்த்துக் கொண்டு கைகளைப் பற்றிக் கொண்டு செல்லும் வாழ்க்கையைப் பற்றிய சித்தரிப்பு. ஒவ்வொரு தமிழரும் வாசிக்கத் தவற விடக் கூடாத புதினம். காரணம் நாம் நம்மை சோதித்துக் கொள்ள நிறைய இருக்கிறது.

0 0 0

ஈழத் தமிழ் நாவலில் ஒரு மைல்கல் என்று இந்த நாவலைச் சொல்லலாம். இதற்கு முன் ஆறாவடு எழுதிய சயந்தனின் முக்கியமான படைப்பு. தமிழ் படைப்புச் சூழலில் கதாபாத்திரங்களை சரியாக கட்டமைக்கும் நாவல்கள் மிகச் சிலவே. வெறும் சம்பவங்களைச் சொல்வதோ, தொன்மங்களை எழுதுவதோ, வரலாற்றை எழுதுவதோ நாவலாக இருக்க முடியாது. கதாபாத்திரங்கள் அந்த வரலாற்று சம்பவத்திலோ அல்லது தொன்மைத்திலோ பொருந்தி நின்று நம்மை உள்ளிழுக்க வேண்டும். ஆதிரையின் பலமே அது தான். 1983 இல் பிறக்கும் குழந்தைகளும் அதற்கு முந்தய பதின்ம வயதினரும் போரின் சூழல் வழியாக வாழ்ந்து முடிந்த கதை. அரசியல் இயக்கம், வரலாறு ஆகியவை பின் திரையில் வெறும் துணைக் கதாப்பாத்திரங்களாக மட்டுமே வருகின்றன. மனிதனின் உயிர் வாழும் இச்சையின் முன்னால் இலட்சியங்களின் பொருள் என்ன? முள்ளிவாய்க்காலும் அதன் பின்னரும் மக்கள் எதைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்?
பெருங்கனவுகளின் வீழ்ச்சியையும் மனிதன் தாங்கிக் கொண்டு மேலும் ஒரு நாள் வாழக் கிடைக்காதா என்று ஏங்கும் ஒரு தளம் இருக்கிறது. அது தான் அடிப்படையான இச்சை.

இரண்டு விசைகளே இந்த நாவலில் மோதிக் கொள்கின்றன. தாய்மையும் அரசியலும். தாய்மை தொடர்ந்து உயிர்களை ஓடி ஓடி அனைத்து காத்துக் கொள்ளும். அரசியல் லட்சிய தியாகங்களைக் கோரும். இரண்டின் நியாயங்களையும் ஈழத்தைப் போல சந்தித்த பிற தேசம் ஒன்று இல்லை. நாம் இலட்சியங்களையும் தாய்மையையும் தரிசிக்கும் ஒரு தருணமாக வானில் இருக்கும் ஆதிரை நட்சத்திரம் நமக்குக் காட்டுகிறது.