அஷேரா! காலங்கடந்தும் வாழவல்ல ஒரு படைப்பு – எஸ்.கே.விக்னேஸ்வரன்
எழுத்தாளர் சயந்தனின் ஐந்தாவது நூலும் மூன்றாவது நாவலுமாகிய அஷேராவை வாசித்துமுடித்த சூட்டோடு இந்தக் குறிப்பை எழுதும் சந்தர்ப்பம் வாய்த்தது ஒருவகையில் தற்செயலானதே. அவரது சிறுகதைத் தொகுப்பான அர்த்தம், நாவல்களான ஆறாவடு, ஆதிரை ஆகிய நூல்களை நான் ஏற்கனவே வாசித்திருந்த போதும், ஆறாவடு நாவலைத் தவிர, மற்றைய நூல்கள் பற்றி ஏதாவது குறிப்பை எழுதும் சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை. இப்போது, இந்த நூல் பற்றி. மீண்டும் கலைமுகத்தின் இதே பத்தியில் எழுதும் சந்தர்ப்பம் வந்தபோது முன்பு எழுதியது ஞாபகத்துக்கு […]